என் மலர்
நீங்கள் தேடியது "டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை"
- UPI சேவைகளில் காலை 11:30 மணியளவில் சிக்கல் தொடங்கியது.
- NPCI அவ்வப்போது தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது.
இந்தியா முழுவதும் பல இடங்களில் UPI சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் பயனர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்த முடியவில்லை. பயனர்கள் பணத்தை மாற்றவோ அல்லது தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கவோ முடியவில்லை என்று புகார் கூறுகின்றனர்.
சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, UPI சேவைகளில் காலை 11:30 மணியளவில் சிக்கல் தொடங்கியது.
இந்த UPI சிக்கல்கள் குறித்து நண்பகல் வரை சுமார் 1,168 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், Google Pay பயனர்கள் 96 சிக்கல்களைப் புகாரளித்தனர், அதே நேரத்தில் Paytm பயனர்கள் 23 சிக்கல்களைக் குறிப்பிட்டனர்.
சமூக ஊடக தளங்களிலும் இந்தப் பிரச்சினை குறித்து பலர் புகார் செய்யத் தொடங்கியுள்ளனர். சமீபக காலமாக UPI சேவைகளில் அடிக்கடி முடக்கம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 30 நாளில் இது மூன்றாவது முடக்கம் ஆகும்.
இந்நிலையில் UPI செயல்பாடுகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "NPCI தற்சமயம் அவ்வப்போது தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது.
இதனால் பகுதி UPI பரிவர்த்தனை நிராகரிப்பு ஏற்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் உங்களுக்கு இது குறித்து தொடர்ந்து அறிவிப்போம். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பயனர்கள் பணத்தை மாற்றவோ அல்லது தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கவோ முடியவில்லை என்று புகார் கூறுகின்றனர்.
- சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் தளமான டவுன்டெக்டர் அறிக்கை கூறுகிறது.
இந்தியா முழுவதும் பல இடங்களில் UPI சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் பயனர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்த முடியவில்லை. பயனர்கள் பணத்தை மாற்றவோ அல்லது தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கவோ முடியவில்லை என்று புகார் கூறுகின்றனர்.
சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, UPI சேவையகங்களில் சிக்கல் காலை 11:30 மணியளவில் தொடங்கியது.
இந்த UPI சிக்கல்கள் குறித்து நண்பகல் வரை சுமார் 1,168 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், Google Pay பயனர்கள் 96 சிக்கல்களைப் புகாரளித்தனர், அதே நேரத்தில் Paytm பயனர்கள் 23 சிக்கல்களைக் குறிப்பிட்டனர்.
சமூக ஊடக தளங்களிலும் இந்தப் பிரச்சினை குறித்து பலர் புகார் செய்யத் தொடங்கியுள்ளனர். சமீபக காலமாக UPI சேவைகளில் அடிக்கடி முடக்கம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 30 நாளில் இது மூன்றாவது முடக்கம் ஆகும். UPI செயல்பாடுகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) இன்னும் இந்தப் பிரச்சினையை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.
- சமீப காலங்களில் யூ.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவது குறைந்து வருகிறது.
- பல செயலிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக மாற்றி விட்டன.
யூ.பி.ஐ. எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண சேவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் எளிமையாகிவிட்டன. சமீப காலங்களில் இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையில் பலவித புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி அதனை இன்னும் மிகவும் எளிமையாக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பண மதிப்பு இழப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்றின் விளைவால் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்யப்படுவது பெரும் அளவில் அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் வாலட்டுகள், நெப்ட்/ ஆர்.டி.ஜி.எஸ் (NEFT/RTGS), யூ.பி.ஐ, பேடிஎம், கூகுள் பே, பிம் ஆப், போன் பே மற்றும் பல செயலிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக மாற்றி விட்டன. இந்த சேவைகளின் மூலம் பணத்தை பெறுவதும் அல்லது வேறொருவருக்கு பணத்தை அனுப்புவதும் மிக மிக எளிமையாக உள்ளது. ஆனால் எந்த அளவிற்கு எளிமையாக மாறினாலும், அதே அளவிற்கு சில பிரச்சினைகளும் உருவாகின்றன. முக்கியமாக சமீப காலங்களில் யூ.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவது குறைந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் இந்த யூ.பி.ஐ. முறையில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனையின்போது நமக்கே தெரியாமல் தவறான யூ.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால் அதனை திரும்ப பெறுவது என்பது இயலாத காரியம். எனவே ஒரு வேளை நீங்கள் தவறுதலாக வேறொரு யூ.பி.ஐ. கணக்கிற்கு உங்களது பணத்தை அனுப்பி விட்டால் அதனை எந்த வழிகளில் திரும்ப பெற முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.
