என் மலர்
நீங்கள் தேடியது "இ-கிராம சேவை மையம்"
- தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளுக்கும் இணையதள சேவை கிடைக்கும்.
- 31-ந் தேதிக்குள் உட்கட்டமைப்பு பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் :
பாரத்நெட் திட்டத்தில் அதிவேக இணையதள வசதியுடன் ஊராட்சிகளில் இ-கிராம சேவை மையம் அமைக்கும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது.நகரங்களுக்கு இணையாக, கிராமங்களுக்கும் இணை யதள சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கு டன், பாரத் நெட் திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளுக்கும் இணையதள சேவை கிடைக்கும். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்து றை அதிகாரிகள் கூறுகை யில், பாரத் நெட் திட்டத்தில் , இ-கிராமசேவை மையம் துவங்க இருப்பதால் 31-ந் தேதிக்குள் உட்கட்ட மைப்பு பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான பணி நிறைவடைந்த நிலையில் கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இ-கிராம சேவை மையத்தில் அதி வேக இணைய தள வசதி யுடன் ஊராட்சி மக்களுக்கு அனைத்து வகை சேவை களையும் வழங்க திட்ட மிடப்பட்டுள்ளது என்றனர்.