என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெம்பா பவுமா"

    • அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
    • ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.

    இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியின் போது பவுமா விக்கெட்டை கொண்டாடியதற்காக சாம் கரணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

    28-வது ஓவரில் தென்னாப்பிரிக்கா கேப்டனை போல்ட் முறையில் அவுட் செய்த பிறகு டெம்பா பவுமாவின் அருகில் சென்று சாம் கரண் ரொம்ப ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

    இதனால் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதற்காக சாம் கரணுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. 24 மாத காலத்தில் கரணின் முதல் குற்றம் இதுவாகும்.

    கள நடுவர்கள் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், மூன்றாவது நடுவர் பொங்கனி ஜெலே மற்றும் நான்காவது நடுவர் அல்லாஹுதின் பலேகர் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

    ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.

    • தென் ஆப்பிரிக்கா டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து பவுமா நீக்கம் செய்யப்பட்டார்.
    • டி20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த பவுமா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ஒருநாள் அணிக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி 20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் எய்டன் மார்க்ரம் தலையிலான சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 அணிக்கு இனிமேல் மார்க்ரமே கேப்டனாக செயல்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி:

    தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், சிசண்டா மாகலா, கேசவ் மஹாராஜ், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ரியான் ரிக்கல்டன், ஆண்டிலே ஸ்டுக்வேப்ஸ், பெஹ்லுக்வே, லிசாட் வில்லியம்ஸ், ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.

    3-வது ஒருநாள் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி:

    தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மகலா, கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வைடன் மில்லர், டேவிட் மில்லர், , லுங்கி என்கிடி, ரியான் ரிக்கெல்டன், வெய்ன் பார்னெல், அண்டில் பெஹ்லுக்வாயோ, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென்.

    3 டி20 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி:

    எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசாண்டா மகலா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, ரிலீ ரோசோவ், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

    • இலங்கை தென் ஆப்பிரிக்காவில் பயணம்செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .

    கேப்டவுன்:

    இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

    இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால், இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

    தென் ஆப்பிரிக்க அணி விவரம் வருமாறு:

    டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்சி, டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வேரின் .

    • இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
    • 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

    டர்பன்:

    இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 7 விக்கெட்டும், கோட்சி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 4வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ், பவுமா ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.

    4வது விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டப்ஸ் 122 ரன்னில் அவுட்டானார். பவுமா 113 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதையடுத்து, 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

    மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் இரு தினங்கள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா எஞ்சியுள்ள 5 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதம் அடித்தார்.
    • 2016-க்கு பிறகு முதல் இரட்டை சதம் அடித்த முதல் தெ.ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ரிக்கெல்டன் படைத்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. மார்க்ரம் (17), வியான் முல்டர் (5), ஸ்டப்ஸ் (0) ஆகியோர் சொதப்பிய நிலையில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினர். சதம் விளாசிய பவுமா 106 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரியான் ரிக்கெல்டன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். 10-வது டெஸ்டில் ஆடும் அவருக்கு இது முதல் சர்வதேச இரட்டை சதம் ஆகும்.

    இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இரட்டை சதம் பதிவு செய்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை ரிக்கல்டன் பெற்றார்.

    2016-ல் தென் ஆப்பிரிக்காவிற்காக ஹசிம் அம்லா இரட்டை சதம் அடித்தார். அதன்பிறகு தற்போதுதான் தென் ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் இரட்டை சதத்தை எட்டியுள்ளார்.

    2016-க்கு பிறகு முன்னாள் கேப்டன்களான டீன் எல்கர் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் இரட்டை சதத்தை பதிவு செய்வதற்கு மிக அருகில் வந்தனர். ஆனால் இருவரும் 199 ரன்களில் அவுட் ஆனார்கள். கடந்த ஆண்டு அக்டோபரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்ஜி 177 ரன்கள் எடுத்தார்.

    மேலும் 266 பந்துகளில் அதிவேக சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் இவர் 4-வது இடத்தைப் பிடித்தார்.

