என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் திட்டம்"
- ஜவுளி தொழில் துறை மற்றும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன்பெறுவர்.
- 17 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:- பல்லடம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி, விவசாயம், கறிக்கோழி உற்பத்தி தொழில் உள்ளிட்டவை பிரதானமாக உள்ளன. சரக்கு விற்பனை மட்டுமின்றி உள்ளூர் அத்தியாவசிய பொருட்கள் தேவைகளுக்கு தனியார் போக்குவரத்து வசதிகளை நம்பியே இருக்க வேண்டி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை, வண்டி வாடகை உயர்வு, ஆள் கூலி உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொழில்துறையினர் மத்தியில் இது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
போதிய ரெயில் வசதிகள் இருந்தால் உள்நாட்டு சரக்கு போக்குவரத்துக்கு பெரிதும் உதவும். இதற்காகவே பழனி - சாம்ராஜ் நகர் ரெயில் திட்டம் கடந்த 2005ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இத்திட்டம் நிறைவேறினால் ஜவுளி தொழில் துறை மற்றும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் பெரிதும் பயன்பெறுவர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவை இங்கு கொண்டு வரப்படும் போது இவற்றின் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் தொழில், வேலைவாய்ப்பு பெறுவர். பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு ரெயிலில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகள், உயிரிழப்புகளும் குறையும் வாய்ப்பு உள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். எம்.பி.,க்களும் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாத நிலையில் மத்திய அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
- முற்றிலும் முரணான தகவலை மத்திய ரயில்வே அமைச்சரே வெளியிடலாமா?
- இத்திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.
மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசு ஒருபோதும் கூறவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய ரெயில்வே அமைச்சர் 10.01.2025 அன்று மதுரை - தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியதாகவும் அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தமிழ்நாடு அரசு ஒருபோதும் எந்தவிதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
மதுரை – தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரெயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி 926.68.84 ஹெக்டேர் நில எடுப்பு செய்து ரெயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் (மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி) கேட்டுக் கொண்டதில், இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழ்நாடு அரசால் (போக்குவரத்துத் துறை) அரசாணை (நிலை) எண்.7, நாள் 24.01.2022, அரசாணை (நிலை) எண்.65, நாள் 25.04.2023 மற்றும் அரசாணை (நிலை) எண்.134, நாள் 22.09.2023 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்காணும் திட்டம் உள்ளிட்ட ஏனைய ரெயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு 19.08.2024 நாளிட்ட கடிதம் மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர், ஒன்றிய ரெயில்வே அமைச்சரை கேட்டுக்கொண்டார். அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என ஒரு மத்திய அமைச்சரே பொறுப்பற்ற முறையில் பேசலாமா? இத்திட்டத்திற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு விருதுநகர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களால் 09.08.2024, 04.09.2024, மற்றும் 27.09.2024 ஆகிய நாட்களில் முறையே தென்னக ரெயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது வரை அதற்கான பதில் ஏதும் பெறப்படவில்லை. அந்தக் கடித விவரங்களாவது மத்திய ரயில்வே துறை மந்திரிக்குத் தெரியுமா?
மேலும், 12.12.2024 நாளிட்ட அரசுக் கடிதம் மூலம் தென்னக ரெயில்வே, பொது மேலாளரிடம் தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்த தற்போதைய நிலை மற்றும் நிதி நிலை அறிக்கை கேட்டுக்கொள்ளப்பட்டது. இது குறித்து தென்னக ரெயில்வே துணைத் தலைமைப் பொறியாளர் தனது கடித நாள் 19.12.2024ல் "மதுரை – தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்டம் தொடர்பாக மீளவிட்டான் – மேலமருதூர் வரை 18 கி.மீ. அளவில் பணி முடிக்கப்பட்டுவிட்டது" என்றும் "மீதமுள்ள பிரிவுகளில் திட்டம் தொடர்வது தொடர்பாக தென்னக ரெயில்வேயால் இக்கருத்துரு குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால் கைவிடப்பட்டதாக" தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தினை கைவிடக்கோரி எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை, மாறாக இத்திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழ்நாடு அரசு இதுவரை கோரி வருகிறது. இத்திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்டதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான தகவலை ஒன்றிய ரெயில்வே துறை அமைச்சரே வெளியிடலாமா? தமிழ்நாட்டின் திட்டம் என்றாலே ஓரவஞ்சனையுடன் பார்த்து, புறக்கணிக்கும் மனப்பான்மையில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசின் எண்ணவோட்டம் தமிழ்நாடு மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா?
ஆகவே முதலமைச்சரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இத்திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென ஒன்றிய ரெயில்வே துறை மந்திரியைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தில் தமிழ்நாடு அரசிடம் எந்த நிலப்பிரச்னையும் இல்லை.
- 'தூத்துக்குடி' குறித்து கேட்கப்பட்ட கேள்வியை ‘தனுஷ்கோடி' என புரிந்துகொண்டு நான் பதிலளித்தேன்.
மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசே காரணம் என வெளியான செய்திக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தில் தமிழ்நாடு அரசிடம் எந்த நிலப்பிரச்னையும் இல்லை.
கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள ICF-ல் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தொழிற்சாலையில் அதிக இரைச்சல் இருந்ததால் செய்தியாளரின் கேள்வி தெளிவாக கேட்கவில்லை.
'தூத்துக்குடி' குறித்து கேட்கப்பட்ட கேள்வியை 'தனுஷ்கோடி' என புரிந்துகொண்டு நான் பதிலளித்தேன்.
தனுஷ்கோடி ரயில்பாதை திட்டத்தையே சுற்றுச்சூழல், நிலப்பிரச்னை காரணமாக கைவிடுமாறு தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.
இது தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பமே தவிர, மதுரை - தூத்துக்குடி திட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.