search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரெஞ்சு தூதரகம்"

    • முதல் சுற்று தேர்தலில் 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    • சென்னையில் 4 இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    புதுச்சேரி

    பிரான்ஸ் பாராளுமன்றத்துக்கான முதல் சுற்று தேர்தல் கடந்த 30-ந் தேதி நடந்தது.

    தேர்தலில் பிரான்சு நாட்டுக்கு வெளியே வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய தாங்கள் குடியிருக்கும் நாட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.

    தமிழகம், புதுச்சேரி, கேரளத்தில் உள்ள 4 ஆயிரத்து 535 பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் வாக்களிக்க தகுதியுடையோர் ஆவர். இதற்காக புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் 4 இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    முதல் சுற்று தேர்தலில் 15 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்த வாக்காளர்களான 4535 பேரில் 892 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதில் 12 வாக்குகள் செல்லாதவை. 3 வாக்குச் சீட்டில் வாக்கே செலுத்தப்படவில்லை.

    சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பஜோட் பிராங்க் அதிகளவாக 542 வாக்குகள் பெற்றிருந்தார். இதில் 12 விழுக்காடு வாக்குபெற்று முதல் 2 இடங்களை பிடித்த 2 பேர் இடையே 2-ம் சுற்று தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது.

    இதற்காக பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடக்கிறது.

    • கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
    • பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் பறந்தது ஊழியர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் பிரெஞ்சு தூதரகம், தலைமை செயலகம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர், காவல்துறை தலைமையகம் ஆகியவை உள்ளது.

    கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் இன்று பகலில் பிரெஞ்சு தூதரகத்தின் மீது டிரோன் ஒன்று பறந்தது.

    இதைக்கண்ட தூதரக ஊழியர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த தூதரக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று டிரோனை இயக்கியவரை பிடித்து விசாரித்தனர்.

    ஆனால் அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதற்கு முன்பாக அந்த நபர் டிரோனை எடுத்துக்கொண்டு மாயமானார்.

    அங்கிருந்த கேமரா மூலம் டிரோனை இயக்கியவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் தூதரகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

    ×