search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயவிற்பனை 3 girls"

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் தகரை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • நாககுப்பம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் செல்வி (வயது 36) கஜேந்திரன் (45), சித்ரா (42), சுதாகர் (55) ஆகியோர் அவர்களது வீட்டில் சாராயம் விற்று வந்தது தெரியவந்தது. அங்கு

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் தகரை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக சின்னசேலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, மணிகண்டன் தலைமையிலான போலீசார் நாககுப்பம் மற்றும் தகரை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாககுப்பம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் செல்வி (வயது 36) கஜேந்திரன் (45), சித்ரா (42), சுதாகர் (55) ஆகியோர் அவர்களது வீட்டில் சாராயம் விற்று வந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். இதில் கஜேந்திரன் மற்றும் சுதாகர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    அதேபோல் தகரை கிராமத்தில் மூணாங்கண்ணி குட்டை அருகே கலா (42), சுரேஷ் (32) ஆகியோர் சாராயம் விற்பனை செய்து வந்தவரை போலீசார் மடிக்கி பிடித்தனர். அப்போது சுதாகர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் பிடிபட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற கஜேந்திரன், சுதாகர், சுரேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×