search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய் சுதர்சன்"

    • கவுன்ட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
    • காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு பறிபோனது.

    இந்திய டெஸ்ட் அணி வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரிசையாக விளையாட இருக்கிறது. உள்ளூர் போட்டியில் விளையாடினால்தான் இந்திய சீனியர் அணியில் இடம் என்பதால் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் துலீக் டிராபியில் விளையாடுகிறார்கள்.

    இந்திய அணிக்கு எப்போதுமே இடது கை பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறைதான். அதை போக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐபிஎல் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுகம் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் காயம் காரணமாக அதில் விளையாட முடியவில்லை. இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் அணியில் இடம் பிடித்தார்.

    இருந்தபோதிலும் தனது முயற்சியை சாய் சுதர்சன் கைவிடவில்லை. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சனின் ஆட்டம் விக்ரம் சோலங்கிற்கு (குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் டைரக்டர்) பிடித்துப் போக, இங்கிலாந்தின் கவுன்ட்டி அணியான சர்ரே அணியில் இணைய உதவி புரிந்தார். இவர் ஏற்கனவே அந்த அணியின் பயற்சியாளராக இருந்தனர்.

    சர்ரே அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன் நேற்று நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிராக 178 பந்தில் 105 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். இது அந்த அணிக்காக விளையாடும் 3-வது போட்டியாகும். ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு இன்னிங்சில் 73 ரன்கள் அடித்துள்ளார்.

    தற்போது துலீப் டிராபியில் இந்தியா "சி" அணியில் இடம் பிடித்துள்ளார். துலீப் டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது நிச்சயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு அணியை தேர்வு செய்வதில் பெரிய தலைவலியை ஏற்படுத்தும்.

    ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் ஆவலில் உள்ளனர்.

    • திருச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்து
    • 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கோவை:

    கோவையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் இறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திருச்சி அணி தத்தளித்தது.

    சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடியது. 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் 34 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சுரேஷ்குமார் டக் அவுட்டாகி வெளியேற அடுத்ததாக வந்த சாய் சுதர்சன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 7 ரன்னிற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து கோவை தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த சுஜய் - முகிலேஷ் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர்.

    16.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை சேர்த்து கோவை அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. நிதானமாக விளையாடிய முகிலேஷ் 63 ரன்களும் சுஜய் 48 ரன்களும் அடித்தனர்.

    சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்திய வீரர்களான சாய் சுதர்சன், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் இந்திய இளம் வீரர்களான சாய் சுதர்சன், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இதில் சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இன்னிங்சில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதேபோல், நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா முதல் இன்னிங்சில் 31 ரன்னும், 2வது இன்னிங்சில் 37 ரன்னும் எடுத்தார்.

    கவுன்டி போட்டிகளில் விளையாடி வரும் இளம் இந்திய வீரர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் குறைந்த ரன்களில் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

    • ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.
    • ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்த சுற்றுபயணத்தில் விளையாடுகின்றனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து நாடு திரும்ப தாமதமாவதால் அவருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா, ஹர்சித் ரானா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சீசனில் இரண்டு போட்டிகளில் 116 ரன்கள் அடித்துள்ளார்.
    • ஒரு அரைசதம் அவரது ஸ்கோரில் அடங்கும்.

    இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேனும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சாய் சுதர்சன் கடந்த சீசனில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடினார். இரண்டு போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் அடித்தார். அதில் ஒரு அரைசதம் ஆகும். இது அந்த அணி 22-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் சர்ரே அணிக்காக இந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடுவார் என சர்ரே அணி தெரிவித்துள்ளது.

    சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். 2024 சீசனில் 527 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 3 போட்டிகளில் 127 ரன்கள் சேர்த்தார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். முதல் தர போட்டிகளில் 29 இன்னிங்சில் 1118 ரன்கள் அடித்துள்ளார்.

    • தமிழக வீரரான சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார்.
    • குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 59-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்ஜே கேப்டன் ருதுராஜ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 231 ரன்கள் குவித்தது.

    சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த நிலையில் இந்த போட்டியில் இந்த ஜோடி இணைந்து 148 ரன்கள் எடுத்திருந்த போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் எடுத்து சாதனை படைத்தது.

    இதற்கு முன்னதாக இந்த ஜோடி கடந்த ஆண்டு 147 ரன்கள் எடுத்திருந்தது. 15 ஓவர்களில் குஜராத் 190 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சுப்மன் கில் 49 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4-வது சதம் அடித்து சாதனை படைத்தார்.

    இதன் மூலமாக ஒரு இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் அதிக முறை சதம் அடித்தவர்களின் பட்டியலில் கில் 6 சதங்கள் அடித்து 6-வது பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அப்போது குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 200 ரன்கள் குவித்தது. இதே போன்று தமிழக வீரரான சாய் சுதர்சன் 50 பந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

    இதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர். இதன் மூலமாக ஒரு அணியில் 2 வீரர்கள் சதம் அடித்தவர்களின் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளனர். இந்த சீசனில் இருவரும் முதலிடம் பிடித்துள்ளனர். இதற்கு முன்னதாக 2016 மற்றும் 2019 -ம் ஆண்டுகளில் RCB vs GL, SRH vs RCB, அணிகளுக்கு இடையில் நடந்த போட்டிகளில் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 3-வது ஜோடி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். முதல் இரண்டு இடங்களில் டிவில்லியர்ஸ் விராட் கோலி உள்ளனர். 4-வது இடத்தில் டி காக்- கேஎல் ராகுல் உள்ளனர்.

