search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவிஞர் காசிமுத்து மாணிக்கம்"

    • பா.ஜ.க.வில் 19 வேட்பாளர் நிறுத்தி 11 பேருக்கு டெபாசிட் போனதுதான் மிச்சம்.
    • ஆட்சி தானே கவிழ்ந்து மீண்டும் புதிய பிரதமர் வருவார்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் கங்கா ஆர். சுரேஷ் தலைமையில் சென்னை கொளத்தூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசிய தாவது:-

    தி.மு.க.வை நம்பி கூட்டணிக்கு வந்த காங்கி ரஸ் 9 சீட்டில் இருந்து 10 சீட்டாக உயர்ந்துள்ளது. பாராளுமன்ற கணக்கில் விடுதலைசிறுத்தைகள் தனிச்சின்னம் பெறும் வகையில் மாநில அந்தஸ்தும் பெற்றுள்ளது.

    ம.தி.மு.க. பாராளுமன்றத்தில் தன் பெயரை புதிதாக பதிவு செய்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் மாநிலங்களவையில் கால் பதிய இருக்கிறது.

    பா.ஜ.க.வில் 19 வேட்பாளர் நிறுத்தி 11 பேருக்கு டெபாசிட் போனதுதான் மிச்சம். ஒன்றிய அரசில் நாங்கள்தான் என்று இறுமாப்பாக சொல்ல வேண்டாம்.

    1998-ல் 13 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்த வாஜ்பாய் ஆட்சிபோல் இன்று உங்கள் நிலைமை. அன்று மாதத்திற்கு இருமுறை ஒன்றிய அமைச்சர்கள் மாறி மாறி கூர்காபோல போயஸ் தோட்டத்து வாசலில் நின்றனர். அதுபோல்தான் இன்றைய நிலைமை. நிதிஷ்குமார் வீட்டிலும், சந்திரபாபு நாயுடு வீட்டிலும் நிற்கத்தான் போகிறீர்கள்.

    கிழவி பஞ்சாங்கம் பார்த்து மஞ்சள் பூசிக்கொண்டாளாம் என்ற கதையில் பா.ஜ.க.வில் சிலர் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டு சேர்ந்திருந்தால் கூடுதலாக வந்திருக்கும் என கூறுகின்றனர்.

    இந்தியா கூட்டணியில் கூட மம்தாவுடன் கூட்டுடன் மேற்கு வங்கத்தில் நின்றிருந்தால் ஒரிசாவில் பிஜூ பட்நாயக்குடன் நின்றிருந்தால், உ.பி.யில் மாயாவதியுடன் நின்றிருந்தால் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி கூட அமைக்க முடியாமல் போயிருக்குமே.

    கடவுளே கூட 5 ரவுண்டு வரை பின் தங்கினார் என்பதை புரிந்து இனி வரும் காலத்திலாவது ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. என எதிர்கட்சி அரசியல்வாதிகள் மீது திணிப்பதை நிறுத்துங்கள். இல்லையேல் 1998 போல பா.ஜ.க ஆட்சி தானே கவிழ்ந்தது போல் மீண்டும் தேர்தலில் புதிய பிரதமர் வருவார். அவர் தளபதி கை காட்டும் நபராக அமர்வார்.

    இவ்வாறு கூட்டத்தில் தி.மு.க வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசினார்.

    • பென்னாகரத்தில் அ.தி.மு.க. கூட்டம் டெபாசிட் இழந்ததுபோல ஈரோட்டிலும் டெபாசிட்டை இழக்கும்.
    • இரட்டை இலை இந்த தேர்தலில் நிற்பதால் அ.தி.மு.க.வின் பல பிரிவை காட்டிலும் அதிகம் மகிழ்வது தி.மு.க.தான்.

    சென்னை:

    தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆளும் கட்சியின் இரட்டை இலையை தனது சுயேட்சை சின்னமான குக்கரால் 40 ஆயிரம் வாக்குகளில் வெல்ல முடிந்த தினகரன் இன்று சின்னம் கிடைக்காததால் நிற்கவில்லை என்பது பாடத்தெரியாதவன் பசுந்தமிழையும் ஆடத்தெரியாதவன் மேடையையும் குறை சொன்னதனைப்போல உள்ளது.

    விடிய விடிய சிலம்பம் ஆடிவிட்டு விடிந்த பின் கிழவியை அடித்த கதையாய் நிற்காத தேர்தலுக்கு தினகரன், ஓ.பி.எஸ். இத்தனை கமிட்டிகளா? வெல்வது தளபதி தான் என்று தெரிந்தும் எதற்கு இந்த கானல்நீர் ஆர்ப்பாட்டம்.

    பென்னாகரத்தில் அ.தி.மு.க. கூட்டம் டெபாசிட் இழந்தது போல ஈரோட்டிலும் டெபாசிட்டை இழக்கும். திண்டுக்கல்லில் மருங்காபுரியில் அ.தி.மு.க. வென்றதுபோல் ஈரோட்டில் வெல்லும் என்று செங்கோட்டையன் கூறுகிறார்.

    1980-ல் இரட்டை இலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 38 இடங்களில் தோற்றதையும் 1996-ல் பர்கூரில் ஜெயலலிதாவே இரட்டை இலையில் சுகவனத்திடம் தோற்றதையும் பென்னாகரத்தில் 2010-ல் இரட்டை இலை டெபாசிட் இழந்ததையும், 2017-ல் சுயேட்சை சின்னத்திடம் ஆளும் கட்சியாக இருந்துகொண்டு இரட்டை இலை 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதையும் மறக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன்.

    அ.தி.மு.க. கட்சியை விட்டு நீக்கியதாக சொல்லப்பட்ட ஓ.பி.எஸ்.சிடமும் அவரது ஆதரவாளர்களுக்கு கடிதம் விடுத்ததும் இரட்டை இலையை பெறுகின்ற சூழல் என்றால் அதை வேண்டாம் எனக்கூறி புதிய சின்னம் வாங்கி உங்கள் செல்வாக்கை நிரூபித்து இருக்கலாமே? தன்மானத்துடன் வெளியேறி இருக்கலாமே?

    இரட்டை இலை இந்த தேர்தலில் நிற்பதால் அ.தி.மு.க.வின் பல பிரிவை காட்டிலும் அதிகம் மகிழ்வது தி.மு.க.தான். ஏனெனில் தேர்தல் தோல்விக்கு பின் இரட்டை இலை இருந்திருந்தால் வென்று இருப்போம் என நழுவும் பேச்சுக்கு இடம் தராமல் இப்போதே தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து வெல்வது நல்லது.

    தளபதியின் இரண்டு ஆண்டு ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். சிலருக்கு நோட்டாவுடன் போட்டி, அ.தி.மு.க.வுக்கு டெபாசிட்டுடன் போட்டா போட்டி. மதுரையில் சிலம்போடு கோவலன் கதை முடித்தது, ஈரோட்டில் இடைத்தேர்தலோடு எடப்பாடி கூட்டம் கதை முடிந்தது என்பதை இந்த தேர்தல் காட்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×