என் மலர்
நீங்கள் தேடியது "டோக்கன் விநியோகம்"
- 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
- 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோக பணி முழுமையாக முடிக்கப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளி யிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முதல்-அைமச்சர் இந்த ஆண்டுதைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்பஅட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் களில் வசிக்கும் குடும்பங்க ளுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரூ. 1000 ரொக்கப்பணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடை களிலும் நடை முறையில் உள்ள 6,14,906 அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் 434மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வுள்ளது.
பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் பெற ஏது வாக குடும்ப அடடை தாரர்களுக்கு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை (3-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை விடுமுறை தினமான 6-ந் தேி நீங்கலாக டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோகப் பணியினை 9-ந் தேதி அன்று தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்னரே 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோக பணி முழுமையாக முடிக்கப்படும். கூட்ட நெரி சலை தவிர்க்கும் பொருட்டு ரேசன் கடை பணியாளர் கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று பொது மக்கள் எந்த நாட்களில் எந்த நேரத்தில் கடைக்குச் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரத்தை தெரிவித்து டோக்கன் வழங்கப்படும்.
குடும்ப அட்டை தாரர் களுக்கு விநியோகம் செய்யப்படும் பொங்கல் பரிசுமற்றும் ரொக்கப்பணம் விநியோகத்தில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் விழுப்புரம் மாவட்ட கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதி வாளர் அலுவல கத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146- 229854 மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் இயங்கி வரும் தொலை பேசி எண் 04146-229884 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமாக மழை பொழிவு இருந்தது.
- தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பெரும் பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்தது.
குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பெரும் பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து உள்ளது.
இதைதொடர்ந்து, அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நிவாரணத் தொகையை வழங்குவதற்கான டோக்கனை வீடுகளுக்கு நேரடியாக வழங்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
- அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும்.
2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், 2ம் நாள் முதல் முற்பகல் 200 பேருக்கும், பிற்பகலில் 200 பேருக்கும் போக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசுத்தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கடைகளில் போலீசாரின் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.