search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி நடவடிக்கை"

    • அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று வருகிறது.
    • பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான குன்றக்குடி, நேமம், அரிபுரம், கே.ஆத்தங்குடி, வைரவன்பட்டி, சிறுகூடல் பட்டி, என்.புதூர், மாங்கொம்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வங்கி மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

    குறிப்பாக தங்களது தங்க நகைகளை இந்த வங்கிக் கிளையில் அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேமம் கிராமத்தைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடகு வைத்த நகையை பிள்ளையார்பட்டி வங்கிக் கிளையில் இருந்து மீட்டுச் சென்றார்.

    வீட்டிற்குச் சென்ற அவர் நகையை அணிந்து பார்த்த போது 4 கிராம் எடை குறைந்து இருப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் வங்கிக் கிளையில் சென்று கேட்ட போது, பணியில் இருந்த அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் யாரும் சரிவர பதிலை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அந்த வாடிக்கையாளர் அந்த வங்கிக் கிளையின் நகைகள் அடகு வைத்த தனக்கு தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

    இதையடுத்து சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் வங்கி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் தங்கள் அடகு வைத்த நகையை எடை சரிபார்ப்பு மற்றும் மீட்பதற்காக வந்தபோது அனைவரது நகைகளிலும் இரண்டு கிராம் முதல் 8 கிராம் வரையிலான எடை குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனால் பிள்ளையார்பட்டி வங்கிக் கிளை முன்பு தகவல் அறிந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

    தாங்கள் நகையை அடகு வைக்கும் போது வங்கியில் எழுதி தரப்பட்டிருக்கும் எடைக்கும், மீட்டுக் கொண்டு வந்த பிறகு சரிபார்க்கும் போது உள்ள எடைக்கும் எட்டு கிராம் வரையில் குறைவாக வித்தியாசம் காணப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த வங்கிக் கிளையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் வாடிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நகையை அடகு வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த ஒரு வருட காலமாக இது போன்று அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று உள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    நகைகளை வைக்கும் போது வங்கியில் தரப்படும் கணக்கு சான்று அட்டையிலும் மோசடியாக ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை வெள்ளை மை கொண்டு அழித்து புதிதாக எடை எழுதி தரப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

    வங்கிகளில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் அனைவரது நகைகளிலும் எடை குறைந்து காணப்படுவதால் இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து வங்கி கிளையின் மூத்த மேலாளரிடம் கேட்ட போது, அனைத்து வாடிக்கையாளர்களின் நகை எடை குறைவது சம்பந்தமாக கணக்கீடுகள் நடைபெற்று வருவதாகவும், போலீசில் முறையாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மண்டல அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிகாரிகள் குழு வங்கிக்கு வருகை தர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும் வாடிக்கையாளர் களுக்கு எந்த விதமான நஷ்டமும் இன்றி அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை வாடிக்கையாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    • செப்.27 முதல் அக்.3-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் சோதனை நடைபெற்று உள்ளது.
    • 8 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஆம்னி பஸ்கள் மீது வரும் புகார்களை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது. அண்மையில் தொடர் விடுமுறை விடப்பட்டதையொட்டி, செப்.27 முதல் அக்.3-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் சோதனை நடைபெற்று உள்ளது.

    இதில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது, அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தியிருந்தது, அதிக ஒளி வீசும் முகப்பு விளக்கு பொருத்தியது, ஓட்டுநர் 'சீட்' பெல்ட் அணியாதது, முதலுதவி பெட்டி இல்லாதது, பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டாதது, உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட ஆம்னி பஸ்கள், வரி செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக 7,446 பஸ்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இதில் விதிமீறி இயக்கப்பட்ட 1,244 பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி, சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.23.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதில், ரூ.18.26 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதோடு, 8 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்ட தாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாங்காயை உடனடியாக பழுக்க வைக்க, 'கால்சியம் கார்பைடு' என்ற ரசாயன கல்லை பயன்படுத்துகின்றனர்.
    • ஆய்வில் 3 கடைகளுக்கு உடனடியாக தலா ரூ.2000 அபராதமாக விதிக்கப்பட்டது

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் தருமபுரி நகரப் பகுதியில் உள்ள வாழைத்தார் மண்டி, மாம்பழ மண்டிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    தருமபுரி பழ மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, சாத்துக்குடி, பப்பாளி உள்ளிட்ட பல வகை பழங்களும் விற்பனைக்கு வருகின்றன.

    இயற்கையாக கனியும் பழங்கள், நம்மை கவர்ந்து இழுக்கும் வாசனையுடன் மிகவும் ருசியாகவும், உடல் நலத்துக்கு பாதிப்பு இல்லாததாக இருக்கும்.ஆனால், வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், மாங்காயை உடனடியாக பழுக்க வைக்க, 'கால்சியம் கார்பைடு' என்ற ரசாயன கல்லை பயன்படுத்துகின்றனர். ரசாயன பொருளில் இருந்து வெளியாகும்,

    வெப்பத்தை தாங்க முடியாமல், 2நாட்களுக்குள், மாங்காய் முழுமையாக பழுத்துவிடும். இந்த பழங்களை உண்பவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

    சிறு பாக்கெட்டில் வரும் எத்திலின் ரசாயன பொடியை, தண்ணீரில் கரைத்து, பழங்கள் மீது தெளிக்கின்றனர். இவ்வாறு எத்திலின் ரசாயனம் தெளித்த பழங்கள் இயற்கையாக வரும் வாசனை இன்றி காணப்படும். அதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள வாழைத்தார் மண்டிக்கு வரும் வாழைத்தார்களை இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கும் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வாழைப் பழங்கள் இயற்கையாக பழுப்பதற்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் ஆகும் நிலையில் வியாபாரிகள் ரசாயன பொடியை நீரில் கலந்து வாழைத்தார் மீது ஊற்றி விட்டால் ஒரே நாளில் பழம் பழுத்து பளபளவென்று எலுமிச்சை கலரில் கண்ணை பறிக்கும் இதை பொதுமக்கள் வாங்கி உண்ணும் பொழுது வயிற்றுப்போக்கு உடல் உபாதைகள் என பல நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகுகின்றனர். இதுகுறித்து நேற்று முன்தினம் மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து நேற்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பானு சுஜாதா தலைமையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால் கந்தசாமி குமணன் உள்ளிட்டோர் தருமபுரி நகரப் பகுதியில் உள்ள 15 க்கும் மேற்பட்ட வாழைத்தார் மண்டி, மாம்பழம் மண்டிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் இருந்த எத்திலின் பொடி பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது சந்தேகத்திற்குரிய கடைகளில் வாழைத்தார்களை ஆய்வு செய்ததில் 50 கிலோவுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் கருத்து அழுகிய நிலையில் காணப்பட்டது அவைகளை ஆய்வுக்கு மேலும் 3 கடைகளுக்கு உடனடியாக தலா ரூ.2000 அபராதமாக விதிக்கப்பட்டது.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டமனுக்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் பழனி அதிரடி.

    விழுப்புரம்,:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டார். மேலும் இதில் தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.பின்னர் இந்தகூட்டத்தில் சுமார் 414 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சித்ரா விஜயன் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கூட்டுறவு இணை பதிவாளர் நளீனா, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி.) விஸ்வநாதன், உதவி ஆணையர் (கலால்) சிவா, உதவி இயக்குநர், நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×