search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமலா ஹாரிஸ்"

    • புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார்.
    • அங்கு காணப்பட்ட மர்ம நபரை நோக்கி அவரது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். இதனால் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையே, புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் காணப்பட்ட மர்ம நபரை நோக்கி அவரது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

    இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் புளோரிடாவில் உள்ள அவரது சொத்துக்களுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்திகள் குறித்து எனக்கு விளக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • ரோம் திரும்பும் விமானத்தில் போப் பிரான்சிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இருவரும் வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என்றார்.

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், சிங்கப்பூர் சென்றுவிட்டு ரோம் திரும்பும் விமானத்தில் போப் பிரான்சிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் அமெரிக்க தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் ஆகிய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் வாழ்க்கைக்கு எதிரானவர்கள்.

    புலம்பெயர்ந்தோரை துரத்துகிறவராக இருந்தாலும் சரி, அல்லது குழந்தைகளைக் கொல்பவராக இருந்தாலும் சரி. இரண்டும் வாழ்க்கைக்கு எதிரானது.

    இரண்டு தீமைகளில் குறைவானதை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு தீமைகளில் குறைவானவர் யார்? அந்தப் பெண்மணி அல்லது அந்த ஜென்டில்மேன் எனக்குத் தெரியாது.

    அமெரிக்க கத்தோலிக்க வாக்காளர்கள் தங்கள் மனசாட்சியை ஆராய்ந்து வாக்களிக்கச் செல்வதற்கு முன் அந்த முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்.
    • எலான் மஸ்கின் மகள் வில்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்தார். இதையடுத்து, டெய்லர் ஸ்விஃப்ட்டின் இன்ஸ்டா பதிவை கிண்டலடிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "நீங்கள் வென்றுவிட்டீர்கள் டெய்லர், நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன், அதோடு உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்" என்று பதிவிட்டார்.

    எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வரிசையில், எலான் மஸ்கின் மகள் வில்சன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இது குறித்த பதிவில் அவர், "நானும் அந்த பதிவை பார்த்தேன். அதில் நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை. இது மிகவும் வெளிப்படையானது, என்பதை நீங்கள் பார்க்கவில்லை என்றால், நீங்கள் பிரச்சனையின் ஒரு அங்கமாக இருக்கின்றீர்கள். மக்கள் உங்களிடம் அப்படி பேசுவதை அனுமதிக்க வேண்டாம். இது அருவருப்பாக உள்ளது."

    "கமலா ஹாரிஸ்-ஐ டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரிப்பதற்கு இதை விட சிறந்த சமயம் எதுவும் இருக்க முடியாது. தேர்தலில் ஸ்விஃப்டீஸ் வாக்களிப்பதை காண காத்திருக்கிறேன். நீலத்திற்கு ஓட்டுப்போடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

    • உள்ளே வருபவர்கள் வளர்ப்பு பூனைகளையும் நாய்களையும் கொன்று சாப்பிடத் தொடங்கி உள்ளனர்.
    • உரிமையாளர்களுடன் சோபாவில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்தது கோல்டன் ரெட்ரீவர் நாய்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். சுமார் 1 மணிநேரம் 45 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்தில் நாட்டிலும் சர்வதேச அளவிலும் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசாரமாக விவாதித்தனர். அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து குடியேறுபவர்களின் மீதான வெறுப்பு டிரம்ப்பின் முன்வைக்கும் அரசியலில் பிரதானமானது.

    2017 முதல் 2021 வரை அவர் அதிபராக இருந்தபோது குடியேற்றம் மீதான கடுமையான போக்கை அவர் கடைபிடித்தார். இந்நிலையில் கமலா ஹாரிஸுடன் நடந்த விவாதத்திலும் டிரம்ப்பின் குடியேற்றவாசிகள் மீதான வெறுப்பு வெளிப்பட்டுள்ளது. விவாதத்தின்போது பேசிய டிரம்ப், ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்ப்ரிங்பீல்ட் -இல் குடியேற்றவாசிகள், மக்களின் வளர்ப்பு நாய்களை கொன்று சாப்பிடுகின்றனர். [அமெரிக்கா] உள்ளே வருபவர்கள் வளர்ப்பு பூனைகளையும் நாய்களையும் கொன்று சாப்பிடத் தொடங்கி உள்ளனர். இதுதான் தற்போது இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று பேசியிருந்தார்.

