என் மலர்
நீங்கள் தேடியது "வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்"
- தி.மு.க. சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர திமுக மாணவர் அணி சார்பில் பிச்சனூர் தேரடி பகுதியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர மாணவர் அணி அமைப்பாளர் நகரமன்ற உறுப்பினர் நவீன்சங்கர் தலைமை தாங்கினார்.
நகர அவைத் தலைவர் நெடுஞ்செழியன், துணைசெயலாளர்கள் ஜம்புலிங்கம், மனோஜ், வசந்தா, மாவட்ட பிரதிநிதி தண்டபாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவரும் நகர செயலாளருமான எஸ்.சவுந்தரராசன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., திமுக செய்தி மக்கள் தொடர்பு பிரிவு துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி, திமுக மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் அமலுவிஜயன் எம்எல்ஏ ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் மாவட்ட துணை செயலாளர்கள் ஜி.எஸ்.அரசு, எஸ். பாண்டியன், குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம்பிரதீஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகர மன்ற உறுப்பினர் என்கோவிந்தராஜ் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், திமுக பல்வேறு, அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.எம். மோனீஷ் நன்றி கூறினார்.
அரவேணு
கோத்தகிரியில் தமிழ் இளைஞர் நல சங்கம் ஒருங்கிணைத்த மொழிப்போர் ஈகியர் வீரவணக்க பொதுக்கூட்டம் கோத்தகிரி சந்தை திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் யோகலிங்கம் தலைமை வகித்தார். பூவரசன் வரவேற்று பேசினார் அகரம் சிவா, சத்திய சிவன், பழக்கடை செல்வம் சுப்பிரமணியம், தம்பி ராஜா, சதாசிவம், மோகனதாஸ், வெள்ளையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழகத்தின் மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜன், சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன், கீரனூர்முத்து, ராஜேந்திரன், சண்முகனார், ஐயம்பாளையம் வீரப்பன், பீளமேடு தண்டபாணி, மயிலை சாரங்கபாணி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தியாகிகள் குறித்து தாமரைச்செல்வன் ஜெகதீசன் இளங்குமரன் திலகவதி ஆகியோர் உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழின உணர்வாளர் முத்துலட்சுமி வீரப்பன் கலந்துகொண்டு பேசினார். முடிவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் கைத்தலா மதி, தவிட்டுமேடு செல்வா, பெரியார் நகர் தங்கேசு ஆகியோர் நன்றி கூறினர்.






