என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி நடிகை"

    • நடிகை தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார்

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா (வயது 20), திடீரென மரணம் அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    வசாய் பகுதியில் இன்று நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், மேக்கப் அறைக்கு சென்றார். பின்னர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது.

    நடிகை துனிஷா வரும் 4-ம் தேதி தனது 21-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இறந்த சம்பவம் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இன்று படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடப்படும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்ததார். அதுதான் அவர் வெளியிட்ட கடைசி பதிவாகும்.

    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
    • 1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த ‘உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

    பிரபல இந்தி நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் கவிதா சௌத்ரி போராடி வந்த நிலையில், தற்போது தன் 67ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    1989-ம் ஆண்டு கவிதா சௌத்ரி எழுதி இயக்கி, நடித்த 'உடான்' எனும் தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. கிரண்பேடிக்கு பிறகு இரண்டாவது பெண் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான அவரது கஞ்சன் சௌத்ரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது.

    இந்த சீரியலில், கல்யாண் சிங் எனும் கதாபாத்திரத்தில் போலீசாக நடித்த கவிதா, அக்கதாபாத்திரமாக வாழ்ந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் 90களின் பிரபலமான 'சர்ஃப் எக்ஸல்' விளம்பரங்களில் 'லலிதா ஜி' எனும் கதாபாத்திரத்திலும் தோன்றி, அன்றைய தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

    இந்நிலையில், கவிதா நேற்று பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள பார்வதி தேவி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • இந்தி நடிகை ரூபாலி கங்குலி 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வின் வர்மாவை திருமணம் செய்தார்.
    • எனது அப்பாவிற்கும் ரூபாலி கங்குலிக்கும் முறைகேடான முறையில் குழந்தை பிறந்ததாக மகள் குற்றச்சாட்டு.

    அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ரூபாலி கங்குலி. இவர் 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வின் வர்மாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2013 ஆம் ஆண்டே ருத்ரன்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

    அஷ்வின் வர்மா ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அஷ்வின் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சப்னா வர்மா என்ற பெண்ணை 1997ல் திருமணம் செய்தார். பின்னர் சப்னா வர்மாவை 2008 ஆம் ஆண்டு அஷ்வின் விவாகரத்து செய்தார்.

    அஷ்வினின் 2 ஆவது மனைவியின் இளைய மகளான ஈஷா வர்மா அவரது தந்தை குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    எனது தந்தை அஷ்வின் வர்மா என அம்மாவுடன் வாழ்ந்து வந்த காலகட்டத்திலேயே 12 ஆண்டுகள் ரூபாலியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக ஈஷா வர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பான அவரது பதிவில், "என் அம்மா ஒரு அழகான பெண். அவள் மனரீதியாக துன்புறுத்தப்பட்டாள். அவள் என் அப்பாவுக்கு தேவையான அணைத்து பணிவிடைகளையும் செய்தார். ஆனால் என் அம்மாவுடன் வாழ்ந்து வந்த காலகட்டத்திலேயே ரூபாலியுடன் என் அப்பா கள்ளத்தொடர்பில் இருந்தார்.

    2008 ஆம் ஆண்டு என் அம்மாவிடம் விவாகரத்து பத்திரத்தை கொடுத்துவிட்டு யாருக்கும் சொல்லாமல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு சென்று விட்டார்.

    பின்னர் எனது அப்பா பிப்ரவரி 6, 2013 அன்று ரூபாலியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 25, 2013 அன்று ருத்ரன்ஷ் பிறந்தார். எனது அப்பாவிற்கும் ரூபாலி கங்குலிக்கும் பிறந்த மகன் ருத்ரன்ஷ் முறைகேடான முறையில் பிறந்தவர். தங்களது மகன் குறைப் பிரசவத்தில் பிறந்து விட்டதாக அவர்கள் பொய் சொல்கிறார்கள். பிப்ரவரியில் திருமணம் செய்தவர்களுக்கு ஆகஸ்டில் குழந்தை பிறந்துள்ளது. நான் கூறுவதற்கான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது. எனக்கான நீதியை பெற நான் நிச்சயம் போராடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×