    தென் ஆப்பிரிக்காவின் அதிவேக டெஸ்ட் இரட்டை சதம் விளாசிய வீரர்கள்:-

    211 பந்துகள் - ஹெர்ஷல் கிப்ஸ் vs பாகிஸ்தான், கேப் டவுன், 2003

    238 பந்துகள் - கிரேம் ஸ்மித் vs வங்கதேசம், சிட்டகாங், 2008

    251 பந்துகள் - கேரி கிர்ஸ்டன் vs ஜிம்பாப்வே, ஹராரே, 2001

    266 பந்துகள் - ரியான் ரிக்கல்டன் vs பாகிஸ்தான், கேப் டவுன், 2025

    267 பந்துகள் - ஜாக் காலிஸ் vs இந்தியா, செஞ்சுரியன், 2010

    • பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
    • தென்ஆப்பிரிக்கா டெஸ்டில் தொடர்ச்சியாக 7-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 615 ரன்கள் குவித்தது. ரையான் ரிக்கெல்டன் 259 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 194 ரன்னில் சுருண்டு 'பாலோ-ஆன்' ஆனது. 421 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 122.1 ஓவர்களில் 478 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 58 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    சிறிய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஏற்கனவே முதலாவது டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த தென்ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா டெஸ்டில் தொடர்ச்சியாக 7-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை டெஸ்ட்டில் தோல்வியே கண்டதில்லை. அவரது கேப்டஷிப்பில் தென் ஆப்பிரிக்கா அணி 9 டெஸ்ட்டில் விளையாடி உள்ளது. இதில் 8-ல் வெற்றியும் ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

    இதன்மூலம் டெஸ்ட்டில் முதல் தோல்விக்கு முன் அதிக வெற்றிகளை பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் என்ற மாபெரும் சாதனையை பவுமா படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஹசிம் அம்லா 2-வது உள்ளார். இவர் முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரு தோல்வியும் அடைந்ததில்லை. இந்த சாதனையை பவுமா (9 போட்டிகள்) முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரச்சின் மற்றும் வில்லியம்சன் பிலிப்ஸ் போன்ற வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
    • நாங்கள் ஒரு விக்கெட்டுக்கு 125 என்ற ஸ்கோரில் இருந்தோம். அதன் பிறகு நாங்கள் அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் இழந்தோம்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் தேதி நடக்கிறது.

    இந்நிலையில் எதிரணி வீரர்களுக்கு வாய்ப்புகளை நாங்களே வழங்கி அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். இனி அந்த தவறை செய்யக்கூடாது என தோல்வி குறித்து டெம்பா பவுமா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    360 ரன்கள் அடித்தது இந்த ஆடுகளத்தில் ஒரு நல்ல ஸ்கோர் தான். இதுவே ஒரு 350 ரன்கள் என்ற இலக்கு இருந்திருந்தால் கூட நாங்கள் இந்த ஸ்கோரை எட்ட முடியும் என்று நம்பி இருப்போம். இன்றைய ஆட்டத்தில் கூட எங்கள் அணியில் ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தோம்.

    ஆனால் நானோ அல்லது வெண்டர் டூசன் களத்தில் கடைசி வரை நின்று இருந்து நியூசிலாந்து வீரர்கள் போல் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எங்களை கடும் அழுத்தத்தில் நியூசிலாந்து பவுலர்கள் வைத்திருந்தார்கள்.

    ரச்சின் மற்றும் வில்லியம்சன் பிலிப்ஸ் போன்ற வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நாங்கள் ஒரு விக்கெட்டுக்கு 125 என்ற ஸ்கோரில் இருந்தோம். அதன் பிறகு நாங்கள் அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் இழந்தோம். இதன் மூலம் கடைசியில் வரும் வீரர்கள் பெரிய ஸ்கோரை துரத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். இனி வரும் காலங்களில் நாங்கள் இன்னும் ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் இருக்க வேண்டும்.

    எதிரணி வீரர்களுக்கு வாய்ப்புகளை நாங்களே வழங்கி அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். இனி அந்த தவறை செய்யக்கூடாது. ஆட்டத்தில் இருக்கும் முக்கிய தருணங்களை சரியாக பயன்படுத்தினாலே நம்மால் வெற்றி பெற முடியும்.

    என்று பவுமா கூறியுள்ளார்.

    ×