    ஆனால் டிரம்ப் கூறியதற்கு எந்த விதமான ஆதரங்களும் இல்லை என்றும் இணையத்தில் பரவிய வதந்திகளை டிரம்ப் உண்மை போல பேசி வருவதாகவும் கண்டனங்கள் எழுந்தன. டிரம்ப் மீண்டும் மீண்டும் பேசியதையே பேசி வருவதாக கமலா ஹாரிஸும் விவாதத்தின்போது தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டிரம்ப் நாய்களை குடியேற்றவாசிகள் கொன்று சாப்பிடுவதாக விவாதத்தில் பேசுவதை தனது உரிமையாளர்களுடன் சோபாவில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று அங்கிருந்து எழுந்து சோபவின் பின்னால் ஒளிந்துகொண்டு பயத்தில் வெலவெலத்து நிற்பதை அந்த உரிமையாளர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து  இந்த  வீடியோ இணையத்தில் சுமார் 14 மில்லயன் பார்வைகளையும் தாண்டி வைரலாகி வருகிறது. நாயின் ரியாக்ஷனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் டிரம்பை கலாய்த்து வருகிறனர். இதற்கிடையே குடியேற்றவாசிகள் நாய்களை சாப்பிடுவதாக டிரம்ப் கூறிய கருத்துக்கு வெள்ளை மாளிகையும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கமலா ஹாரிஸ்க்கு எதிராக நான் வெற்றி பெற்றதை கருத்துக்கணிப்பு தெளிவாக காட்டுகிறது.
    • இதனால் அவர் உடனடியாக 2-வது விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு விவாதத்தில் சந்திக்க கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் கமலா ஹாரிஸின் வேண்டுகோள் செவ்வாய்க்கிழமை விவாதத்தில் அவர் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டுகிறது. அதை சரி செய்வதற்கான மீண்டும் ஒரு விவாதத்தை எதிர்நோக்குகிறார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    செவ்வாய்க்கிழமை விவாதத்தின்போது பொருளாதாரம், குடியேற்றம், கருக்கலைப்பு தடை ஆகியவற்றை பற்றி இரண்டு பேரும் காரசார விவாதம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அமெரிக்காவை சீர்குலைத்தவர். சீனாவுக்கு அமெரிக்காவை விற்றவர் என டொனால்டு டிரம்ப்-ஐ கமலா ஹாரிஸ் கடுமையாக சாடினார்.

    அதேவேளையில் கமலா ஹாரிஸ் ஒரு மார்சிஸ்ட். அவர் இஸ்ரேலை வெறுக்கிறார் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.

    • விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
    • டிரம்ப் பெரும்பாலும் உண்மைகளில் இருந்து விலகிச் சென்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    நேற்று இருவரும் பங்கேற்ற நேரடி விவாத நிகழ்ச்சி பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் நடந்தது. இதை ஏ.பி.சி ஊடகம் நடத்தியது.

    இதில் பொருளாதாரம், குடியேற்றம், ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல்-காசா போர், நிர்வாகம், கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு விவாகரங்கள் குறித்து காரசாரமாக விவாதித்தனர்.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிரித்த முகத்துடனும், டிரம்ப் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருந்தனர். விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக பலர் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேரடி விவாதத்தில் வெற்றியாளர் யார் என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் டிரம்பை கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளினார்.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிசுக்கு 63 சதவீத பேர் ஆதரவு தெரிவித்தனர். டிரம்புக்கு 37 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் மற்ற ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளிலும் கமலா ஹாரிசே முன்னிலையில் உள்ளார்.

    சி.என்.என் ஊடகம் கூறும்போது, "டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அமெரிக்க வாக்காளர்கள் பரவலாக ஒப்புக்கொள்கிறார்கள்" என்று தெரிவித்தது.

    வாஷிங்டன் போஸ்ட் கூறும்போது, "டிரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் கூர்மையான கருத்துகளை முன்வைத்தார். டிரம்ப் பெரும்பாலும் உண்மைகளில் இருந்து விலகிச் சென்றார்" என்றது.

    நியூயார்க் டைம்ஸ் கூறும்போது, "கமலா ஹாரிஸ் தெளிவான செய்தியை வழங்கினார். அதே நேரத்தில் டிரம்ப் கோபமாகவும் தற்காப்புடனும் தோன்றினார்" என்று தெரிவித்தது.

    எம்.எஸ்.என்.பி.சி ஊடகம் கூறும்போது, "கமலா ஹாரிஸ் விவாதம் முழுவதும் நிதானமாகவும், தகுதியுடனும் இருந்தார். டிரம்ப் விரக்தியடைந்து காணப்பட்டது தெளிவாக தெரிந்தது" என்று தெரிவித்தது.

    இதன்மூலம் விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

    • கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.
    • கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும் விவாதங்களாலும் சூடு பிடித்து வருகிறது. ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார்.

    நேற்றைய தினம் கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இதில் டிரம்புடன் காரசாரமாக எதிர்வாதம் செய்து கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பாப் இசைப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் தான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கப்போவதாகத் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக அவர் பதிவிட்ருந்தார். இதனால் டென்ஷனான உலக பணக்காரருக்கு டிரம்ப் ஆதரவாளருமான எலான் மஸ்க், நான் உங்களுக்கு குழந்தை தருகிறேன், உங்களது பூனையை பார்த்துக்கொள்கிறேன் என்று காட்டமாக தெரிவித்திருந்தார் .

    இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. Fox & Friends என்ற நேர்காணலில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகன் ஒன்றும் இல்லை, அவர் [டெய்லர்] மிகவும் முற்போக்கான ஒருவர், எப்போதும் அவர் ஜனநாயகவாதிகள் பக்கமே நின்றுள்ளார். அதற்கான விலையை அவர் நிச்சயம் செலுத்துவார் என்று துன்று தெரிவித்துள்ளார். மேலும் டெய்லர் ஸ்விஃப்ட் ஐ விட தனக்கு ஆதரவளிக்கும் பிரிட்னி மஹோம்ஸ் ஐ தான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். பிரிட்னி மஹோம்ஸ் முன்னாள் கால்பந்து பிரபலமும் டெய்லர் ஸ்விஃப்ட் இன் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்துள்ளார்.
    • 33 வயதான டெய்லர் ஸ்விஃப்ட் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு வாக்களிக்கப் போவதாக உலக புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்துள்ளார்.

    டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    அவரது இன்ஸ்டா பதிவில், தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக அவர் பதிவிட்டுள்ளார்.

    33 வயதான டெய்லர் ஸ்விஃப்ட் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆதலால் அவருக்கு குழந்தைகள் இல்லை. அதை குறிக்கும் விதமாக Taylor Swift - Childless Cat Lady என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, டெய்லர் ஸ்விஃப்ட்டின் இன்ஸ்டா பதிவை கிண்டலடிக்கும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நீங்கள் வென்றுவிட்டிர்கள் டெய்லர், நான் உங்களுக்கு ஒரு குழந்தையை தருகிறேன், அதோடு உங்கள் பூனையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    எலான் மஸ்க்கின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • நமது பொருளாதாரத்தை கமலா ஹாரிஸ் சீர்குலைத்து விட்டார்.
    • கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும்- டிரம்ப்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தின்போது இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர்.

    கமலா ஹாரிஸ் "நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறது. மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவேமாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால் அவர் மீது வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார்.

    அமெரிக்காவின் சட்டத்தின் மீது டிரம்ப்-க்கு நம்பிக்கை இல்லை. இவர் மீண்டும் அதிபரானால் நாடு தாங்காது என்று இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார். அனைவரையும் ஒன்றிணைக்கும் அதிபரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.

    டொனால்டு டிரம்ப் "கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம். அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிக குறைவாக இருந்தது. சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம். பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்" என்றார்.

    மேலும் "கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. வங்கி கடன் ரத்து என கூறி பைடன் ஏமாற்றினார். எனது பிரசாரக் கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்.

    நான் வித்தியாசமான ஆள். சரியாக பணி புரியாதவர்களை நான் பணி நீக்கம் செய்தேன். வெளியே சென்று அவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். வரலாற்றில் யாருக்கும் இல்லாத ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கும் ப்ராஜெக்ட் 2025-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை நான் படித்தது கூட இல்லை. படிக்கவும் மாட்டேன். நான் திறந்த புத்தகம். வரிகளைக் குறைப்பேன். கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும். எங்கள் கட்சி பேரணியில் பங்கேற்றவர்கள் சுடப்பட்டார்கள்" என்றார்.

    • உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள்- ஹாரிஸ்
    • இஸ்ரேலை கமலா ஹாரிஸ் வெறுக்கிறார். அதேபோல் அந்த பிராந்தியத்தில் உள்ள அரபு மக்களையும் வெறுக்கிறார்- டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் குறித்து பேசும்போது டொனால்டு டிரம்ப் "நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் இந்த நிலையை எட்டிருக்காது. கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார். அவர் அதிபராக பதவியேற்றால் 2 ஆண்டுகளில் இஸ்ரேல் அழிந்துவிடும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்த போது கூட கமலா அவரை சந்திக்கவில்லை." என்றார்.

    அதற்கு கமலா ஹாரிஸ் "டிரம்ப் சொல்வது உண்மையல்லை. இஸ்ரேலுக்கு தனது ஆதரவு" என வலியுறுத்தினார்.

