என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரைவைகோ"

    • 20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார்.
    • மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார்.

    சென்னை:

    ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருப்பவர் மல்லை சத்யா. கட்சியின் மூத்த நிர்வாகி என்பதோடு கட்சி தொடங் கப்பட்டது முதல் வைகோவுடன் பயணித்து கொண்டு இருப்பவர்.

    கட்சி நலிவடைந்த போது எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பாலவாக்கம் சோமு போன்ற முக்கிய நிர்வாகிகள் வெளியேறினார்கள். ஆனாலும் எந்த சலனமும் இல்லாமல் மல்லை சத்யா வைகோவுடனேயே இருக்கிறார்.

    இந்த நிலையில் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் உச்ச கட்டத்தை அடைந்து திருச்சி யில் ம.தி.மு.க.வினர் மல்லை சத்யாவை நீக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு சென்றிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை தாயகத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது. வைகோ முன்னிலையில் கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையில் துரை வைகோவின் ஆதரவாளர் சத்யகுமரன், இது துரை வைகோவின் காலம். அவரது கட்டளையை ஏற்காத, பின்பற்றாத, மதிக்காத யாராக இருந்தாலும் பெட்டியை கட்டிக் கொண்டு வாயை பொத்திக் கொண்டு வெளியேறுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார்.

    இதற்கு பதிலடி கொடுத்து மல்லை சத்யா வெளியிட்ட பதிவில் ம.தி.மு.க.வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினிவேஷம், வெளியேறு என்ற விருதுகளை எனக்கு அளித்துள்ளார்கள். அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் என்பதையும் விசுவாசமுள்ள கட்சியினர் அறிவார்கள்.

    விளிம்பு நிலை தலைமுறையில் இருந்த என்னை குன்றின் மேல் வைத்து அழகு பார்த்து, அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுவதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத் தன்மையை வைகோ அறிவார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இன்று வைகோவின் அழைப்பின் பேரில் கோயம்பேட்டில் அம்பேத் கார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும் மல்லை சத்யா பங்கேற்றார்.

    இது தொடர்பாக கருத்து கேட்க மல்லை சத்யாவை தொடர்பு கொண்ட போது எதுவும் கூற மறுத்துவிட்டார்.

    அவருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்த போது, துரை வைகோ கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அவரை சுற்றியிருக்கும் சிலர் மல்லை சத்யாவை காயப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 4 ஆண்டுகளாக அவரது பெயரை கூட சென்னையில் எந்த நிகழ்ச்சியிலும் போடக் கூடாது. சுவர் விளம்பரங்கள், பேனர்களிலும் பெயர் போட்டோக்கள் இடம் பெறக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டு உள்ளார்கள்.

    கட்சி தொடங்கியதில் இருந்து எவ்வளவு போராட் டங்கள், எத்தனை முறை ஜெயில் என்று கட்சிக்காகவே உழைத்து கொண்டிருப்பவர். தன் மீது போடப்பட்ட பல வழக்குகளை கோர்ட்டில் சந்தித்து வென்று இருக்கிறார். அவரையே அசிங்கப்படுத்தி ஓரம் கட்ட வேலை பார்க்கிறார்கள்.

    நேற்று முன் தினம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய துரை வைகோ வை சமாதானப்படுத்த ஓடியவர்களில் ஒருவர் மல்லை சத்யாவை நான் தாக்குகிறேன் தலைவரே என்று சொன்னபோதும் அதை துரை வைகோ கண்டிக்கவில்லை. எனவே அவரது மனநிலை புரிகிறது.

    20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார். மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார் என்று தெரிய வில்லை. நிச்சயம் மல்லை சத்யா கட்சியை விட்டு விலக வாய்ப்பு இல்லை. ஆனால் அவரை வெளி யேற்ற வாய்ப்பு இருப்ப தாகவே கருதுகிறோம் என்றனர்.

    நிர்வாக குழுவில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • ஏராளமான விவசாயிகள் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்றனர்.
    • மொத்தம் 19 நாட்கள் நீதி கேட்டு நெடும்பயணம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட் டத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் வரை நீதி கேட்டு நெடும்பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இந்த பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர் செல்லப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வின்ஸ் ஆண்டோ வரவேற்று பேசினார். இந்த நீதி கேட்டு நெடும் பயணத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ தொடங்கி வைத்தார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பத்மதாஸ் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் புறப்பட்டு சென்றனர். இதில் ஏராளமான விவசாயிகள் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்றனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த நீதி கேட்டு நெடும்பயணம் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக வருகிற 20-ந்தேதி டெல்லி சென்று அடைகிறது. மொத்தம் 19 நாட்கள் இந்த நீதி கேட்டு நெடும்பயணம் நடக்கிறது. 

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது.
    • வாரிசு அரசியலை பற்றி பேசக்கூடிய தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை.

    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நகர கட்டமைப்புகளை மேம்படுத்த என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன். புதுக்கோட்டை மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன். பல ஆண்டுகளாக நிறைவேறாத இந்த திட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

    அரசியலை பொறுத்தவரை என்னால் முடியாததை செய்து தருவேன் என்று கூறமாட்டேன். தேர்தல் பிரசாரத்திற்காக நான் செல்லும்போது சில திட்டங்கள், கோரிக்கைகள் எனது ககவனத்திற்கு வந்தால் அதை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன்.

    நான் நேரடி அரசியலுக்கு வந்து 4 ஆண்டுகள்தான் ஆகிறது. பலவற்றை நான் கற்றுக்கொள்ளவேண்டி உள்ளது. அரசியலை பொருத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி எனலாம். மக்களிடம் எப்படி பேசுவது? சக அரசியல் பிரமுகர்களிடம் எப்படி நடந்துகொள்வது என பல விவரங்களை நான் அறிந்துகொள்ளவேண்டி உள்ளது. வைகோ போல என்னால் செயல்பட முடியாது.

    ஆனால் முயற்சி செய்வேன். என்னை வேட்பாளராக அறிவித்ததுமே என்னிடம் இது முதல் தேர்தல் களம். உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்று கேட்டார்கள். அப்போது நான், என் மனதில் பெரிய சந்தோஷமும் கிடையாது, வருத்தமும் கிடையாது என்றேன்.

    ஆனால் நான் வெற்றி பெற்றால் லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்வது என்ற கேள்வி என் மனதில் உள்ளது. வைகோ மற்றும் தலைவர்கள் எனக்கு வழிகாட்டுவார்கள்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். தேர்தல் முடிந்தால்தான் வளர்ந்துள்ளதா என்பது தெரிய வரும்.

    இந்திய அளவில் பாரதிய ஜனதாவில் தற்போது இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலர் முத்த தலைவர்களின் மகன்கள் தான். எனவே வாரிசு அரசியலை பற்றி பேசக்கூடிய தகுதி பா.ஜனதாவுக்கு இல்லை.

    எங்கள் கட்சி நிர்வாக குழுவில் என்னை தேர்தலில் போட்டியிடுமாறு நிர்வாகிகள் பேசுகையில் நான் மறுத்தேன். ஆனாலும் நிர்வாகிகளின் தொடர் வற்புறுத்தலால் நான் சம்மதித்தேன். எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×