என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு சிறப்பு பஸ்கள்"
- கட்டணமாக ஒரு நபருக்கு நெல்லையில் இருந்து ரூ.300-ம், சங்கரன்கோவிலில் இருந்து ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது.
- நவகைலாய கோவில்களுக்கு சென்று வர ஒரு நபருக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நெல்லை:
மகா சிவராத்திரி மற்றும் மகா பிரதோஷத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை கோட்டம் சார்பில் வரும் 18-ந் தேதி மகா சிவராத்திரி மற்றும் மகா பிரதோஷத்தையொட்டி நெல்லை மற்றும் சங்கரன்கோவிலில் இருந்து இரவு 8 மணிக்கு பஞ்ச பூத தலங்களான தாருகாபுரம், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திரும்பி வரும் வகையில் நெல்லை புதிய பஸ்நிலையம், சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணமாக ஒரு நபருக்கு நெல்லையில் இருந்து ரூ.300-ம், சங்கரன்கோவிலில் இருந்து ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் 18-ந் தேதி அன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு நவ கைலாயங்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திரும்பி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவகைலாய கோவில்களுக்கு சென்று வர ஒரு நபருக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக சங்கரன்கோவில் மற்றும் நெல்லை புதிய பஸ் நிலையங்களில் இன்று (10-ந் தேதி) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்