என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தாண்டு விழா"

    • வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.அதன்படி கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், திருஷ்டி, எதிரிகள் பயம் விலக மஹா சுதர்சன ஹோமம், ஆயுள்பயம் நீங்க ஆயுஷ் ஹோமம், உடல் நோய், மன நோய் விலக மஹா தன்வந்திரி ஹோமம், வாழ்வில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.புத்தாண்டை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு துளசி மாலை, வண்ண மலர்கள் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    மேலும் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு தொடர் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. ஹோமங்களில் கலந்து கொண்டவர்களுக்கு விசேஷ ஹோம பிரசாதங்களை பீடாதிபதி ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் வழங்கி வாழ்த்தினார். நாளை 2-ம்தேதி திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.

    முன்னதாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

    • டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்க கூடாது.
    • கடற்கரை ரிசார்ட்டுகளில் தங்கி உள்ளடர்கள் இரவு 12 மணிக்கு மேல், அறைகளைவிட்டு வெளியே வர கூடாது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என தனியார் நட்சத்திர ஓட்டல் பொது மேலாளர்கள் அழைத்து காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

    புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், டிசம்பர் 31ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்க கூடாது.

    கடற்கரை ரிசார்ட்டுகளில் தங்கி உள்ளடர்கள் இரவு 12 மணிக்கு மேல், அறைகளைவிட்டு வெளியே வர கூடாது.

    ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள சிசிடிவி கேமரா கண்டிப்பாக இயங்க வேண்டும்.

    அடையாள அட்டை வழங்காத நபர்களுக்கு அறைகள் கொடுக்க கூடாது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளது.

    • புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
    • புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.

    தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.

    புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.


    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    'மாலைமலர்' சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ×