என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமலா ஹாரிஸ்"

    • உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது.
    • ரஷிய ராணுவம் உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என்றார் கமலா ஹாரிஸ்.

    பெர்லின்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் சுமார் ஓராண்டு காலமாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் இருதரப்பிலும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜெர்மனி நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள முனிச் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    உக்ரைன் மீதான போரில் ரஷியா மிக மோசமான போர் குற்றங்களை செய்திருக்கிறது. உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது. கொலை, பாலியல் பலாத்காரம், அடித்து துன்புறுத்துதல், மின்சாரம் பாய்ச்சுவது உள்ளிட்ட சித்ரவதைகளை ரஷிய ராணுவம் பொதுமக்கள் மீது நிகழ்த்தியுள்ளது.

    உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரஷியாவிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் தங்கள் குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். போர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஷிய ராணுவத்தின் அத்துமீறல்களை நாம் கவனித்து வருகிறோம். இது தொடர்பாக நமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள், ரஷிய ராணுவம் உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளது என்பதை நிரூபிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.
    • துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

    அதே சமயம் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கிஹாலே, விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளனர்.

    இதனிடையே ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்தன. ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்திருந்தார். எனினும் அதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை ஜோ பைடன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்க வேண்டிய ஒரு தருணம் உள்ளது. அவர்களின் அடிப்படை சுதந்திரங்களுக்காக நிற்க வேண்டும். இதுவே நம்முடைய கொள்கை என்று நான் நம்புகிறேன். அதனால்தான் நான் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எங்களுடன் சேருங்கள். வேலையை முடிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் துணை ஜனாதிபதியான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கர்களாகிய நாம் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது ஜனநாயகம் அதற்காகப் போராடுவதற்கான நமது விருப்பத்தைப் போலவே வலுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் ஜோ பைடன் மற்றும் நானும் மறுதேர்தலில் போட்டியிடுகிறோம்" என தெரிவித்துள்ளார்.

    • நம் இரு நாடுகளும் எதிர்காலத்தை வடிவமைப்போம்.
    • நமது கூட்டு, இந்த நூற்றாண்டில் மகத்தான சாத்தியங்களை கொண்டிருக்கிறது.

    வாஷிங்டன் :

    பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு முதல்முறையாக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அவர் நேற்று முன்தினம் அந்த நாட்டின் பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அமெரிக்க நளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இருமுறை பேசிய இந்தியப் பிரதமர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

    மோடியின் அமெரிக்க பயணம் குறித்து அந்த நாட்டின் துணை ஜனாதிபதியான இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் டுவிட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார். அதில் அவர், "இந்திய-அமெரிக்க கூட்டு, இதுவரை இல்லாத வகையில் வலிமையாகி உள்ளது. நாம் இன்னும் வளமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க பாடுபட்டுக்கொண்டிருப்பதால், நம் இரு நாடுகளும் எதிர்காலத்தை வடிவமைப்போம்" என கூறி உள்ளார்.

    மேலும், " அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையோன கூட்டு, 21-ம் நூற்றாண்டில் மிகவும் முக்கியமானது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நமது கூட்டினை, விண்வெளியில் இருந்து ராணுவம் வரை, தொழில் நுட்பம் தொடங்கி வினியோகச்சங்கிலிகள் வரை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    கமலா ஹாரிசுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

    அந்தப் பதிவில் அவர், " நமது கூட்டு, இந்த நூற்றாண்டில் மகத்தான சாத்தியங்களை கொண்டிருக்கிறது. நானும் நமது கூட்டுறவை எதிர்காலம் சார்ந்த துறைகளில் உயர்த்துவதில் சம அளவில் உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

    • இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது.
    • சிறு வயதில் தாத்தாவுடன் நடந்த உரையாடல்கள் எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க துணை அதிபரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் விருந்து அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி. அந்நாட்டுடன் நான் ஆழமாக இணைந்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள வரலாறு மற்றும் போதனைகள் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவை நிச்சயமாக முழு உலகத்தையும் வடிவமைத்துள்ளன.

    இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது. என்னையும் என் சகோதரி மாயாவையும் சிறு வயதில் எங்களது தாய் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு அழைத்து செல்வார்.

