search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் பயிற்சி"

    • ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
    • பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    சென்னை:

    பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு கடந்த நவம்பா் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, பொதுத்தோ்வு முடிந்த பிறகு 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்விமாவட்ட அளவில் மாா்ச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

    அதன்படி, ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்துக்கு 40 போ் வீதம் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை வசதி கொண்ட பள்ளிகளை மையங்களாகத் தோ்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும்.

    தினந்தோறும் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 4 பாடங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதுதவிர பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    வாரந்தோறும் சனிக் கிழமை திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்டு அதுகுறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அதற்குரிய கால அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மாலை 3.15 மணிக்கு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பிறகு அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
    • 2 மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.

    கோட்டா:

    மகாராஷ்டிர மாநிலம் லட்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அவீஷ்கர் சாம்பாஜி கஸ்லே. இவர் கடந்த 3 ஆண்டுகளாக நீட் இளநிலை மருத்துவ நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.

    இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்தார். தனது தாய்வழி தாத்தா, பாட்டியுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் அவீஷ்கர் பயிற்சி மையத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாலை 3.15 மணிக்கு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பிறகு அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவரின் உயிர் பிரிந்தது.

    அவீஷ்கர் தற்கொலை செய்து கொண்ட 4 மணி நேரத்தில் மற்றொரு நீட் பயிற்சி மாணவரான ஆதர்ஷ் ராஜ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    பீகாரை சேர்ந்த அவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் பயிற்சி மையத்தில் நேற்று மதியம் தேர்வு எழுதிவிட்டு திரும்பினார். இரவு 7 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். இவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே இறந்தார்.

    2 மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.

    கோட்டாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களும் 3 லட்சம் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி. மற்றும் ஜே.இ.இ. உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    • தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.
    • நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

    சென்னை:

    'பெல்லோ சிட்டிசன்' நிதியுதவியுடன் செயல்படும் ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 6 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

    சமூக சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும் இருக்கும் இளைஞர்களுக்கு அதற்குரிய பொருளாதார வசதி, பின்னணி இல்லாமல் இருப்பார்கள். அதுபோன்ற இளைஞர்களையும், சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களையும் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையில் 'தந்தி' டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து 'பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள்.

    அந்தவகையில், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும், பயிற்சி டாக்டரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன் என்பவர் 'பெல்லோ சிட்டிசன்' அமைப்பு மூலம் அடையாளம் காணப்பட்டார். அந்த தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஆற்றுப்படை அறக்கட்டளையை சேர்ந்த அரவிந்த் கார்த்திகேயன், அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் கடந்த ஆண்டில் 90 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் பங்கு பெற்றவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் 10 இடங்களில் வந்தனர்.

    அதேபோல், நடப்பு ஆண்டில் 80 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளில் 6 பேர் வெற்றி பெற்று, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கு பெற தகுதி பெற்றனர். அவர்களில் 5 பேர் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடங்களை பெற்று இருக்கின்றனர். அதன்படி, கே.துர்கா தேவி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியையும், ஹரிணிதேவி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியையும், ஆர்.இலக்கியா திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியையும், விமல்சுவார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியையும், விஷ்ணுபிரியா ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியையும் தேர்வு செய்து உள்ளனர்.

    இதுதவிர நீட் தேர்வில் 523 மதிப்பெண் பெற்ற கனிஷ்கா என்ற மாணவி பொதுப்பிரிவு கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்து, அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறார். இவர் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவி ஆவார்.

    ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் 2024-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கையும் முடிந்துவிட்டது. அவர்களுக்கான வகுப்புகள் விரைவில் தொடங்கி நடைபெற இருக்கின்றன.

    • நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
    • ஏழை மாணவ மாணவிகள் உதவும் வகையில் இந்த பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரி தகுதி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் இதற்கான துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். இளமுருகு வரவேற்றார். உடுமலை அரசு மருத்துவமனை டாக்டர் ஜோதிமணி, உடுமலை ரோட்டரி சங்க தலைவர் சத்தியம் பாபு உடுமலை கட்டுநர்வல்லுனர் சங்க தலைவர் ரவி ஆனந்த் ஆகியோர் பயிற்சி குறித்து பேசினர். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தான் படிக்கும் காலங்களில் போட்டி தேர்வுக்கு எப்படி தயாரானேன் என்பது குறித்து விளக்கி பேசினார். நிறைவாக லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் நன்றி கூறினார். ஏழை மாணவ மாணவிகள் உதவும் வகையில் இந்த நீட் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் நூலகம் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இது தவிர பள்ளி மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்கும் வகையில் ஞாயிறு தோறும் இலவச ஓவியம், சிலம்பம், பேச்சுப்போட்டி, யோகா ஆகியவற்றுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    • திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் வீதம் பயிற்சி பெறுகின்றனர்.
    • உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் பள்ளியில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    திருப்பூர்:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நவம்பர் 3-ம் வாரத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான (நீட்) பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இதற்காக பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பிளஸ் 1ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், பிளஸ் 1 மாணவர்கள் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் பள்ளியில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் வார நாட்களிலும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    மாவட்ட நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் வீதம் பயிற்சி பெறுகின்றனர். இதில் பிளஸ் 2ல் 50 மாணவர்களும், பிளஸ் 1ல் 20 மாணவர்களும் அடங்குவர் என்றார். 

    ×