என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு நலப்பணித்திட்ட குழு"

    • பாலமுருகன்,துணை முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • விழா நிறைவாக துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

    பல்லடம்:

    பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட குழு துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனியன் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட அதிகாரிகள் அண்ணாதுரை, பாலமுருகன்,துணை முதல்வர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பேராசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.

    இதில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் பேசுகையில், தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் நீங்களும் இணைவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிக்கண்ணா கல்லூரி இன்று பசுமையாய் காட்சியளிப்பதற்கு முழு காரணம் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களே. நாட்டு நலப் பணித்திட்டத்தில் இணைந்த நீங்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து, சமுதாயத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழா நிறைவாக துணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

    ×