search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்"

    • அம்பேத்கர், பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தருமபுரி மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பாண்டியனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், கோஷங்கள் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்து, கோஷங்கள் எழுப்பியும் புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அறிவிப்பின் பெயரில் புதிதாக மண்டல செயலாளர் மற்றும் மண்டல துணை செயலாளர், மாவட்ட செயலாளர் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

    அந்த அறிவிப்பின்படி தருமபுரியை சார்ந்த பாண்டியன் மத்திய மாவட்ட செயலாளராகவும், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் அன்வர் கிருஷ்ணகிரி, தருமபுரி மண்டல செயலாளராகவும், மோகன் என்கிற தமிழ் வளவன் மண்டல துணை செயலாளராகவும் பொறுப்பு வழங்கி அறிவித்தார். இதன் அடிப்படையில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகிகள் தருமபுரி நகரில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தருமபுரி இந்தியன் வங்கி முன்பு இருந்து 4 ரோடு வழியாக ஊர்வலமாக சென்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர், பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் தர்மபுரி மத்திய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பாண்டியனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், கோஷங்கள் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • செல்வராஜ், குருசாமி, சதீஸ்குமார், கணகராஜ் ,முருகேசன், ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவினாசி:

    அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிதிநிறுவனத்தில் கடன் பெறும் வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டி வாங்குவதாகவும், வாங்கிய கடனை திருப்பி கட்டிய பிறகும் மீண்டும் தொகை வசூலித்து சட்டவிரோதமாக செயல்படுவதாக கூறி நிதி நிறுவனத்தின் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலதுணை பொது செயலாளர் துரை வளவன், சட்டமன்ற தொகுதி செயலாளர் ஏபிஆர்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தம்பி முருகானந்தம், நாடாளுமன்ற ஒன்றியசெயலாளர்கள் ராசவளவன், வெங்கடாசலம் ,ரங்கசாமி, செந்தில்குமார், செல்வராஜ், குருசாமி, சதீஸ்குமார், கணகராஜ் ,முருகேசன், ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவினாசி போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ×