search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1330 குறள்"

    • தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
    • கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 52). இவர் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா விடுமுறையில் சிறு சிறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்போது அவர் திருக்குறளில் உள்ள 1330 குறள்களை நாணயங்கள், வளையல், குடை, சோயா பீன்ஸ், அகல் விளக்கு, பாசிமணி உள்ளிட்ட பொருட்களில் எழுதி அதனை கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    இது சம்பந்தமாக 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையொட்டி முத்தமிழ் அறிஞர் சங்கம், ஆரணி லயன்ஸ் சங்கம், சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக ஆசிரியை உமாராணி சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.

    இதையறிந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆசிரியை உமாராணியை அழைத்து திருக்குறள் சாதனையாளர் என பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆசிரியை உமாராணி கூறுகையில், ''திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளும் திருக்குறளில் அடங்கியுள்ளது. அதனை பின்பற்றினாலே மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியும். எனது சாதனைப் பயணம் தொடரும்'' என்றார்.

    • 3 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலைக்கு பூக்களை துாவி, குத்துவிளக்கேற்றி பூஜை செய்தார்.
    • திருக்குறளில் வள்ளுவர் கூறியுள்ள அறநெறிகளை தவறாமல் கடைப்பிடிக்கிறேன், என்றார்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருவள்ளுவர் தினத்தையொட்டி, திருப்பூரில்கட்டட சூப்பர்வைசர் ஒருவர், தன்வீ ட்டில்உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, 1,330குறள்களை ஒப்புவித்து பூஜை செய்தார். திருப்பூர், வேலம்பாளையம், ஆனந்தா அவென்யூவைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (62), இவர் திருவள்ளுவர் தினமான நேற்று, தன் வீட்டில் வைத்துள்ள, 3 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலைக்கு பூக்களை துாவி, குத்துவிளக்கேற்றி, 1,330 குறள்களை ஒப்புவித்து பூஜை செய்தார்.

    இதுதொடர்பாக ரங்கராஜன் கூறுகையில், ''திருக்குறள் மீதுள்ள பற்றால், 15 ஆண்டுக்கு முன், 1,330 குறள்களையும் படித்தேன். பார்க்காமலேயே குறளும், அதற்கு பொருளும் சொல்வேன். திருக்குறளில் வள்ளுவர் கூறியுள்ள அறநெறிகளை தவறாமல் கடைப்பிடிக்கிறேன், என்றார்.

    ×