    ஆனால், சாய் சுதர்சன் 51 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்த சீசனில் விக்கெட் இழப்பின்றி முதல் முறையாக 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

    • சென்னை அணிக்கு எதிராக சாய் சுதர்சன் சதம் விளாசினார்.
    • சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர்.

    தமிழக வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த போட்டிகளில் அதிவேக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் சச்சின் சாதனையை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார். சுதர்சன் வெறும் 25 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். சச்சின் 31 இன்னிங்ஸ் 1000 ரன்களை கடந்தார். இதற்கு முன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சச்சின் 31 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர்களின் சிறந்த சாதனையாக இருந்தது.

    மிகக் குறைந்த போட்டிகளில் 1000 ஐபிஎல் ரன்கள் விளாசிய வீரர்கள்:-

    21 - ஷான் மார்ஷ்

    23 - லெண்டல் சிம்மன்ஸ்

    25 - மேத்யூ ஹைடன்

    25 - சாய் சுதர்சன்*

    26 - ஜானி பேர்ஸ்டோவ்

    • குஜராத் டைட்டன்சை நாளை மீண்டும் சந்திக்கிறது சி.எஸ்.கே.
    • குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா?

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதா னத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி ( மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதரா பாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 541 ரன் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

    மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக ஆடுவது அவசியமாகும். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.

    பந்து வீச்சில் துருப்பு சீட்டான இலங்கையை சேர்ந்த பதிரனா எஞ்சிய போட்டிகளில் ஆட முடியா மல் போனது மிகப்பெரிய பாதிப்பே. அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல் 14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காள நாடு திரும்பி யுள்ளார். தீபக் சாஹரும் காயத்தில் உள்ளார். இதனால் பந்துவீச்சில் பலவீனமாகவே இருக்கிறது. இதை பேட்மேன் கள்தான் சரி செய்ய வேண்டும்.

    துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் அவர்களது இடத்தை நிரப்புவார்கள். சான்ட்னர் கடந்த போட்டியில் ரன் கொடுக்காமல் நேர்த்தியாக வீசினார்.

    சுப்மன்கில் தலைமையி லான ருதுராஜ் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    குஜராத் அணியில உள்ள தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் ஆகியோர் சென்னைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடுவார்கள்.

    • சாய் சுதர்சன் முதல் ஓவரிலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
    • என். ஜெகதீசன் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு- மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி சாய் சுதர்சன், என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். 4 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து பிரதோஷ் பால் களம் இறங்கினார். என். ஜெகதீசன் 4 ரன்னிலும், பிரடோஷ் பால் 8 ரன்னிலும் ஆட்மிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் தமிழ்நாடு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 5-வது விக்கெட்டுக்கு பாபா இந்திரஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப் பிடித்தது. ஆனால், நீண்ட நேரம் சமாளிக்க முடியவில்லை. பாபா இந்திரஜித் 11 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் இந்தியா 42 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    6-வது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. தமிழ்நாடு 31 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்க 68 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    விஜய் சங்கர் 56 பந்தில் 28 ரன்களும், வாஷிங்டன் சுந்தனர் 52 பந்தில் 15 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    பார்ல்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

    இதில் 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீரருக்கு 'இம்பேக்ட் பீல்டர்' என்ற விருதை பிசிசிஐ வழங்கியுள்ளது. அதன்படி இந்த 'இம்பேக்ட் பீல்டர்' விருதை இளம் வீரரான சாய் சுதர்சன் வென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
    • குஜராத் அணிக்காக கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 116 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தமிழகத்தின் இளம் வீரரான சாய் சுதர்சன் அறிமுகம் ஆனார். மூன்று விடிவிலான கிரிக்கெட்டின் ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில்தால் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகியுள்ளார். அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 43 பந்தில் 9 பவுண்டரியுடன் 55 ரன்கள் விளாசி அசத்தினார்.

    அறிமுக போட்டியிலேயே இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடியதன் மூலம் கனவு நனவாகியதாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்லோரையும் போல் சிறுவயதில் இருந்து வளரும்போதே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. கடின முயற்சியின் மூலம் கனவுகள் நனவாகும்.

    இந்திய அணிக்காக விளையாடி, எனது பங்களிப்பை செய்தது பாக்கியம். இந்த நினைவுகளை மேலும் நீட்டித்துக் கொண்டு செல்ல பார்க்கிறேன். கே.எல். ராகுலிடம் இருந்து அறிமுகத்திற்கான இந்திய அணியின் தொப்பியை வாங்கியது சிறப்பு தருணம். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து விளையாடியது அமேசிங்.

    இவ்வாறு சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணி இவரை ஏலம் எடுத்தது. குஜராத் அணிக்காக கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    • இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது.
    • பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.

    லண்டன்:

    தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தேர்வானார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசினார்.

    இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    அதைத்தொடர்ந்து தியோதார் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு மண்டல அணியின் வெற்றியிலும் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றிய அவர் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கிறார்.

    இந்நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. சர்ரே அணிக்காக விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்ரே அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர்கள் சிலர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட உள்ளனர்.

    இதன் காரணமாக சர்ரே அணிக்காக நடைபெற்று வரும் கவுண்ட்டி தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். ஆனால் இளம் வீரரான சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக தேர்வாகியுள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ×