என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இலங்கை தேர்தல்"
- அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
- ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்.
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம், இலங்கையின் 9வது அதிபராக நாளை காலை 9 மணிக்கு அனுர குமார திசநாயக பதவியேற்கிறார். அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
கொழும்பு, அம்பாந்தோட்டை, கம்பஹா உள்ளிட்ட 158 மாவட்டங்களில் அனுர குமார திசநாயக முதலிடம் பிடித்துள்ளார்.
அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, " நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்" என்று அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும்.
நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும். ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்" என்றார்.
- தேர்தல் நடைமுறைகளுக்கு ரூ.10 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது.
- எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியும் என்று நம்புகிறது
கொழும்பு:
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பொருளாதார நெருக்கடியை அரசு கையாளும் விதம் குறித்து மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த அதிருப்தியை காட்ட இந்த தேர்தல் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. எனினும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னமும் மீளாததால் தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கவே வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளுக்கு ரூ.10 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருப்பதால் தேர்தல் செலவு அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.
2018ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. தற்போது பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளது. மக்களின் எழுச்சி காரணமாக கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி நீக்கம் செய்யப்பட்டார். தேர்தல் கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடுகளால் கட்சியில் குழப்பம் நிலவுகிறது. எனவே, இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டுமா என்பது சந்தேகம்தான்.
அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்