search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருகம்புல்"

    • விநாயகரின் உள்ளங்கவர் மூலிகை அறுகம்புல் ஆகும்.
    • இந்த வெப்பத்தால் விநாயகர் வயிற்றில் சூடு அதிகமாகி விட்டது.

    அருகம்புல்லும் விநாயகரும்!

    விநாயகரின் உள்ளங்கவர் மூலிகை அறுகம்புல் ஆகும்.

    நோய் தீர்க்கும் மூலிகைகளின் முன்னோடியாக விளங்குவது அறுகம்புல் திகழ்கிறது.

    மன ஒருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உடலைப் பேணவும் நடமாடும் தெய்வமாகத் திகழ்வது தெய்வீக மூலிகைகளேயாகும்.

    அவ்வகையில் அறுகம்புல் மகிமை மிக உன்னதமானது.

    விநாயகருக்கு உண்டான அதீதப் பசிநோய்க்கும் அறுகம்புல்லே உணவாக தரப்பட்டு நிவர்த்திக்கப்பட்டதாக விநாயகப் புராணம் கூறுகிறது.

    விநாயகப் பெருமான் ஒரு தடவை தேவர்களை காக்கும் பொருட்டு கொடியவனாகிய அனலாசுரனை விழுங்கி விட்டார்.

    இதன் காரணமாக அனலாசுரனின் கடும் வெப்பம் விநாயகரை தாக்கியது.

    இந்த வெப்பத்தால் விநாயகர் வயிற்றில் சூடு அதிகமாகி விட்டது.

    அதனால் தேவர்கள் அனைவர் வயிற்றிலும் கடும் கொதிப்பு உண்டானது.

    அனலைத் தணிக்க தேவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தனர்.

    ஆனால் என்ன செய்தும் பலனில்லை.

    அப்போது அங்கு வந்த முனிவர்கள் ஒவ்வொருவரும் 21 அருகம்புற்களை விநாயகருக்கு சாத்தினர்.

    உடனடியாக விநாயகரின் திருமேனி குளிர்ந்து விட்டது.

    அனைவரின் வயிற்றிலும் கொதிப்பு நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டது.

    அன்று முதல் விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.

    சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருப்பவர்கள் விநாயகருக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகித்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது.

    ஆரோக்கியம் பெற, உடல் கொதிப்பு தணிய நாமும் அருகம்புல் ஜூஸ் பருகலாம்.

    • அருகம்புல்லும், தாமரையும்மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது.
    • ஆறு இடங்களில் எழுச்சிபெறும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர்.

    மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது அருகம்புல்லும், தாமரை மலருமாகும். இவற்றை விற்பனை செய்ய கோவில் முன்பு பல கடைகள் உள்ளன. மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்த அருகம்புல் பற்றி ஒரு கதை உள்ளது.

    இந்திரன் முதலான தேவர்களை அப்படியே விழுங்கி விட வந்தான் எமனின் மகனான அனலாசுரன் என்ற அரக்கன்.

    தேவர்கள் பயந்து அலறியபடி ஸ்ரீவிநாயகப் பெருமானிடம் ஓடி வந்து முறையிட்டார்கள்.

    விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனை அப்படியே எடுத்து விழுங்கி விட்டார். அதனால் ஜோதியே வடிவான அவருடய திருமேனி பெரும் வெப்பத்தால் தகித்தது.

    ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு எழுந்த அந்த உஷ்ணத்தை போக்க சந்திரன் தம் ஒளிக்கதிர்களால் குளிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    சித்தியும், புத்தியும் தம் குளிர் மேனியால் ஒத்தடம் கொடுத்தார்கள். திருமால் தாமரை மலர்களால் அர்ச்சித்தார்.

    வருணன் மழை பொழிந்து விநாயகரை நன்னீரால் அபிஷேகம் செய்தான். இவ்வாறாக பலரும் பலவிதமாக பணிவிடைகள் செய்தனர். ஆனாலும் விநாயகர் உடலில் ஏற்பட்ட வெப்பம் அகலவில்லை.

    கடைசியாக மகிரிஷிகளும் முனிவர்களும் வந்து கூடி அருகம்புல்லை கட்டு கட்டாக படல் படலாக அமைத்து விநாயகர் மேல் சாற்றினார்கள். அருகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள்.

