என் மலர்
நீங்கள் தேடியது "ஜோதிர் ஆதித்ய சிந்தியா"
- மாண்டியில் பசுமை விமான நிலையத்துக்கு இட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- சிம்லா விமான நிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன.
புதுடெல்லி :
டெல்லி-தர்மசாலா-டெல்லி மார்க்கத்தில் இண்டிகோ விமான சேவையை டெல்லியில் நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
சிவில் விமான போக்குவரத்து துறையில் கடந்த 65 ஆண்டுகளில் நடத்த முடியாத சாதனையை 9 ஆண்டுகளில் சாதித்துள்ளோம். 148 விமான நிலையங்கள், நீர் ஏரோடிராம்கள், ஹெலிபோர்ட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 என்ற அளவுக்கு உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
பெரிய அளவிலான மாநகர விமான நிலையங்களுக்கும், கடைக்கோடியில் உள்ள சிறிய விமான நிலையங்களுக்கும் சம முக்கியத்துவம் தரப்படும்.
தர்மசாலா விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். இதற்கு 2 கட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும். முதல் கட்டமாக தற்போதைய ஓடுதளம் 1900 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்படும். இரண்டாவது கட்டமாக ஓடுதளம் 3110 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்படும். இதனால் போயிங் 737, ஏர்பஸ் ஏ 320 ரக விமானங்கள் தரையிறங்க முடியும்.
சிம்லா விமான நிலையத்தில் ஓடுதள சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன. மாண்டியில் பசுமை விமான நிலையத்துக்கு இட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து துறை முழுமையான ஜனநாயகமயமாக்கலைக் கண்டுள்ளது,
மேலும் விமானம் பறப்பதை மட்டுமே பார்க்கக்கூடியவர்களும் இன்று விமானங்களில் பறக்கிறார்கள்.
இமாசலபிரதேசத்தில் 2013-14-ம் ஆண்டில் வாரத்துக்கு 40 விமான சேவை இருந்தது. இப்போது 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 110 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
தர்மசாலாவில், வாரத்துக்கு 28 விமான சேவை என்பது தற்போது 50 என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகி உள்ளது.
- சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டோக்கியோ-சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் இயக்குவது குறித்தும், சிங்கப்பூர் -மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை, 2019-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ் சென்னை மற்றும் டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது. கொரோனா தொற்றுநோய் காலத்தில் இது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.
நேரடி விமான இணைப்பு இல்லாததால், சென்னைக்கும் டோக்கியோவுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 7 மணி நேரம் இரட்டிப்பாகி உள்ளது. சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.
சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பேர் கணிசமான அளவில் வசித்து வருகிறார்கள். இன்னும் தமிழ்நாட்டில் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில், முக்கியமாக தென் தமிழ்நாட்டில் தொடர்புகளைக் கொண்டு உள்ளனர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர்.
சிங்கப்பூருக்கும், சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும், சிங்கப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு 3 முறை மட்டுமே விமானச் சேவை உள்ளது.
சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் கோரிக்கையை சாதகமாக பரிசீலித்திட ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்தும் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.
புதுடெல்லி :
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் விமான போக்குவரத்து துறை செயல்பாடுகள் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் முற்போக்கான கொள்கைகளால் உலகின் மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக நாம் மாறியுள்ளோம்.
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு வரை 74 விமான நிலையங்கள் (ஹெலிபோர்ட்டுகள் மற்றும் நீர்வழி நிலையங்கள் உள்பட) மட்டுமே இருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. அதாவது 148 ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 2013-14-ம் ஆண்டில் இந்தியா 6 கோடி உள்நாட்டு பயணிகளை கொண்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 135 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதைப்போலவே சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் 50 சதவீதம் (4.7 கோடியில் இருந்து 7 கோடியாக) அதிகரித்து இருக்கிறது.
மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு போக்குவரத்தும் 65 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் விமானங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை, கடந்த 2014-ல் 400 ஆக இருந்த விமானங்கள் தற்போது 75 சதவீதம் அதிகரித்து 700 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் 470 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
இது வெறும் தொடக்கம்தான். அடுத்த 5 ஆண்டுகளில் 1,200 முதல் 1,400 புதிய விமானங்கள் வரை வாங்குவதற்கு இந்திய விமான நிறுவனங்கள் ஆர்டர்களை வழங்கும்.
இதைப்போல அடுத்த 5 ஆண்டுகளில் ஹெலிபோர்ட்டுகள் மற்றும் நீர்வழி நிலையங்கள் உள்பட நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கையும் 200 ஆக உயரும்.
அடுத்த சில ஆண்டுகளில் விமான நிலையத்துறை ரூ.1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை பெறும்.
இதைப்போல 2030-ம் ஆண்டுக்குள் நாம் ஆண்டுதோறும் 45 கோடி உள்நாட்டு பயணிகளை பார்க்கலாம். விமான நிலையங்களின் திறன் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.
- சென்னை ஸ்ரீபெரும்புதூர், மோட்டார் வாகன உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களும் பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளன.
சென்னை:
வடகிழக்கு மாநிலங்களில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மத்திய வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான அமைச்சகம் சார்பில் வர்த்தகம் மற்றும் கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் அந்த துறைக்கான மத்திய மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை நகரின் வளர்ச்சி மிக அபரிமிதமானது. சென்னை, இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் உலக அளவில் மிக சிறப்பாக செயல்படுகிறது. ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது.
சென்னை ஸ்ரீபெரும்புதூர், மோட்டார் வாகன உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் 30 சதவீதம் அளவுக்கு அதன் பங்கு உள்ளது. ஏற்கனவே இருந்த டெட்ராய்ட் நகரம் இப்போது காணாமல் போய் விட்டது. சென்னை தான் உலகின் புதிய டெட்ராய்ட் நகரமாக உருவெடுத்துள்ளது.
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் உலகளவில் சிறப்பாக செயல்படுகிறது. சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் ஆண்டுக்கு திறன் மிகுந்த 50 ஆயிரம் என்ஜினீயர்களை உருவாக்குகிறது. மிக முக்கியமாக அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சென்னை தன்னிறைவு அடைந்துள்ளது. அதிகளவில் ரிங் ரோடும், மெட்ரோ ரெயிலும் உள்ளது. நகர வளர்ச்சியில் சென்னை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஒரு 'ரோல் மாடல்' ஆக இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களும் பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளன. அனைத்து கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் 15 ஆயிரத்து 600-ம், 50 ஆயிரம் கிலோமீட்டருக்கு கிராம சாலைகளும் போடப்பட்டுள்ளன.
அதேபோல் 9 விமான நிலையங்கள், 17 விமான நிலையங்களாகி உள்ளது. ரூ.81 ஆயிரம் கோடி செலவில் 19 ஆயிரத்து 109 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 65 ஆண்டுகள் பெறாத இந்த வளர்ச்சியை, வடகிழக்கு மாநிலங்கள் 10 ஆண்டுகளில் பெற்று இருப்பதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.