    மெட்ராசில் (சென்னை) இருந்த தாத்தா-பாட்டியை பார்க்க செல்வோம். எனது வாழ்க்கையில் மிகவும் முக்கிய நபர்களில் என் தாத்தா ஒருவர். என் குழந்தை பருவம் முழுவதும் நண்பர்களாக இருந்தோம்.

    எனது தாத்தா, காலை வேளையில் தனது நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது நான் அவரது கையை பிடித்து கொண்டு அவர்கள் பேசுவதை கவனமாக கேட்பேன். சுதந்திர போராட்ட வீரர்கள், இந்தியாவின் சுதந்திரம் பற்றி தெரிந்து கொண்டேன். ஊழலை எதிர்த்து போராடுவதன் முக்கியத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான முக்கியத்துவம் பற்றி அவர்கள் பேசியது எனக்கு நினைவு இருக்கிறது.

    சிறு வயதில் தாத்தாவுடன் நடந்த உரையாடல்கள் எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனது தாத்தா பி.வி.கோபாலனிடமிருந்தும் என் தாய் ஷியாமளாவின் அர்ப்பணிப்பு, உறுதி, தைரியம் ஆகியவற்றில் இருந்தும் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் நான் உங்கள் முன்பு துணை அதிபராக நிற்பதற்கு காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
    • விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம்.

    உலகிலேயே மிகவும் அதிகாரமிக்க பதவி எது என்றால்? அது அமெரிக்க அதிபர் பதவிதான். வல்லரசு நாடுகளின் முதன்மையான அமெரிக்காவின் அதிபருக்கு இருக்கும் சலுகைகள், அதிகாரங்கள், பாதுகாப்புகள் போன்றவை உலகின் மற்ற எந்த நாட்டு தலைவருக்கும் இருக்காது. உதாரணமாக அமெரிக்க அதிபரை கைது செய்ய முடியாது. அமெரிக்க அதிபரின் உத்தரவை நிறைவேற்ற அந்த நாட்டு படைகள் எப்போதும் தயாராக இருக்கும்.

    அப்படிப்பட்ட அமெரிக்க அதிபர் பதவிக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த அதிபர் தேர்தல் 2020-ம் ஆண்டு நடந்தது. அடுத்த தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறுகிறது. அமெரிக்கா, இந்தியாவை போல ஒரு ஜனநாயக நாடு என்றாலும், நமக்கும் அவர்களுக்குமான தேர்தல் முறைகள் முற்றிலும் மாறுப்பட்டவை..

    அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் இடையேதான் அதிபர் தேர்தலில் எப்போதும் போட்டி இருக்கும். அதிபர் வேட்பாளரை தேர்தெடுக்க இந்த கட்சிகள், தங்களுக்குள் ஒரு தேர்தலை நடத்தும். அதில் யாருக்கு ஆதரவு கிடைக்கிறதோ அவர்தான் அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர். கடந்த முறை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஏற்கனவே அதிபராக இருந்த டெனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் ஜோபைடன் வெற்றி பெற்றார்.

    அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோபைடன், ராபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதில் ஜோபைடனுக்கு 80 வயது ஆகி விட்டதால் அவருக்கு பதிலாக, தற்போது துணை அதிபரான கமலா ஹாரிஸ்(58) அதிபர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது. இவர் போட்டியிட்டால், அவருக்குத்தான் அதிக ஆதரவு இருக்கிறது. எனவே கமலா ஹாரிஸ்தான் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    குடியரசு கட்சி சார்பில் கடந்த முறை அதிபராக இருந்த டெனால்டு டிரம்ப், பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே, உள்பட 13 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர். அதில் டெனால்டு டிரம்ப், விவேக் ராமசாமி இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். டெனால்டு டிரம்ப் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதால் விவேக் ராமசாமிதான் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் சொல்ல தொடங்கி உள்ளன.

