search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடாஷா ஸ்டான்கோவிக்"

    • இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • மகன் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என பெயர் சூட்டினர்.

    இந்நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார். இன்ஸ்டா பயோ-வில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டு இருப்பதை அடுத்து, இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவை எல்லாம் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தனது மகன் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "என் வாழ்க்கையில் இவ்வளவு அன்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்ததற்கு நன்றி. முழு மனதுடன் உன்னை நேசிக்கிறேன். எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஹர்திக் - நடாஷா ஜோடி பிரிந்துவிட்டதாக கடந்த சில வாரங்களாக தகவல் வெளியானது.
    • திருமணம் செய்த போது எடுத்துக் கொண்ட படங்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடாஷா ஸ்டான்கோவிக் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதிக்கு குழந்தை உள்ளது.

    ஹர்திக் - நடாஷா ஜோடி பிரிந்துவிட்டதாக கடந்த சில வாரங்களாக தகவல் வெளியானது. முன்னதாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியிலும் நடாஷா பங்கேற்காதது, இன்ஸ்டாவில் இருந்து தனது திருமண புகைப்படங்களை நீக்கியது உள்ளிட்டவை இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர் என்ற தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய படங்களை தற்போது ரிஸ்டோர் செய்துள்ளார். நடாஷா இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஹர்திக் பாண்டியாவை திருமணம் செய்த போது எடுத்துக் கொண்ட படங்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளது.


    அந்த வகையில், நடாஷா தனது கணவரை பிரியவில்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

    • வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயரை நீக்கியுள்ளார்.
    • பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதி சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் பதிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருவரின் புகைப்படங்களை நடாஷா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட, அவை பலரின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

    இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார். இன்ஸ்டா பயோ-வில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டு இருப்பதை அடுத்து, இருவரும் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இந்த தம்பதியிடையே ஏதும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டதோ என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என பெயர்சூட்டினர்.

    இந்த நிலையில், சமூக வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயர் நீக்கியது, ஐ.பி.எல். 2024 தொடரின் போட்டிகளின் போது வராமல் இருந்தது, மற்றும் இருவர் தொடர்பான புகைப்படங்கள் நீக்கப்பட்டு இருப்பது இருவரும் உண்மையில் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. 

    • இந்த ஜோடிக்கு திருமணம் நடந்த போது இந்தியாவில் கொரோனா தாக்குதல் உச்சகட்டத்தில் இருந்தது.
    • திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனை ஒன்றை முழுவதுமாக வாடகைக்கு எடுத்துள்ளார்.

    உதய்பூர்:

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கு மீண்டும் பிரமாண்ட முறையில் திருமணம் நடக்கவிருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான ஆதியா ஷெட்டியை திருமணம் செய்துக்கொண்டார். இதே போல மற்றொரு ஸ்டார் வீரர் அக்ஷர் பட்டேலும் திருமணத்தை நடந்தி முடித்தார்.

    இந்நிலையில் தான் இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். தனது மனைவி நடாஷாவை தான் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறாராம்.

    ஹர்திக் பாண்ட்யாவும், செர்பியாவை சேர்ந்த நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்து மே மாதத்திலேயே திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த நடாஷாவுக்கு 2020-ம் ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது. திருமணமாகி 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழலில் தற்போது பிரமாண்ட திருமணத்திற்கு ஆசைப்பட்டுள்ளனர். 

    இந்த ஜோடிக்கு திருமணம் நடந்த போது இந்தியாவில் கொரோனா தாக்குதல் உச்சகட்டத்தில் இருந்தது. இதனால் நண்பர்கள், உறவினர்கள் யாரையும் பெரியளவில் அழைக்க முடியாமல் மிகவும் எளிமையாக செய்துவிட்டனர். எனவே காதலர் தினமான இன்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது இந்திய வீரர்கள் எவ்வித போட்டியும் இல்லாமல் உள்ளனர் என்பதால் அனைவரும் கலந்துக்கொள்ள வாய்ப்புள்ளது.


    2-வது முறையாக திருமணம் என்றாலும் அது சாதாரணமாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. ஏனென்றால் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனை ஒன்றை முழுவதுமாக வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு திரைப்படங்களில் காட்டப்படுவதை போல பல கோடிகள் செலவில் மிகப்பெரிய வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

    பாண்ட்யாவின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் உலகின் நட்சத்திரங்கள் அனைவருக்கும் பலமான விருந்து பரிமாரப்படவுள்ளது. அவர்களுக்காக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் உயரிய உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    ×