search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளவந்தான்"

    • சம்பவம் தொடர்பான மற்றோரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது

    மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் மோதியதில் பெண் ஒருவர் பெண் ஒருவர் காயமடைந்ததாக புகார் எழுந்தது. மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாடியிருந்தனர். சம்பவத்தின்போது ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தினார்.

    இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் காயமடைந்த பெண் தனது மூக்கில் இருந்து ரத்தம் வருவதை காட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைததளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

    இந்நிலையில் சம்பவம் தொடர்பான மற்றோரு வீடியோ வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ககர் போலீஸார், ரவீனா போதையில் இல்லை என்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தெரிவித்துள்ளனர்.

    பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
    • போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது

    ரோடு ரேஜ் (Road rage) என்பது வாகனத்தை வேகமாக அல்லது கண்மூடித்தனமாக இயக்குது ஆகும். இந்தியாவில் இதனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பணக்காரர்களும், அரசியல், சினிமா பிரபலங்களும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உடபட இரண்டு இளம் ஐ.டி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்து வரும் நிலையில் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

     

    அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.  

    பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆளவந்தான்’.
    • இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார்.

    கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆளவந்தான்'. இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி தாணுவின்  'வி கிரியேஷன்ஸ்' இப்படத்தை தயாரித்தது. கமலுடன் ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    கமல்ஹாசன் இப்படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இவரே நடித்திருப்பார். அக்காலக்கட்டத்திலேயே அனிமேஷன் காட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை பயன்படுத்தி வித்தியாசமாக படத்தை எடுத்திருப்பர்.

    இப்படம் சில மாதங்களுக்கு முன் டிஜிட்டல் மெருகேற்றல் செய்ட்து ரிரீலிஸ் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டிஜிட்டல் மெருகேற்று செய்யப்பட்ட வெர்ஷன் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'.
    • இப்படம் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

    இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. இந்த படத்திற்கு கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.


    இதைத்தொடர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் முதல் காட்சியில் கமல்ஹாசன் எண்ட்ரியின் போது ரசிகர்கள் கற்பூரம் காண்பித்து உற்சாகமாக கொண்டாடினர். இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவரேற்பு கிடைக்கவில்லை.
    • ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வெளியாகின.

    கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். ரிலீசான போதே அதநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஆளவந்தான் படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவரேற்பு கிடைக்கவில்லை. எனினும், இந்த படத்தின் ரீ-ரிலீஸ் பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன.

    அந்த வரிசையில், ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் பதிப்பு உருவாக்கப்பட்டு, ரீ-ரிலீசுக்கு தயாராகி வருவதை தயாரிப்பாளரான எஸ். தானு தெரிவித்து இருந்தார். மேலும் இதற்காக படத்தின் இரண்டு பாடல்களும் வெளியிடப்பட்டு விட்டன.

    இந்த நிலையில், ஆளவந்தான் படம் ரிலீசாகும் அதே தினத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் தங்களது நட்சத்திரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் மோதவிருப்பதை ஒட்டி சமூக வலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் படம் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படமும், இதே தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டிசம்பர் 8-ம் தேதி ஆளவந்தான் மற்றும் முத்து படங்கள் ரீ-ரிலீஸ் ஆவது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ரீ-ரிலீஸ் செய்வது பற்றி சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார்.
    • உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியீடு.

    கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ஆளவந்தான். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.

    ஆளவந்தான் படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் எஸ். தானு பதில் அளித்திருந்தார். அப்போது, படத்தை ரீ-ரிலீஸ் செய்வது பற்றி சூசகமாக தகவல் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

    அந்த வரிசையில், ஆளவந்தான் திரைப்படம் அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் தானு தெரிவித்து இருக்கிறார். ஆளவந்தான் திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கடவுள் பாதி மிருகம் பாதி கவிதை பாடல் நாளை (நவம்ர் 17) மாலை 5.03 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கமல்ஹாசனுடன் ரவீனா டாண்டன், அனுஹாசன் மற்றும் பலர் நடித்திருக்கும் ஆளவந்தான் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார்.

    • இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’.
    • இப்படம் விரைவில் ரீ - ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    கடந்த 2001-ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    ஆளவந்தான் போஸ்டர்

    இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், 22 வருடத்திற்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் ரீ- ரிலீஸுக்கு தயாராகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது. இந்த படத்தின் ரீ-ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடிகர் ரஜினியின் 'பாபா' திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    ×