என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்நிறுத்தம்"

    • துருக்கி அதிபர் எர்டோகன் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
    • ரஷிய அதிபர் புதினுடன், எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய ராணுவத்திற்கு உக்ரைன் வீரர்களும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷிய படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

    இந்த போரில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன் இரண்டு நாடுகளிடமும் நல்ல நட்புறவு வைத்திருப்பதால் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பலமுறை புதினையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் துருக்கிக்கு அழைத்து வர முயற்சி செயதுள்ளார்.

    அவ்வகையில், ரஷிய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என புதினிடம் எர்டோகன் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த புதின், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷிய பிராந்தியமாக உக்ரைன் ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக எர்டோகனிடம் கூறியிருக்கிறார். இத்தகவலை ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    புதிய பிராந்தியங்கள் தொடர்பான உண்மை நிலையை கருத்தில் கொண்டு, உக்ரைன் அதிகாரிகளின் நிபந்தனையின் மீது தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான ரஷியாவின் திறந்த நிலைப்பாட்டை புதின் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனெட்ஸ், லுகான்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை முழுமையான கட்டுப்படுத்தாவிட்டாலும், அவற்றை இணைத்துவிட்டதாக ரஷியா கூறுகிறது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், பிணைக்கைதிகள் பரிமாற்றம் செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவின் தீவிர ராஜதந்திரத்திற்குப் பிறகு எகிப்து மற்றும் கத்தார், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

    ஜனவரி 20 அன்று முடிவடையும் தனது நிர்வாகத்தின் கடைசி வெளியுறவுக் கொள்கை நிறைவேற்றமாக இந்த ஒப்பந்தத்தை உருவாக்குகிறது.

    இந்த ஒப்பந்தம் காசாவில் சண்டையை நிறுத்தும். பாலஸ்தீனிய குடிமக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும்.

    மேலும் 15 மாதத்துக்கு மேலாக சிறைபிடிக்கப்பட்ட பிணைக்க்கைதிகளை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கும்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக நடைபெறும் என்றும், ஜனவரி 19-ம் தேதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

    ×