என் மலர்
நீங்கள் தேடியது "சாய் சுதர்சன்"
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 160 ரன்களை மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார். பட்லர் 24 பந்தில் 39 ரன்னும், சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
சூர்யகுமார் யாதவ் 28 பந்தில் 48 ரன்னும், திலக் வர்மா 39 ரன்னும் எடுத்து வெளியேறினர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மும்பை அணியின் 2வது தோல்வி இதுவாகும்.
குஜராத் அணி சார்பில் சிராஜ், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- சாய் சுதர்சன் அரைசதம் விளாசினார்.
- கடைசி 3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2025 சீசனின் 9-ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடினர். இதனால் குஜராத் அணி பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்கோர் 8.3 ஓவரில் 78 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 27 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். சாய் சுதர்சன் 33 பந்தில் அரைசதம் அடித்தார். பட்லர் 24 பந்தில் 39 ரன் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷாருக்கான் 9 ரன்னில் ஏமாற்றம் அளித்து வெளியேறினார். அப்போது குஜராத் 15.3 ஓவுரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் அணி 10.5 ஓவரில் 100 ரன்னையும், 15.5 ஓவரில் 150 ரன்னையும் கடந்தது.
4-ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் ரூதர்போர்டு ஜோடி சேர்ந்தார். 17-ஆவது ஓவரில் 2 சிக்சருடன் குஜராத் அணிக்கு 19 ரன்கள் கிடைத்தன.
18-ஆவது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். குஜராத் ஒரு சிக்சருடன் 9 ரன்கள் அடித்தது. சாய் சுதர்சன் 41 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார்.
19-ஆவது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராகுல் டெவாட்டியா ரன்அவுட் ஆனார். அடுத்த பந்தில் ரூதர்போர்டு ஆட்டமிழந்தார். ரபாடா ஒரு சிக்ஸ் அடிக்க, குஜராத் 2 விக்கெட்டை இழந்து 7 ரன்கள் அடித்தது.
கடைசி ஓவரை சத்தியநாராயண ராஜூ வீசினார். குஜராத் இந்த ஓவரின் ஒரு விக்கெட்டை இழந்தது, ஆனால் ஒரு சிக்சருடன் 10 ரன்கள் அடித்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
- சென்னை அணியில் இம்பேக்ட் பிரேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார்.
- குஜராத் அணியில் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார்.
ஐபிஎல் 16-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் ஏதாவது புதிய விதிமுறை அறிமுகத்திற்கு வரும். அந்த வகையில் இந்த முறை 'இம்பேக்ட் பிளேயர்' என்கிற முறையை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புதிய விதியின் படி, டாஸ் போடும் போது வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன், மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். அந்த 5 பேரில் இருந்து ஒருவரை, ஆட்டத்தின் நடுவில் களமிறக்கலாம்.
அது பந்து வீச்சாக இருந்தாலும் சரி, பேட்டிங் வரிசையாக இருந்தாலும் சரி, அது அந்த அணியின் விருப்பம். அதே நேரத்தில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே, கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரை களத்தில் இறக்க முடியும். ஒருவேளை 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால், ஐந்தாவதாக மற்றொரு வெளிநாட்டு வீரரை 'இம்பேக்ட் ப்ளேயராக' களத்தில் இறக்க முடியாது.
இந்த புதிய விதியை தன்னுடைய முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயன்படுத்தியது. குஜராத்திற்கு எதிராக களமிறங்கிய சென்னை அணியின் அம்பாதி ராயுடு பேட்டிங் செய்த நிலையில், சென்னை அணி பீல்டிங் செய்யும் போது, அவருக்கு பதிலாக 'இம்பேக்ட் பிரேயர்' முறையில் துஷார் தேஷ்பாண்டே மாற்றப்பட்டார்.
3.2 ஓவர்களை வீசிய அவர், 51 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். 15.30 எக்கானமியை பெற்றார். இவ்வாறு களம் கண்டதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் 'இம்பேக்ட் ப்ளையர்' என்கிற பெருமையை பெற்றார் தேஷ்பாண்டே.
இதேபோல குஜராத் அணியிலும் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். குஜராத் அணி பீல்டிங் செய்யும் போது சிக்சரை தடுக்க சென்ற வில்லியம்சனுக்கு காலில் அடிப்பட்டதால் அவர் பாதிலேயே வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் பேட்டிங் செய்தார்.
அவர் 17 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருவரும் சொல்லி கொள்ளும் அளவுக்கு எந்த இம்பேக்ட்டும் கொடுக்கவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.
- அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
- அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும்.
