என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "ஜான்டி ரோட்ஸ்"
- இந்திய அணியின் கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
- இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை:
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதில் கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.
குறிப்பாக கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே கவுதம் கம்பீர் பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அரசியலில் இருந்து விலகிய கவுதம் கம்பீர், கேகேஆர் அணியின் ஆலோசகராக பணியாற்றி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணியின் கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் குழுவை கவுதம் கம்பீர் தேர்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்புக்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் பணியாற்றிய போது, அதே லக்னோ அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர் ஜான்டி ரோட்ஸ்.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை, பஞ்சாப், லக்னோ உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கும் பீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். இதனால் கவுதம் கம்பீர் குழுவில் ஜான்டி ரோட்ஸ் இடம்பெறுவதற்காக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார்.
- இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை.
இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் நாளை முதல் துவங்குகிறது. இந்த தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருக்கும் அவரிடம் தற்சமயத்தில் உலக அரங்கில் அசத்தும் டாப் 3 ஃபீல்டர்களை பெயரிடுமாறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் தான் தற்போதைய நிலையில் ஒரே சிறந்த ஃபீல்டராக இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
தற்போதைய நிலைமையில் ரவீந்திர ஜடேஜா மட்டும்தான் இருக்கிறார். பொதுவாக ஐபிஎல் துவங்கும் போது தான் அனைவரும் பீல்டிங் துறையில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/03/30/1858010-jadeja.webp)
மேலும் 50 ஓவர் கிரிக்கெட்டில் உங்களுக்கு போதுமான நேரம் இருக்கும். அதில் 6 -7 வீரர்கள் சுமாராக இருந்தாலும் பீல்டிங் துறையில் அசத்தும் 3 -4 வீரர்களை வைத்து வெற்றி காணலாம். ஆனால் ஐபிஎல் துவங்கிய 2008 முதல் பீல்டிங் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த 12 - 13 வருடங்களில் அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் ஒரு அணியில் இருக்கும் 2 - 3 ஃபீல்டர்களை பற்றி மட்டுமே பேசுவோம்.
ஆனால் இப்போது அணியில் அனைவரும் மிகச் சிறந்த ஃபீல்டர்களாக இருக்க வேண்டும் என்ற வளர்ச்சியை நோக்கி வந்துள்ளோம். மேலும் பீல்டிங் துறையில் கவனம் செலுத்துவது அவ்வளவு கடினமானதல்ல. ஏனெனில் அது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய துறையாகும். தற்போது பேட்டிங், பவுலிங் போலவே பீல்டிங் பயிற்சியாளர்களும் தினம்தோறும் அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றி தங்களது வேலையை முடிக்கிறார்கள். இப்போது பீல்டிங் என்பது கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது என்று கூறினார்.