    பின்பு இரண்டிரண்டு அருகாக எடுத்து விநாயகரை நாமாவளி கூறி அர்ச்சித்தார்கள். அதனால் அவருக்கு அனலாசுரனை விழுங்கிய வெப்பம் தணிந்தது. அன்று முதல் அருகம்புல் விநாயகருக்கு பிரியமானது. அவர் அணியும் மலர்களில் முதலிடமும் பெற்றது.

    பல பிறவிகளை கடந்த ஆத்மாக்கள் மழைவழியே வந்து அருகம்புல்லின் நுனியில் துளிநீரில் பொருந்தி, பசுவயிற்றுக்குள் சென்று, பின் எருவாகி, உரமாகி பயிர்பச்சைகளுக்குள் சென்று உணவாகி, மனிதர்கள் உண்ணும் உணவில் சென்று, ஆண்களின் உயிர்நிலையில் சென்றமர்ந்து உயிரணுவாகி, பின்பு பெண் கர்ப்பத்திற்குள் சென்று பிள்ளையாகி மனிதப்பிறவி பெறுகின்றது. இதற்கு அருகம்புல் காரணமாக இருப்பதால் அது விநாயகருக்கு அணிவிக்கப்படுகிறது.

    குண்டலின் யோகத்தில் அருகு

    ஓரிடத்தில் முளைத்து கொடிபோல் நீண்டு, ஆறு இடங்களில் கிளைத்து வேரூன்றி வாழும் தன்மையுள்ளது `அருகு' இந்த தன்மையால்தான் அது `அருகு' என்றே அழைக்கப்பட்டது.

    அதுபோல் மூலவாயுவானது மூலாதாரத்தில் இருந்து எழுந்து, ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு இடங்களில் படிப்படியாக பிரவேசித்து இறுதியாக சஹஸ்ராம் என்ற இடத்தில் சென்று முழு நிலையை அடைகின்றது. இதுவே குண்டலினி சக்தி.

    ஆறு இடங்களில் எழுச்சிபெறும் குண்டலினி யோகத்தின் மூலக்கடவுள் விநாயகர் என்பதால், ஆறு இடங்களில் களைத்து எழும் அருகு அவருக்கு அணிவிக்கப்படுகிறது.

    விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அவர் யோக நிலையில் நம்மை முன்னேறச் செய்வார் என்பது யோக நூல்களின் கருத்து. எனவே மணக்குள விநாயகரை தரிசிக்க செல்லும்போது மறக்காமல் அருகம்புல் வாங்கிச் செல்லுங்கள்.

    கஜபூஜை

    மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது. அதன் பெயர் லட்சுமி. இந்த யானையை வைத்து பக்தர்கள் அடிக்கடி கஜபூஜை நடத்துக்கிறார்கள். கஜபூஜை செய்வதால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.

    இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது. லட்சுமி யானை புதுவை மக்களால் பெரிதும் பேரன்புடன் கண்டு செல்லக்கூடிய ஒரு நிலை இன்று உள்ளது. மணக்குள விநாயகர் கோவில் நுழைவாயலில் முன் லட்சுமி நின்று கொண்டு வரும் பக்தர்களை வரவேற்பதை நாம் இன்றும் காண முடியும். பல குழந்தைகள் லட்சுமியை காண்பதற்காக இங்கு வருகின்றனர்.

    • கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்பது சிவன்மலை முருகப்பெருமானின் அருள்வாக்கு.
    • 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    கொங்கு மண்டலத்தில் புகழ்மிக்க கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்பது சிவன்மலை முருகப்பெருமானின் அருள்வாக்கு.

    இந்த கோவிலில்தான் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட வேண்டிய பொருளை கூறி வருவதும், அதன்படி அந்த பெட்டியில் அப்பொருளை வைத்து பூஜை செய்யப்படுவதும் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். கனவில் முருகப்பெருமானின் உத்தரவு கிடைக்கப்பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறுவார். கோவில் நிர்வாகிகள் சாமியிடம் பூ போட்டு கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலைய பகுதியை சேர்ந்த முருக பக்தரான கற்பகம் (வயது 56) என்ற பெண் பக்தரின் கனவில் உத்தரவான நந்தியாவட்டம் பூ, அருகம்புல், துளசி ஆகியவை நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த 13-ந் தேதி முதல் 7 கிலோ அரிசி, 5 லிட்டர் நல்லெண்ணெய் வைத்து பூஜை செய்யப்பட்டது. தற்போது ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் நந்தியாவட்டம் பூ, அருகம்புல், துளசி போன்றவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியும் என பக்தர்கள் கூறினர்.

    ×