search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்ரன்"

    • இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது.
    • இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது.

    பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் டி12 போட்டியில் 24.75 வினாடிகளில் கடந்து சிம்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இதையடுத்து, பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.

    • சிம்ரன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘THE LAST ONE' என பெயரிடப்பட்டுள்ளது.
    • லோகேஷ் குமார் இதற்கு முன் மை சன் இஸ் கே மற்றும் N4 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    நடிகர் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் அண்மையில் அந்தகன் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் திரைப்படம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'THE LAST ONE' என பெயரிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    லோகேஷ் குமார் இதற்கு முன் மை சன் இஸ் கே மற்றும் N4 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய மை சன் இஸ் கே இதுவரை 4 விருதுகள் பெற்றுள்ளது. இந்திய உலக திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தீப்க் பக்கா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். படத்தின் பிற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லோகேஷ் குமார் இதற்கு முன் `மை சன் இஸ் கே' மற்றும் N4 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
    • சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் திரைப்படம் நடிக்கவுள்ளார்.

    நடிகர் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் அண்மையில் அந்தகன் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பிரியா ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் திரைப்படம் நடிக்கவுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    லோகேஷ் குமார் இதற்கு முன் மை சன் இஸ் கே மற்றும் N4 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய மை சன் இஸ் கே இதுவரை 4 விருதுகள் பெற்றுள்ளது. இந்திய உலக திரைப்படம் விழாழில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும், சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழாவில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தீப்க் பக்கா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். படத்தின் பிற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியா இதுவரை 25 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், பெண்கள் 200 மீட்டர் டி-12 காலிறுதி ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் 25.41 வினாடிகளில் ஓடி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • இந்தியா இதுவரை 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், பெண்கள் 100 மீட்டர் டி-12 அரையிறுதி ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் 2-வது இடம்பிடித்தார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன்.
    • படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

    தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

    சிம்ரன், பிரியா ஆனந்த் ,மனோபாலா சமுத்திரகனி, ஊர்வசி யோகி பாபு ,வனிதா விஜயகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று வெளியாகியது. பார்த்த மக்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்திற்கு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. சிம்ரன் மற்றும் ஊர்வசியின் நடிப்பு அபாரம்.

    அந்தாதூன் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தை சிறப்பாக அந்த உண்மை கதையின் சாயலை இழக்காமல் ரீமேக் செய்ததிற்கு படக்குழுவிற்கு பாராட்டுகள். படக்குழு இன்று காலை ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்தனர்.

    அதன் பிறகு பிரசாந்த், சிம்ரன் மற்றும் படக்குழுவினர் கமலா திரையரங்கில் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சங்கத்திற்காக திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய பிரசாந்த் படத்தை காண வந்த அனைவருக்கும் நன்றி எனவும், படக்குழு மற்றும் நடிகை நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தன் அப்பாவும் படத்தின் இயக்குனரான தியாகராஜாவுக்கு நன்றி தெரிவித்தார்..

    எழுத்தாளர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் இருக்கும் நபர்களை அவரது குடும்பம் என்று சுட்டிக்காட்டினார். வரும் நாட்களில் திரைப்படம் வெகு மக்கள் வந்து பார்க்கும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • `அந்தகன்' திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

    ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக பிரசாந்த் திகழ்ந்தார். பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் சினிமாக்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

    தற்போது 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

    நீண்ட நாட்களாக தள்ளிப்போன `அந்தகன்' திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது..

    இந்நிலையில், 'அந்தகன்' படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

    சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

    வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

    திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நாளை மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடப்போவதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் , பிரசாத் மற்றும் பிரபு தேவா இடம் பெற்றுள்ளனர்.

    படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரசாந்த் , அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரசாந்த் , அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் சில ஆண்டுகளாகவே எந்த அப்டேட்டுகளும் இல்லாமல் இருந்தது. வெறும் பண்டிகை நாட்களுக்கான வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் மட்டும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். பலப்பேர் இப்படம் வெளியாகாது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படம் கைவிடப்பட்டது எனவும் செய்திகள் பரவி வந்தது.

    இதெற்கெல்லாம் முற்றுப் புள்ளி  வைக்கும் வகையில் படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர். இப்படம் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான `அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும்.

    மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் சப்தம்.
    • சமீபத்தில் இப்படத்தில் லைலா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமனின் இசையில் 'மழையே மழையே' பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

     

    லைலா - சப்தம்

    லைலா - சப்தம்

    சமீபத்தில் ஈரம் படத்தின் கூட்டணியான இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சப்தம் என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. சில தினங்களுக்கு முன்பு நடிகை லைலா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    சிம்ரன் - சப்தம்
    சிம்ரன் - சப்தம்

    இந்நிலையில் சப்தம் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு நடிகர் ஆதி அறிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தொடர்சியாக நடிகைகள் இணைந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    ×