என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருகம்புல்"

    • நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான்.
    • நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும்.

    நமது வீடுகளில் செடி வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு செயல் ஆகும். அதுவும் பெண்களுக்கு மிகவும் பிடித்த செயலாகும். நம் பாட்டி காலத்தில் வீடுகளில் மூலிகை செடிகளை வளர்ப்பது வழக்கம். ஆனால் நாம் அழகு சார்ந்த செடிகளையே தற்போது வளர்க்கிறோம். முன்பெல்லாம் உடல் நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே மூலிகை செடிகளை வைத்து கசாயம் வைத்தோ அல்லது பத்து போட்டோ சரிசெய்து விடுவார்கள்.

    ஆனால் விஞ்ஞானம் வளர வளர அனைவரும் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்ற தொடங்கிவிட்டோம். இப்போதும் ஒரு சில மூலிகைகளை வைத்து நமது வீடுகளிலேயே சளி, இருமல், காய்ச்சல், அடிப்பட்ட காயங்களுக்கு மருந்து என நாமே சில விஷயங்களை செய்யலாம். அப்படி எந்த மூலிகை செடிகள் நமது வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம் வாங்க...

    நொச்சி

    நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும்.

    ஆடாதொடை: பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

    தூதுவளை

    தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.

    கற்பூரவல்லி

    கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


    அருகம்புல்

    அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

    நிலவேம்பு

    நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும்.

    நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும்.


    சோற்றுக் கற்றாழை

    கற்றாழையில் உள்ள நுங்கு போன்ற சதையை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளில் சாப்பிட்டால் அந்த பிரச்னைகள் பறந்துப் போகும். செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.

    மஞ்சள் கரிசாலாங்கண்ணி

    இது தலை முடிக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

    துளசி

    துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

    • மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவிலில் மயூரவல்லி தாயாருக்கு வெள்ளிக்கிழமை வில்வ இலைகளால் அர்ச்சனை நடைபெறுகிறது.
    • இந்த அர்ச்சனையால் திருமண தடைகள் விலகி திருமணம் நடைபெறுவதாக ஐதீகம்.

    திருமணத் தடை நீங்க!

    மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவிலில் குடிகொண்டுள்ள மயூரவல்லி தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வில்வ இலைகளால் அர்ச்சனை நடைபெறுகிறது.

    இந்த அர்ச்சனையால் திருமண தடைகள் விலகுவதாக ஐதீகம்.

    அர்த்தமுள்ள அருகம்புல்!

    விதை எதுவும் போடாமல் முளைப்பதுதான் அருகம்புல். மனிதனது ஆன்மாவுக்கும் ஆதாரம் ஏதும் இல்லை.

    இப்படி அருகம்புல் போல வந்த ஆத்மாவை உன்னிடம் நிறுத்தி வழிபடுகிறேன்.

    எனது ஆன்மாவை தூய்மைப்படுத்த அருகம்புல்லைப் போட்டு வணங்குகிறேன் என்பதுதான் அருகம்புல் வழிபாட்டின் அர்த்தமாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடும் வெயிலில் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர, அழிந்து போகாது.
    • குடல் புண்களை ஆற்றும் சக்தி இந்த அருகம்புல்லுக்கு உண்டு.

    முன் காலத்தில் கவுண்டின்யர் என்ற முனிவர் இருந்தார். அவர் எப்போதும் விநாயகப்பெருமானுக்கு, அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்தார்.

    இதை பார்த்துக் கொண்டிருந்த முனிவரின் மனைவி, "எதற்காக விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குகிறீர்கள்? என்று கேட்டாள். உடனே கவுண்டின்யர், விநாயகருக்கு அருகம்புல் வழிபாடு வந்ததற்கான காரணத்தை தன்னுடைய மனைவிக்கு கூறினார்.

    அது ஒரு புராணக் கதை யாகும். அதனை நாமும் தெரிந்து கொள்ளலாம். அது எமலோகம், எமன் வீற்றிருந்த சபையில் அனைவரும் இசை இசைத்துக் கொண்டிருந்தனர். பாடல்கள் பாடி நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    தேவலோக கன்னிகளான ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகிய மூவரும் இசைக்கு ஏற்ப அற்புத நடனம் ஆடினர். அவர்களின் நடனத்தை அந்த சபையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களில் திலோத்தமையின் நடனம் எமனை கவர்ந்தது. அவளது அழகும் தான். அவனுக்கு காமம் தலைக்கேறியது.

