என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரத்துறை அமைச்சர்"

    • மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
    • நிலுவை கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மற்றும் பிரித்து கட்ட தவணை முறை வேண்டும்.

    மங்கலம் :

    சென்னையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எல். கே. எம். சுரேஷ், செயலாளர் ஆர். வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர் டி. எஸ்.எ சுப்பிரமணியம், பொருளாளர் கே. பாலசுப்பிரமணியம், செய்தி தொடர்பாளர் கந்தவேல், கோவை மண்டல பொறுப்பாளர் எம்.பாலசுப்பி ரமணியம், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார், மங்கலம் பகுதி விசைத்தறி சங்கத் தலைவர் ஆர்.கோபால், பல்லடம் பொருளாளர் முத்துகுமாரசாமி ஆகியோர் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிரு ப்பதாவது:-

    மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். நிலுவை கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மற்றும் பிரித்து கட்ட தவணை முறை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்பாக நேரடியாகவும் கோரிக்கை வைத்தனர். அமைச்சரை சந்தித்த பின்பு விசைத்தறி சங்கத்தினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; மின் கட்டண உயர்வால் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கூறினோம். முதலமைச்சரிடம் இது குறித்து பேசி நல்ல முடிவை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றனர். 

    • மாவட்ட வாரியாக புதிய மின் மாற்றிகளை கையிருப்பில் வைக்க மின்வாரிய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பொது மக்களிடம் மின்தடை குறித்த புகார் வந்தால் உடனடியாக சீர் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில், அதீத வெப்பத்தால் மின்தடை ஏற்படுவதை தடுக்க மின்சார வாரியத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மின்மாற்றிகள் பழுது, மின்மாற்றிகளில் தீப்பிடிக்கும் போன்ற சூழலை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாவட்ட வாரியாக புதிய மின் மாற்றிகளை கையிருப்பில் வைக்க மின்வாரிய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொது மக்களிடம் மின்தடை குறித்த புகார் வந்தால் உடனடியாக சீர் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தகுந்த பணியாளர்களை தற்காலிகமாக நியமித்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை காலத்தில் அதிகபட்ச மின் நுகர்வு நாள் ஒன்றுக்கு 22,000 மெகாவாட் வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ×