search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் பாதயாத்திரை"

    • அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.
    • எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பாதயாத்திரை.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

    மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் வெறுப்பு, அரசியலுக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்த பாத யாத்திரை சென்னையில் நாளை (2-ந் தேதி) காலை 7 மணியளவில் அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.

    மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் இந்த பாத யாத்திரை மேதின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடா ஓட்டல் சந்திப்பு, லாங்ஸ் கார்டன், புதுப்பேட்டை, பாந்தியன் ரோடு வழியாக அருங்காட்சியகத்தை அடைகிறது. அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரகாரத்தை நிறைவு செய்கிறார்கள்.

    இதேபோல் நாளை மாநிலம் முழுவதும் 77 இடங்களில் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சியில் திருநாவுக்கரசர் தலைமையிலும், ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலும் சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையிலும் இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையிலும் பாத யாத்திரை நடக்கிறது.

    • காங்கிரஸ் பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென ஒரு நபர் ஓடிவந்து கட்டி பிடித்தார்.
    • அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் உடனே அவரை விலக்கி அப்புறப்படுத்தினர்.

    சண்டிகர்:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே இந்த யாத்திரை கடந்து சென்றுள்ளது. கடந்த 6-ம் தேதி அரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது. அதன்பின் இந்த யாத்திரையானது தொடர்ந்து, பஞ்சாப்பில் நடந்து வருகிறது.

    லூதியானாவில் கடந்த 14-ம் தேதி நடந்தது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால், அன்றைய தினம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்ப்பூர் பகுதியில் காலையில் யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. இதில், ராகுல் காந்தியை திடீரென ஒருவர் ஓடி வந்து கட்டி பிடித்துள்ளார். அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் உடனே அவரை விலக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    ×