    மேலும் கமலா ஹாரிஸ் "அமெரிக்காவின் துணை அதிபராக நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள். நீங்கள் அவமானம் என அவர்கள் சொல்கிறார்கள்" என நேரடி தாக்குதலை முன்வைத்தார்.

    டொனால்டு டிரம்ப் ஜோ பைடனின் நிர்வாகத் தோல்வியை தொடர்ந்து முன்வைத்து கமலா ஹாரிஸை தாக்குதல் நடத்த தொடங்கினார். இதற்கு "நீங்கள் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடவில்லை" என கமலா ஹாரிஸ் பதில் அளித்தார்.

    உக்ரைன்- ரஷியா போர் குறித்து டொனால்டு டிரம்ப் கூறுகையில் "ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நன்றாகத் தெரியும். அவர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. எனவே நான் பிரச்சனையை தீர்த்து வைப்பேன். போர் தொடங்கிய 3 நாட்களுக்கு பிறகு ஜோ பைடன் அரசு சமாதானத்துக்கு அழைப்பு விடுத்தது. நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அதிபர். கமலா ஹாரிஸ்தான் மோசமான துணை அதிபர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை ஜோ பைடனைவிட வேகமாக வெளியேற்றி இருப்போம். இதனால் பல அமெரிக்கர்கள் நம்மை விட்டுச் சென்றிருக்கமாட்டார்கள். கமலா ஹாரிஸ் எந்த நாட்டின் பாரம்பரியத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை" என்றார்.

    அதற்கு கமலா ஹாரிஸ் "இவர் எப்போதுமே நிறைய பொய்கள் சொல்வார். உலகில் சர்வாதிகாரிகளை போற்றுகிறவர். ரஷிய அதிபர் புதினை ஆதரிப்பவர். அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங்குடன் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்வதும் நம் அனைவருக்குமே தெரியும்.

    டிரம்ப் தான் அதிபரானால் ரஷ்யா- உக்ரைன் போர் 24 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று கூறுகிறார். டிரம்ப் அதிபராக இருந்தால், தற்போது புதின் உக்ரைன் தலைநகர் கீவிலேயே குடியேறி இருப்பார். டிரம்ப் இன்னும் பதவியில் இருந்திருந்தால், புதின் போலந்தில் தொடங்கி ஐரோப்பா முழுவத்தையும் தாக்க திட்டம் தீட்டி இருப்பார். புதினிடம் டிரம்ப் அடிபணிந்து விடுவார். உங்களை மதிய உணவிற்கு உண்ணும் ஒரு சர்வாதிகாரி என்று அறியப்பட்டவருடன் நட்பாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் ஜோபைடனின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேன். தலிபான் என்ற பயங்கரவாத அமைப்போடு டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தனது தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து முயற்சித்த ஒருவர். அதிபராக இருக்க விரும்பும் ஒருவர் நம்மிடம் இருப்பது ஒரு சோகம் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு வரும் அதிபரையே மக்கள் விரும்புகிறார்கள்" என பதிலடி கொடுத்தார். 

    • டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 ஆண்டுகள் தேவைப்பட்டது.
    • சீனாவின் ஆயுத பலத்தை பெருக்க டொனால்டு டிரம்ப் உதவியுள்ளார்- கமலா ஹாரிஸ்.

    அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது இருவருக்கும் இடையில் பொருளாதாரம், கருக்கலைப்பு மற்றும் குடியேற்றம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

    பொருளாதாரம் குறித்த கேள்விக்கு கமலா ஹாரிஸ் "டிரம்ப் ஆட்சி கால தவறுகளை சரி செய்யவே 4 ஆண்டுகள் தேவைப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரை உயர்த்துவதே குறிக்கோளாக கொண்டுள்ளோம். நான் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்துள்ளதால் உழைப்பவர்களை உயர்த்துவதற்காக முயற்சிப்பேன். அதுவே எனது லட்சியம்.

    டிரம்ப் ஆட்சி காலத்தில் சுகாதாரம், பொருளாதாரம் இரண்டும் மோசமாக இருந்தது. டிரம்பின் தவறான கொள்கைகளால் சீனா ராணுவம் பலமடைந்துள்ளது. சீனாவின் ஆயுத பலத்தை பெருக்க டொனால்டு டிரம்ப் உதவியுள்ளார். டிரம்ப் சீனாவிற்கு அமெரிக்காவை விற்றுவிட்டார்.