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்தது.
குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சகா 14 (7), சுப்மன் கில் 14 (13), கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே தடுமாறியது.
அந்த நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடனும் நிதானமாகவும் ரன்களை குவித்து சரிவை சரி செய்தார்.

மேலும் அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 62* (48) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் சாய் சுதர்சன் இன்னும் ஓரிரு வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க முடியும் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும். கடந்த 15 நாட்களில் அவர் செய்து வரும் நல்ல பேட்டிங் அனைத்தும் அவருடைய கடின உழைப்பை உங்களுக்கு காட்டுகிறது.
இதே போல செயல்படும் பட்சத்தில் இன்னும் 2 வருடங்களில் அவர் தன்னுடைய ஐபிஎல் அணிக்கு இன்னும் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய கிரிக்கெட்டுகாக முக்கிய பங்காற்றுவார் என்று கணிக்கிறேன்.
என பாண்ட்யா கூறினார்.
அவர் கூறுவது போல தற்போது இளம் வீரராக அனுபவமின்றி இருக்கும் சாய் சுதர்சன் இன்னும் நாட்கள் செல்ல செல்ல நல்ல அனுபவத்தை கற்று தன்னைத் தானே மெருகேற்றி இந்தியாவுக்கு விளையாடுவார் என்று உறுதியாக நம்பலாம். முன்னதாக சமீப காலங்களாகவே பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காத சென்னை அணி நிர்வாகம் இந்த போட்டியில் குஜராத்துக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த சாய் சுதர்சன் – விஜய் சங்கர் போன்ற தமிழக வீரர்களின் திறமையை உணர வேண்டும் என தமிழக ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.
- சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தை கண்டு மகிழ்ந்த சச்சின்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
குஜராத் பேட்டிங்கில், சுப்மான் கில்தான் அதிகமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார் சாய் சுதர்சன்.
இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தை இந்திய முன்னாள் நட்சத்திர வீரரும், லெஜண்ட்டுமான சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், "இன்றிரவு என் கண்களுக்கு விருந்து படைத்தார் சாய் சுதர்சன்.. நன்றாக விளையாடினாய் சாய்" என்று பதிவிட்டுள்ளார்.
- இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது.
- பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.
லண்டன்:
தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தேர்வானார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசினார்.
இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அதைத்தொடர்ந்து தியோதார் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு மண்டல அணியின் வெற்றியிலும் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றிய அவர் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கிறார்.
இந்நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. சர்ரே அணிக்காக விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்ரே அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர்கள் சிலர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட உள்ளனர்.
இதன் காரணமாக சர்ரே அணிக்காக நடைபெற்று வரும் கவுண்ட்டி தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். ஆனால் இளம் வீரரான சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக தேர்வாகியுள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
- குஜராத் அணிக்காக கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 116 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தமிழகத்தின் இளம் வீரரான சாய் சுதர்சன் அறிமுகம் ஆனார். மூன்று விடிவிலான கிரிக்கெட்டின் ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில்தால் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகியுள்ளார். அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 43 பந்தில் 9 பவுண்டரியுடன் 55 ரன்கள் விளாசி அசத்தினார்.
அறிமுக போட்டியிலேயே இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடியதன் மூலம் கனவு நனவாகியதாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எல்லோரையும் போல் சிறுவயதில் இருந்து வளரும்போதே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. கடின முயற்சியின் மூலம் கனவுகள் நனவாகும்.
இந்திய அணிக்காக விளையாடி, எனது பங்களிப்பை செய்தது பாக்கியம். இந்த நினைவுகளை மேலும் நீட்டித்துக் கொண்டு செல்ல பார்க்கிறேன். கே.எல். ராகுலிடம் இருந்து அறிமுகத்திற்கான இந்திய அணியின் தொப்பியை வாங்கியது சிறப்பு தருணம். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து விளையாடியது அமேசிங்.
இவ்வாறு சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணி இவரை ஏலம் எடுத்தது. குஜராத் அணிக்காக கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
பார்ல்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.
இதில் 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீரருக்கு 'இம்பேக்ட் பீல்டர்' என்ற விருதை பிசிசிஐ வழங்கியுள்ளது. அதன்படி இந்த 'இம்பேக்ட் பீல்டர்' விருதை இளம் வீரரான சாய் சுதர்சன் வென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சாய் சுதர்சன் முதல் ஓவரிலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
- என். ஜெகதீசன் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு- மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி சாய் சுதர்சன், என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். 4 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து பிரதோஷ் பால் களம் இறங்கினார். என். ஜெகதீசன் 4 ரன்னிலும், பிரடோஷ் பால் 8 ரன்னிலும் ஆட்மிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் வெளியேறினார்.
இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் தமிழ்நாடு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 5-வது விக்கெட்டுக்கு பாபா இந்திரஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப் பிடித்தது. ஆனால், நீண்ட நேரம் சமாளிக்க முடியவில்லை. பாபா இந்திரஜித் 11 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் இந்தியா 42 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
6-வது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. தமிழ்நாடு 31 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்க 68 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
விஜய் சங்கர் 56 பந்தில் 28 ரன்களும், வாஷிங்டன் சுந்தனர் 52 பந்தில் 15 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.
- குஜராத் டைட்டன்சை நாளை மீண்டும் சந்திக்கிறது சி.எஸ்.கே.
- குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா?
அகமதாபாத்:
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
சேப்பாக்கம் மைதா னத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி ( மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதரா பாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 541 ரன் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.
மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக ஆடுவது அவசியமாகும். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.
பந்து வீச்சில் துருப்பு சீட்டான இலங்கையை சேர்ந்த பதிரனா எஞ்சிய போட்டிகளில் ஆட முடியா மல் போனது மிகப்பெரிய பாதிப்பே. அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல் 14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காள நாடு திரும்பி யுள்ளார். தீபக் சாஹரும் காயத்தில் உள்ளார். இதனால் பந்துவீச்சில் பலவீனமாகவே இருக்கிறது. இதை பேட்மேன் கள்தான் சரி செய்ய வேண்டும்.
துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் அவர்களது இடத்தை நிரப்புவார்கள். சான்ட்னர் கடந்த போட்டியில் ரன் கொடுக்காமல் நேர்த்தியாக வீசினார்.
சுப்மன்கில் தலைமையி லான ருதுராஜ் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
குஜராத் அணியில உள்ள தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் ஆகியோர் சென்னைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடுவார்கள்.
- சென்னை அணிக்கு எதிராக சாய் சுதர்சன் சதம் விளாசினார்.
- சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர்.
தமிழக வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த போட்டிகளில் அதிவேக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் சச்சின் சாதனையை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார். சுதர்சன் வெறும் 25 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். சச்சின் 31 இன்னிங்ஸ் 1000 ரன்களை கடந்தார். இதற்கு முன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சச்சின் 31 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர்களின் சிறந்த சாதனையாக இருந்தது.
மிகக் குறைந்த போட்டிகளில் 1000 ஐபிஎல் ரன்கள் விளாசிய வீரர்கள்:-
21 - ஷான் மார்ஷ்
23 - லெண்டல் சிம்மன்ஸ்
25 - மேத்யூ ஹைடன்
25 - சாய் சுதர்சன்*
26 - ஜானி பேர்ஸ்டோவ்
- தமிழக வீரரான சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார்.
- குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 59-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்ஜே கேப்டன் ருதுராஜ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 231 ரன்கள் குவித்தது.
சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த நிலையில் இந்த போட்டியில் இந்த ஜோடி இணைந்து 148 ரன்கள் எடுத்திருந்த போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் எடுத்து சாதனை படைத்தது.
இதற்கு முன்னதாக இந்த ஜோடி கடந்த ஆண்டு 147 ரன்கள் எடுத்திருந்தது. 15 ஓவர்களில் குஜராத் 190 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சுப்மன் கில் 49 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4-வது சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதன் மூலமாக ஒரு இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் அதிக முறை சதம் அடித்தவர்களின் பட்டியலில் கில் 6 சதங்கள் அடித்து 6-வது பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அப்போது குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 200 ரன்கள் குவித்தது. இதே போன்று தமிழக வீரரான சாய் சுதர்சன் 50 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
இதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர். இதன் மூலமாக ஒரு அணியில் 2 வீரர்கள் சதம் அடித்தவர்களின் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளனர். இந்த சீசனில் இருவரும் முதலிடம் பிடித்துள்ளனர். இதற்கு முன்னதாக 2016 மற்றும் 2019 -ம் ஆண்டுகளில் RCB vs GL, SRH vs RCB, அணிகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 3-வது ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். முதல் இரண்டு இடங்களில் டிவில்லியர்ஸ் விராட் கோலி உள்ளனர். 4-வது இடத்தில் டி காக்- கேஎல் ராகுல் உள்ளனர்.
ஆனால், சாய் சுதர்சன் 51 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்த சீசனில் விக்கெட் இழப்பின்றி முதல் முறையாக 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து சாதனை படைத்துள்ளனர்.