    அதன்படி அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமியும்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை வரும்பட்சத்தில் அமெரிக்க அதிபருக்கு போட்டியிடும் 2 தமிழர்கள் என்று சொல்லலாம். அதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

    கமலா ஹாரிஸ், பூர்வீகம் தமிழகம் ஆகும். இவரது முன்னோர் மன்னார்குடி அருகில் துளச்சேந்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். அதே போல் விவேக் ராமசாமி பிறந்தது அமெரிக்காதான். ஆனால் அவர்களது பூர்விகம் தமிழ்நாடு, தாய்மொழியும் தமிழ் தான். அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள வடக்கஞ்சேரியில் வசித்தவர்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம். மேலும் அவர் வயது வெறும் 37 தான். இவர் வெற்றி பெற்று அதிபர் ஆனால் மிகக்குறைந்த வயதுடைய அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.

    தொழில்முனைவோராக இருக்கும் அவர், தற்போது அமெரிக்க மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது.

    • லேண்டரில் இருந்து வெளியேறிய ரோவர் சில மணி நேரங்களில் நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது.
    • சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

    மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேற்றத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்களின் சீரிய முயற்சியால் லேண்டரின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது.

    இந்நிலையில், நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • இந்த தீபாவளி விருந்தில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
    • இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

    அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம்.

    இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவித்தார்.

    • அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
    • முன்னாள் அதிபரான அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் களம் இறங்கியுள்ளார். அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு உள்ளது.

    அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார். அவரும் டிரம்ப் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது

    இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது கமலா ஹாரிஸ் கூறியதாவது:

    டொனால்டு டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. இதனால்தான் நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்கிறேன்.

    டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. நாம் பயப்படும்போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும். ஜனநாயக கட்சியினரை மீண்டும் போராட அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.

    • காசா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
    • அங்கு நடக்கும் நிலை மனிதாபிமானமற்றவை.

    ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைய இருக்கும் நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காமல் உள்ளது. ஒரு முறை மட்டுமே ஒருவாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அதன்பின் இரு தரப்பிற்கிடையில் போர் நிறுத்தத்திற்கு முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியில் முடியவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன் உணவு வாங்க கூடியிருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினார். மேலும், நிவாரணப் பொருட்கள் அமெரிக்க விமானங்கள் மூலம் வான்வழியாக காசா மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் உடனடி போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "காசா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். அங்கு நடக்கும் நிலை மனிதாபிமானமற்றவை. நமது மனிதநேயம் நம்மைச் செயல்படத் தூண்டுகிறது. இஸ்ரேல் அரசு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியை இன்னும் அதிகரிக்க வேண்டும். இதில் விதிவிலக்கு என்பதே கிடையாது.

    உடனடியாக போர் நிறுத்தம் தேவை. பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆறு வாரம் போர் நிறுத்தம் இன்னும் அதிகமான உதவிப்பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடைய உதவியாக இருக்கும்." என்றார்.

    • இந்த விவாத நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.
    • அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் காண்கின்றனர்.

    இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகவும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார்.

    எனவே இந்த விவாத  நிகழ்ச்சியால் பைடன் இந்த நிலைமையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்ற விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பைடன் அதன்பின் ஆற்றிய உரையிலும்கூட டெலிபிராம்டரில் END OF THE QUOTE - உரை முடிந்தது என்று எழுதப்பட்டிருந்ததையும் சேர்த்து வாசித்தது சர்ச்சையாகியுள்ளது.

    அவரது கட்சிக்குள்ளிருப்பவர்களே பைடன் அதிபர் தேர்தலில் நிற்காமல் இருப்பதே நல்லது என்று கருத்து கூறி வருகின்றனர். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்ச்சல் ஒபாமா பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர். பைடனின் தடுமாற்றம் அமெரிக்க மக்களிடையேயும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிஎன்என் தொலைக்காட்சி தற்போது கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதன்படி தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிஎன்என் கருத்துக்கணிப்பின்படி, டிரம்பா பைடனா என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் டிரம்புக்கும் 43 சதவீதம் பேர் பைடனுக்கும் ஆதரவளித்துள்ளனர்.

    அதேசமயம் டிரம்பா கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் டிரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். டிரம்பை விட வெறும் 6 சதவீத வித்தியாசத்தில் மட்டுமே கமலா ஹாரிஸ் உள்ளார். டிரம்பை விட மிட்ச்சல் ஒபாமா 11 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

     

    ஆனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கமலா ஹாரிஸுக்கு பெண் வாக்காளர்களின் ஆதாரவு கணிசமாக உள்ளது. எனவே கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக அதிக வாய்ப்பு உள்ளது என்று இதன்மூலம் தெரியவருகிறது. 

    • அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
    • ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோபை டன் (வயது 81), குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் டிரம்ப்பை துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். லாஸ்வேகாசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலாஹாரிஸ் பேசியதாவது:-

    டிரம்பின் ஆலோசகர்கள் 900 பக்க வரைபடத்தை உருவாக்கி, "திட்டம் 2025" என்று அழைக்கிறார்கள். இது சமூகப் பாதுகாப்பைக் குறைக்கும் திட்டம். இதில் கருத்தடைக்கான அணுக்களை கட்டுப்படுத்தும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இனப்பெருக்க சுதந்திரத்தின் மீதான டிரம்பின் முழு தாக்குதலாக இருக்கும்.

    டிரம்ப்புக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் கருக்கலைப்பை தடை செய்யும் தேசிய கருக்கலைப்பு தடையில் கையெழுத்திடுவார். ஆனால் நாங்கள் அதை நடக்க அனுமதிக்கப் போவதில்லை. ஏனென்றால், பெண்களை நாங்கள் நம்புகிறோம். பெண்களுக்கு அவர்களின் சொந்த நலனில் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.

    அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. டிரம்ப் நமது ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார். அவர் அமெரிக்க ஜனநாயகத்தை சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார். எனது தாய் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார். அவரது வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள் இருந்தன.

    அவை தனது இரண்டு மகள்களை வளர்ப்பது மற்றும் மார்பக புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவை ஆகும். எனது தாய் அவரது கனவுகளைத் தொடர யாரிடமும் அனுமதி கேட்கவில்லை.

    இது நமது வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் கடினமாக இருக்கும் என்பதை எப்போதும் அறிந்திருக்கிறோம். சில நாட்களாக அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவது என்பது எளிதானது அல்ல என்பதை நினைவூட்டுகிறது. ஆனால் அதிபர் ஜோபைடனைப் பற்றி நாம் அறிந்த ஒன்று என்னவென்றால் அவர் ஒரு போராளி. இவ்வாறு அவர் கூறினார்.

    • 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும் தடுமாற்றமும் குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
    • நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'ரஷிய அதிபர் புதின்' என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

    அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தற்போதய அதிபர் ஜோ பைடனின் செயல்கலும் பேச்சும் சமீப காலமாக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. மீண்டும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிற்கும் 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும்  தடுமாற்றமும் குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    சமீபத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்புடன் நேருக்கு நேர் நடந்த விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடனின் உரையில் அதிக இடத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. சில நொடிகளுக்கு எந்த அசைவும் இன்றி ஜோ பைடன் உறைந்து நின்ற சம்பவமும் நடந்தது. அதைத்தொடர்ந்து ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்க வேண்டுமா என அவரது கட்சிக்குள்ளேயே கூச்சல் குழப்பங்கள் எழுந்துள்ளன. தான் ஒருபோதும் தேர்தலில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று பைடன் உறுதியாக நிற்கிறார்.

    ஆனால் பைடனின் பேச்சில் உள்ள தடுமாற்றம் குறைந்தபாடில்லை. நேற்று அமெரிக்காவில் வைத்து  நடந்த நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'ரஷிய அதிபர் புதின்' என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இன்று நடந்த பிக் பாய் கருத்தரங்கத்தில் துணை அதிபர் காமலா ஹாரிஸ் என்று சொல்வதற்கு பதிலாக 'துணை அதிபர் டிரம்ப்' என்று பைடன்  குறிப்பிட்டுள்ள வீடியோவும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

    இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி  பைடனின் தடுமாற்றம் குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார். டிரம்ப் விமர்சனத்தைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், 'அவர் [டிரம்ப்] சொல்வதைக் கேளுங்கள்' என்று தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு பைடன் தன்னையே கறுப்பின துணை அதிபருடன் அதிபராக பணியாற்றும் அமரிக்காவின் முதல் கறுப்பினப்  பெண் தான்தான் என்று பைடன் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தன்மீதான சந்தேகங்களை நீக்க மருத்துவர்கள் பரிமதுரையின்பேரில் நரம்பியல் பரிசோதனைக்கும் தான் தயார் என்று பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×