    அத்துடன் டொனால்டு டிரம்ப் கோடீஸ்வரர்களுக்கு, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவார். ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றியபோது, டிரம்ப் பொருளாதாரத்தை விட்டுவிட்டுச் சென்றார். பொருளாதாரம் குறித்து அவருக்கு எந்த திட்டமும் இல்லை" என்றார்.

    பின்னர் குடியேற்றம் குறித்து டொனால்டு டிரம்ப் டார்கெட் செய்தார். அதற்கு கமலா ஹாரிஸ் "நீங்கள் ஏராளமான பொய்கள் மற்றும் குறைகள் போன்ற பழைய கதையை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்" எனப் பதில் அளித்தார்.

    மேலும், "டொனால்டு டிரம்ப் மிகவும் மோசமான வேலைவாய்ப்பின்மையை விட்டுச் சென்றார். நூற்றாண்டின் மோசமான பொது சுகாதாரத்தை விட்டுச் சென்றார். சிவில் போருக்குப்பின் நமது ஜனநாயகத்தில் மோசமான தாக்குதலை விட்டுச் சென்றார். டொனால்டு டிரம்பின் குழபத்தை நாங்கள் சுத்தம் செய்தோம்" என்றார்.

    ஒரு கட்டத்தில் டொனால் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கமலா ஹாரிஸை தாக்கி பேசினார். "கமலா ஹாரிஸ் மார்க்சிஸ்ட். அவரது தந்தை மார்க்சிஸ்ட்" என்றார். அதற்கு கமலா ஹாரிஸ் தலையை அசைத்து சிரித்துக் கொண்டிருந்தார்.

    "கொரோனா தொற்றின்போது சிறந்த வகையில் பணியாற்ற போதுமான கடன் கிடைக்கவில்லை. கொரோனா தொற்றின்போது மிகச் சிறந்த வகையில் பணியாற்றினோம்" என்றார்.

    கருக்கலைப்பு தொடர்பான விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் "டொனால்டு டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்பு தடையை அமல்படுத்துவார்" என்றார். உடனே டிரம்ப் "கமலா ஹாரிஸ் பொய் சொல்கிறார்" என்றார்.

    நாடு தழுவிய கருக்கலைப்பு தடைக்கு வாக்கெடுப்பு நடத்துவீர்களா? என்ற கேள்விக்கு, அத்தகைய சட்டத்தை பாராளுமன்றம நிறைவேற்றாது என்றார்.

    குடியேற்றம் தொடர்பான விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் "இந்த விவகாரம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார். டொனால்டு டிரம்ப் பேரணிக்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். ஏனென்றால். இந்த பேரணியில் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக விசயங்கள் இருக்கும். "Hannibal Lecter" போன்ற கற்பனை கதாபாத்திரம் பற்றி டொனால்டு டிரம்ப் பேசத் தொடங்கினால், மக்கள் அவரது பேரணியில் இருந்து வெளியேற தொடங்கிவிடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்" என்றார்.

    அதற்கு டொனால்டு டிரம்ப் "கமலா ஹாரிஸ் பேரணிக்கு யாரும் வரமாட்டார்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய Haitian immigrants ஒகியோவில் நாய்களை சாப்பிட்டது குறித்து பேசத் தொடங்கினார்.

    • ஒவ்வொரு வேட்பாளரின் மைக்ரோபோனும் அவர்கள் பேசும் முறை மட்டுமே நேரலையில் இருக்கும்.
    • கமலா ஹாரிசுக்கும் டிரம்ப்புக்கும் இடையே நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் கமலா ஹாரிஸ்-டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாத நிகழ்ச்சி இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடக்கிறது. பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் நடக்கும் இந்த விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி ஊடகம் ஏற்பாடு செய்து உள்ளது.

    விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி தொகுப்பாளர்கள் டேவிட் முயர், லின்சி டேவிஸ் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள். 90 நிமிட விவாதம் நடைபெறும். இடையில் 2 இடைவேளை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வேட்பாளரின் மைக்ரோபோனும் அவர்கள் பேசும் முறை மட்டுமே நேரலையில் இருக்கும். மற்ற வேட்பாளரின் நேரம் இருக்கும்போது அணைக்கப்படும் என்றும், எந்தவொரு தலைப்புகளும் கேள்விகளும் வேட்பாளர்களுடன் முன்கூட்டியே பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    கடந்த ஜூன் 27-ந் தேதி ஜோ பைடனுக்கும் டிரம்ப்புக்கும் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜோபைடன் மிகவும் திணறினார்.

    இதனால் அவருக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தனது உடல்நிலை காரணமாக தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.

    அதன்பின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கும் டிரம்ப்புக்கும் இடையே நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள், தங்களது எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசி உள்ளனர்.

    ×