    தன்னுடைய சபையில் பலரும் கூடியிருக்கிறார்கள் என்பதையும் மறந்து, ஓடிச் சென்று திலோத்தமையின் கரங்களை வலுவாக பற்றினான். எமதர்மன், தகாத இந்த செயலால் எந்த கேடு விளையப்போகிறதோ என்று, அங்கிருந்த அனைவரும் திகைத்தனர்.

    ரம்பையும், ஊர்வசியும் அங்கிருந்து ஒடி மறைந்தனர். அதையெல்லாம் காணும் நிலையில் எமன் இல்லை. தர்மத்தை நிலை நிறுத்தும் அவனுக்கு, இப்போது காமமே தலைதூக்கி நின்றது. அதனால் திலோத்தமையின் கரங்களை மேலும் வலுவாக பற்றினான்.

    அவனது காமம் திரண்டு, சுக்கிலமாக வெளியேறியது. அதன் மூலம் ஒரு அசுரன் தோன்றினான். அவன் வெப்பத்தால் தகித்தான். அவன் தொட்டதெல்லாம் நெருப்பில் பொசுங்கியது. அவன் வாயில் இருந்தும் நெருப்பு வெளிப்பட்டது. இதனால் அவன் 'அனலாசுரன்' என்று அழைக்கப்பட்டான்.

    தேவர்களையும், மக்களையும், முனிவர்களையும் தன்னுடைய வெப்பத்தால் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அவர் தன் படையுடன் சென்று அனலாகானுடன் போரிட்டு, அவனை வீழ்த்தினார்.

    கீழே விழுந்த அவன் மீது, வருணன் கடும் மழை பொழிவித்தான். குளிர்ச்சியான சந்திரன், அனலாகரன் மீது தன்னுடைய குளிர் கதிர்களை பாய்ச்சினான்.

    இதையடுத்து விநாயகப்பெருமான், அனலாசுரன் அருகில் சென்றார். அவனை சிறிய உருவமாக மாற்றிய விநாயகர், அவனை அப்படியே விழுங்கி விட்டார்.

    அப்போது விநாயகரின் வயிற்றில் சூடான வெப்பம் ஏற்பட்டது. அது கடுமையான வெப்பத்தை உண்டாக்கி, விநாயகரை அவதிப்படுத்தியது. சிவபெருமான் தன்னுடைய குளிர்பாணங்களை விநாயகர் மீது எய்தார்.

    ஆனாலும் அவரது வெப்பம் தணியவில்லை. கங்கை தன்னுடைய குளிர்ச்சியான நீரால்,விநாய கரை நீராட்டினாள். அதுவும் பலன் அளிக்க வில்லை. இறுதியாக ஒரு முனிவர், அருகம்புல்லை விநாயகரின் மீது வைத்தார்.

    அதன் குளிர்ச்சியால், அவருக்குள் இருந்த வெப்பம் தணிந்தது. வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் நிறைந்த அந்த அருகம்புல், விநாயகரின் முக்கியமான வழிபாட்டுப் பொருளாக மாறிப்போனது.


    அருகம்புல் எல்லா காலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. மழை இல்லாமல் கடுமையான கோடை நிலவினாலும் கூட அருகம்புல் வளரும். கடும் வெயிலில் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர, அழிந்து போகாது. சிறிதளவு மழை பெய்தாலும் அருகம்புல் பசுமையாக துளிர்விட்டு வளர்ந்து விடும்.

    சாதாரண புல் போன்று காட்சி தரும் இந்த அருகம் புல், அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த அருகம்புல், உடல் சூட்டை அகற்றும், சிறுநீர் கடுத்தால் அதனை குணமாக்கும்.

    நாள்பட்ட குடல் புண்களை ஆற்றும் சக்தி இந்த அருகம்புல்லுக்கு உண்டு. இவற்றைப் பருகி வருபவர்களின் ரத்தத்தை தூய்மையாக்கும். கண்பார்வையை தெளிவாக்கும். இப்படி பல ஆற்றல்களை கொண்ட அருகம்புல்லைத் தான், விநாயகர் தன்னுடைய விருப்பமான அர்ச்சனைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்.

    ×