search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோனு நிகாம்"

    • ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது.
    • ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

    மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல கிளாசிக் படலக்ளை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடல், ஹே ராம் படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என ஆஷா போஸ்லேவின் கிரக்கும் குரலுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இந்நிலையில் தற்போது ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நேற்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை மும்பையில் வைத்து நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜாக்கி செராப் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், விழா மேடையில் வைத்து ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை முத்தமிட்டு தண்ணீரால் கழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீரால் ஆஷாவின் கால்களைக் கழுவித் துடைத்த சோனு நிகாம் பின் எழுந்து நின்று ஆஷாவுக்கு தலைவணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சோனு நிகாம் தமிழில் அஜித்தின் கிரீடம் படத்தில் இடம்பெற்ற விழியினில் உன் விழியினில், ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற ஆருயிரே, கார்த்தியின் சகுனி படத்தில் இடம்பெற்ற மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடுயுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தி மற்றும் கன்னடத்தில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர் சோனு நிகாம்.
    • இவர் செல்பி எடுக்க மறுத்ததால் எம்.எல்.ஏ. மகனின் உடன் வந்தவர்கள் இவரை தாக்கினர்.

    இந்தி மற்றும் கன்னடத்தில் பிரபலமான பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர் சோனு நிகாம். இவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். இவரது இசை நிகழ்ச்சி மும்பையில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் பட்டர்பேகரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் சோனு நிகாமுடன் செல்பி எடுக்க விரும்பினர்.


    அப்போது நேரலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்ததால் சோனு நிகாம் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் கோபம் அடைந்த எம்.எல்.ஏ. மகனின் உடன் வந்தவர்கள் பாதுகாவலர்களையும் பாடகர் சோனு நிகாமையும் கடுமையாக தாக்கினர். இதில் சோனு நிகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது சோனு நிகாம் நன்றாக இருக்கிறார், அவரது குரு, குலாம் முஸ்தபா கான், அவரது நெருங்கிய உதவியாளர், ரப்பானி கான் மற்றும் அவரது பாதுகாவலர் அனைவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    ×