என் மலர்
நீங்கள் தேடியது "பயங்கரவாதி சுட்டுக்கொலை"
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த 15 பேர் உதவி செய்தது தெரியவந்தது.
- பாண்டி போரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஜமீல் அகமது வீடு உள்ளது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.
நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள், அவா்களின் கூட்டாளிகள் , ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தி உள்ளனா்.
பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 100-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையாக முதலில் 2 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.
அதை தொடர்ந்து தெற்கு காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பிற வெடி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் மேலும் 4 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. பாண்டி போரா, புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் வீடுகளை தகர்த்தனர்.
சோபியான் மாவட்டத்தில் உள்ள வாண்டினா பகுதியில் பயங்கரவாதி அத்னன் ஷபி வீடு உள்ளது. அவன் கடந்த ஆண்டு முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். அவனது வீடு இடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தில் உள்ள அமீர் நசீர் என்ற பயங்கரவாதியின் வீடு தகர்க்கப்பட்டது.
பாண்டி போரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஜமீல் அகமது வீடு உள்ளது. 2016-ம் ஆண்டு முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அவனது வீட்டை பாதுகாப்பு படை வீரர்கள் இடித்து தரைமட்டமாக்கினார்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த பயங்கரவாதி பரூக் அகமது வீடு குப்வாரா மாவட்டம் கலாரசில் உள்ளது. அவனது வீட்டை அதிகாரிகள் குண்டு வைத்து தகர்த்தனர்.
கடந்த 48 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகரில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த 15 பேர் உதவி செய்தது தெரியவந்தது. இதில் முக்கியமான 3 நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பயங்கரவாதிகளின் அட்டூழியம் காஷ்மீரில் தொடர்கிறது. சமூக ஆர்வலர் அவர்கள் சுட்டுக்கொன்றனர்.
குப்வாரா மாவட்டம் காந்திதாஸ் பகுதியை சேர்ந்தவர் குலாம் ரசூல். 45 வயதான அவர் சமூக ஆர்வலர் ஆவார். நள்ளிரவில் அவரது வீட்டை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். குண்டு பாய்ந்து பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமூக ஆர்வலரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கான காரணம் தெரியவில்லை. இதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
- கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
- இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது.
ஒட்டாவா:
கனடாவை சேர்ந்தவன் ஹர்தீப்சிங் நிசார். காலிஸ்தான் பயங்கரவாதியான இவன் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். இது தொடர்பாக இவன் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இவன் மீது பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் நடந்த இந்து மத தலைவர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்ததால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவனை தேடி வந்தனர்.
சமீபத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது. அவன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்தனர். அவனை பயங்கரமாக தேடி வந்த நிலையில் கனடாவில் கொல்லப்பட்டு உள்ளான். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தான்.
- அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான்.
கராச்சி:
இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கராச்சியில் அந்த அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது பெயர் அட்னான் அகமது என்கிற அபு ஹன்சாலா சம்பவத்தன்று இவனை வீட்டின் அருகே மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அட்னான் அகமது உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை.
சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தான். அந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதுவின் நெருங்கிய கூட்டாளியாகவும், வலது கரமாகவும் இருந்து வந்தான். ஹபீஸ் சயீது காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் நடந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் ஆவான்.
கடந்த 2015-ம் ஆண்டு உத்தம்பூரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
13-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் ஹபீஸ் சயீதுவை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தான் அவனது முக்கிய கூட்டாளி அட்னான் அகமது சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளான். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கும், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்கும், அட்னான் அகமதுவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் அந்நாட்டு ராணுவம் உதவி செய்து வந்தது.
தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் பணம் உள்ளிட்ட உதவிகளை அவர்கள் செய்து வந்தாக கூறப்படுகிறது.
2016-ம் ஆண்டு பாம்பேர் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அட்னான் அகமது முக்கிய பங்காற்றினான்.
இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான்.
பாகிஸ்தானை பொறுத்தவரை சமீப காலமாக பல பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான மவுலானா மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியான தாவூத் மாலிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
- துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து 4 இடங்களில் தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ஜம்மு காஷ்மீர்துணை நிலை கவர்னர் மனோஜ்சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலை அமித்ஷா வழங்கினார்.
இந்நிலையில் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள அரகம் பகுதியில் நேற்றிரவு 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.