யூ.பி.ஐ. செயலியின் உதவிக் குழுவை அழைத்து பிரச்சினையை கூறலாம்:
நீங்கள் எந்த செயலி மூலம் பணத்தை அனுப்பினீர்களோ அந்த செயலியின் உதவி குழுவை தொடர்பு கொண்டு நடந்த தவறை தெரிவிக்க வேண்டும். அனைத்து செயலிகளும் இது போன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்காக தங்களுக்கென தனி வாடிக்கையாளர் சேவை குழுவை நிர்வகித்து வருகின்றன.
* பிம் (BHIM) உதவி எண்
இரண்டாவதாக பிம் (BHIM) எனப்படும் பாரத் இன்டர்பேஸ் பார் மணி என்ற செயலியின் இலவச வாடிக்கையாளர் உதவி எண்ணான 18001201740 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி கேட்கலாம். இது பிரத்யேகமாக வாடிக்கையாளர்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு என்று உருவாக்கப்பட்ட எண். அந்த எண்ணை தொடர்பு கொண்டு தவறாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான முழு விவரங்களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
* வங்கி உதவி
பணம் தவறுதலாக அனுப்பப்பட்டதை உணர்ந்து கொண்ட மறுகணமே, அந்த யூ.பி.ஐ. ஐ.டி. மற்றும் அனுப்பிய பணத்தின் மதிப்பு ஆகிய விவரங்களை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து நீங்கள் எந்த கணக்கில் இருந்து பணத்தை அனுப்பினீர்களோ அந்த வங்கியின் ஈ-மெயில் அல்லது தொலைபேசி வழியாக இந்த தகவல்களை அனுப்பி அவர்களிடம் உதவி கேட்கலாம். முடிந்தால் அந்த வங்கியின் மேலாளரை சந்தித்தும் உதவி கேட்கலாம். இதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரே இடம் வங்கியாக மட்டுமே இருக்க முடியும். முடிந்த அளவு விரைவாக இதை நீங்கள் செய்ய வேண்டும்.
இதில் இன்னொரு பிரச்சினையும் ஏற்படுவது உண்டு. சில நேரங்களில் தவறான யூ.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது நீங்கள் தவறாக பதிவிட்ட யூ.பி.ஐ. ஐ.டி. செயல்பாட்டில் இல்லையென்றால், உங்களது பணம் உடனடியாக உங்களது கணக்கிற்கே திரும்பி வந்துவிடும். எனவே உங்கள் பணம் உடனடியாக திரும்பவில்லை எனில் நீங்கள் தவறுதலாக பதிவு செய்த யூ.பி.ஐ. கணக்கு வேறு ஒருவருடையது என்பதையும், அந்த பணம் அவர்களுக்கு சென்றுவிட்டது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
- டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.
- சாதாரண பணத்தைப்போல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
சண்டிகார் :
பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகாரில், ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில், ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் அஜய்குமார் சவுத்ரி பேசியதாவது:-
ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கரன்சியை மொத்த பயன்பாட்டுக்கும், சில்லரை பயன்பாட்டுக்கும் தனித்தனியாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது.
பணத்தின் பரிணாமத்தில் இது ஒரு மைல்கல். சோதனை முறை முடிந்து, டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.
தற்போது, 115 நாடுகள் டிஜிட்டல் கரன்சி வெளியிட பரிசீலித்து வருகின்றன. ஜி20 அமைப்பை சேர்ந்த 18 நாடுகள் பரிசீலித்து வருகின்றன.
டிஜிட்டல் கரன்சி என்பது சாதாரண பணத்தின் டிஜிட்டல் வடிவம் மட்டுமே. அதை சாதாரண பணத்துக்கான மாற்றுவழியாக கருதக்கூடாது. சாதாரண பணத்துக்கான அனைத்து மதிப்பும் டிஜிட்டல் கரன்சிக்கு உள்ளது. சாதாரண பணத்தைப்போல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
ஆனால், சாதாரண பணத்துக்கு அளிப்பதுபோல், டிஜிட்டல் கரன்சிக்கு வட்டி அளிக்கப்படாது. டிஜிட்டல் கரன்சி, மின்னணு பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும். பணம் செலுத்தும் முறையை மேலும் திறம்பட மாற்றும். சாதாரண பணத்தை கையாள்வதில் உள்ள செலவை குறைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அரசின் நடவடிக்கைகளால் 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
- டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
மக்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கரத் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு பீம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது.
அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19-ம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் உயர்ந்துள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் 2,326.02 கோடி என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 2021-22-ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,197.68 சதவீதமாக அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் சேவைகளை தடையற்ற முறையில் வழங்க வங்கிகளும் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்று செயல்படுத்துகின்றன. பீம் யுபிஐ, யுபிஐ-123, ஆதார் பரிவர்த்தனை பாலம், ஏஇபிஎஸ் போன்ற பல முன்முயற்சிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் மற்றும் வங்கிகளால் செயல்படுத்தப்படுகின்றன என தெரிவித்தார்.