என் மலர்
நீங்கள் தேடியது "குற்றவியல் வழக்கு"
- காணொலிக்காட்சி மூலமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா தொடங்கி வைத்தார்.
- வழக்கறிஞர்களாக நடராஜன், லார்டு இங்கர்சல், கவுசல்யா, சந்தியா ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர் :
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவால் திருப்பூர் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள கோர்ட்டு வளாகங்களில் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மையத்தில் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு அலுவலகத்தை, முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு திறந்து வைத்தார்.
இந்த அமைப்புக்கான வழக்கறிஞர்களாக நடராஜன், லார்டு இங்கர்சல், கவுசல்யா, சந்தியா ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லதுரை, கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, நீதித்துறை நடுவர்கள் பழனிகுமார், முருகேசன், கார்த்திகேயன், ரஞ்சித்குமார், ஆதியான், திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் வக்கீல்கள் பழனிசாமி, சண்முகவடிவேல், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- அண்ணாமலை மீதான புகாரின்பேரில் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு அரசு அனுமதி.
- வழக்கு தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என சமூக ஆர்வலர் புகாரின்பேரில் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்த எந்த தகவலும் தெரியாது என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இருந்து கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை.
மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது. என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.