என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை தேர்தல்"

    • தேர்தல் நடைமுறைகளுக்கு ரூ.10 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது.
    • எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியும் என்று நம்புகிறது

    கொழும்பு:

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் 6 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பொருளாதார நெருக்கடியை அரசு கையாளும் விதம் குறித்து மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த அதிருப்தியை காட்ட இந்த தேர்தல் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. எனினும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னமும் மீளாததால் தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கவே வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள 340 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளுக்கு ரூ.10 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருப்பதால் தேர்தல் செலவு அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.

    2018ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. தற்போது பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளது. மக்களின் எழுச்சி காரணமாக கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி நீக்கம் செய்யப்பட்டார். தேர்தல் கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடுகளால் கட்சியில் குழப்பம் நிலவுகிறது. எனவே, இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டுமா என்பது சந்தேகம்தான்.

    அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

    • அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
    • ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்.

    இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார்.

    இதன்மூலம், இலங்கையின் 9வது அதிபராக நாளை காலை 9 மணிக்கு அனுர குமார திசநாயக பதவியேற்கிறார். அனுர குமார திசநாயகவிற்கு பல தோல்விகளுக்கு பிறகு ஜே.வி.பிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

    கொழும்பு, அம்பாந்தோட்டை, கம்பஹா உள்ளிட்ட 158 மாவட்டங்களில் அனுர குமார திசநாயக முதலிடம் பிடித்துள்ளார்.

    அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, " நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்" என்று அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும்.

    நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும். ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுத தயாராக நிற்கிறோம்" என்றார்.

    • யாழ்ப்பாணம் ஊர்க்கா வந்துறை தொகுதியில் டக்ளஸ் தேவனாந்தா கட்சி வெற்றி பெற்றது.
    • யாழ்ப்பாணம் மாவட்டம் கிளி நொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி வாகை சூடியது.

    இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் அதிபர் அனுரா குமார திச நாயகா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ( என்.பி.பி,) கட்சி முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகித்து வந்தது.

    எதிர்கட்சிகளை விட அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தது. நேரம் ஆக ஆக அக்கட்சி அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் இருந்தது. ஓட்டுகள் பாதி எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 63 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தது.

    இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11 சதவீத வாக்குகளும், முன்னாள் அதிபர் ரணில் விக்கிரம சிங்கே ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக முன்னணி 5 சதவீத வாக்குகளும் பெற்று மிகவும் பின் தங்கி இருந்தது.

    முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா வெறும் 2.98 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி பரிதாப நிலையில் இருந்தது.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் 123 இடங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்களும் சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. இந்த மேஜிக் எண்ணை அக்கட்சி எளிதில் எட்டி பிடித்தது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இத்தேர்தலில் முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.

    ஈழத்தமிழர்களின் தலைநகராக போற்றப்படும் திரிகோணமலை, மூதூர், சேருவில் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த 3 தொகுதிகளிலும் இலங்கை தமிழரசு கட்சி தோல்வியை சந்தித்தது.

    திரிகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2 இடங்களிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர், மானிப்பாய், கோபாய் தொகுதிகளிலும் ஆளும் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது.

    யாழ்ப்பாணம் ஊர்க்கா வந்துறை தொகுதியில் டக்ளஸ் தேவனாந்தா கட்சி வெற்றி பெற்றது.

    யாழ்ப்பாணம் மாவட்டம் கிளி நொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி வாகை சூடியது.

    ராஜபக்சே குடும்பத்தினரின் கோட்டையாக கருதப்படும் அம்பாந்தோட்டை தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி கடுமையான தோல்வியை தழுவியது.

    இந்த தொகுதியிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. இக்கட்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெறும் 3 உறுப்பினர்களை மட்டுமே பெற்றது.

    ஆனால் இந்த தேர்தலில் இலங்கை பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளதால் அக்கட்சி மிக எளிதாக பாராளுமன்றத்தை கைப்பற்றி உள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகா வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதிலும் தேசிய மக்கள் சக்தி விசுவரூப வெற்றி பெற்று இருக்கிறது.

    இலங்கை பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற முடியும். தற்போது தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

    தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.
    • திச நாயகா தலைமையிலான கூட்டணி 141 இடங்களை கைப்பற்றியது.

    இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் அதிபர் அனுரா குமார திச நாயகா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) கட்சி முன்னிலை வகித்தது.

    இதைத் தொடர்ந்து நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகித்து வந்தது. எதிர்கட்சிகளை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்களும் சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. இந்த மேஜிக் எண்ணை அக்கட்சி எளிதில் எட்டி பிடித்தது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் அனுரா குமார நித நாயகா தலைமையிலான கூட்டணி 141 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாராளுமன்ற அதிகாரத்தை இந்த கூட்டணி தன்வசப்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 61.56 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெற்றது.

    ×