என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதின் மேனன்"

    • விராட் கோலி 44 ரன்கள் எடுத்த போது எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.
    • விராட் கோலி சர்ச்சைக்குரிய விதத்தில் வெளியேறுவது இது 3 முறை ஆகும்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-நாள் உணவு இடைவேளை வரை 88 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து விராட் கோலி - ஜடேஜா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது.

    விராட் கோலி 44 ரன்கள் எடுத்த போது நடுவரின் நிதின் மேனனின் சர்ச்சைக்குரிய முடிவால் ஆட்டமிழந்தார். மேத்யூ வீசிய 50-வது ஓவரின் மூன்றாவது பந்தில் கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனபோது இந்த சம்பவம் நடந்தது. பந்து பேட் மற்றும் பேடில் ஒரே நேரத்தில் பட்டது. எம்சிசி விதிப்படி பந்து ஒரே நேரத்தில் பேட் மற்றும் பேடில் பட்டால் நாட் அவுட் ஆகும்.

    ஆட்டமிழந்து வெளியேறிய கோலி டிரஸ்சிங் அறையில் வைக்கப்பட்டிருந்த டிவியில் பார்க்கும் போது தான் அவுட் இல்லை என்பதை அறிந்து கோபத்தை வெளிக்காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டுவிட்டரில் நாட் அவுட் ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

    விராட் கோலி சர்ச்சைக்குரிய விதத்தில் வெளியேறுவது இது 3 முறை ஆகும்.

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
    • முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கான நடுவர்கள் குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை. ஐ.சி.சி.யின் நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் போட்டி நடுவர்கள் குழுவில் முன்னாள் வேகப்பந்து வீரரான ஜவகல் ஸ்ரீநாத்த் இடம் பெற்றனர். இந்த இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் பாகிஸ்தான் செல்ல இயலாது என்று நிதின் மேனன் அறிவித்து விட்டார். தொடர்ந்து நான்கு மாதங்களாக பணியாற்றி வருவதால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு ஸ்ரீநாத் கேட்டுக் கொண்டார். இதை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டது.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடர் கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் விவரம்:

    நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), கிறிஸ் கபானி (நியூசிலாந்து) மைக்கேல் காப், ரிச்சர்டு கெட்டில் போரோ, அலெக்ஸ் ஹர்ப் (இங்கிலாந்து) அட்ரியன் ஹோல்ஸ்டாக் (தென் ஆப் பிரிக்கா) பால் ரீபெல், ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அசன் ராசா (பாகிஸ்தான்) ஷர்பதுல்லா (வங்கதேசம்), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்).

    போட்டி நடுவர்கள்: டேவிட் பூன் (ஆஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்லே (இலங்கை), ஆண்ட்ரூ பைகிராப்ட் (ஜிம்பாப்வே).

    ×