search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிங்கு சிங்"

    • இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.
    • ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

    பர்படாஸ்:

    டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.

    இதன்பின் ஓய்வெடுத்த இந்திய அணி வீரர்கள், இன்று பார்படாஸ் பீச்சில் உற்சாகமாக விளையாடியுள்ளனர். இந்திய அணியின் விராட் கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கலீல் அஹ்மத், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதில் ஒரு பக்கம் ரிங்கு சிங் 6 பேக் உடலுடனும் இன்னொரு பக்கம் 8 பேக் உடற்கட்டுடன் விராட் கோலி உற்சாகத்துடன் பீச் வாலிபால் விளையாடி இருக்கிறார். இருவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு இந்திய வீரர்களின் ஃபிட்னஸை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

    • அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு உலகக் கோப்பை இருக்கிறது. அதை நோக்கி தயாராகும்படி ரோகித் கூறினார்.
    • ரோகித் எப்பொழுதும் இளம் வீரர்களிடம் நன்றாக விளையாடுங்கள் என்றுதான் கூறுவார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அவர் பினிஷிங் ரோலில் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் விளையாடி இந்திய அணியில் வாய்ப்பை பெற்றார். இதைத்தொடர்ந்து இந்திய டி20 அணியில் கிடைத்த 15 வாய்ப்புகளில் மிகச் சிறப்பான பேட்டிங்கை பினிஷிங் ரோலில் வெளிப்படுத்தினார்.

    ஆனால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இன்டிஸ் சூழ்நிலைகளில் விளையாட நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை எனக் கருதிய இந்திய தேர்வுக்குழு ரிங்கு சிங்கை சேர்க்காமல் விலக்கி வைத்தது.

    இதுகுறித்து ரிங்கு சிங் கூறியதாவது:-

    நல்ல செயல் திறனோடு இருந்தும் கூட நீங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அது யாருக்கும் வருத்தத்தை உண்டாக்கக் கூடியதாகத்தான் இருக்கும். ஆனால் இந்த மாதிரி அணி காம்பினேஷன் காரணமாக என்னை அவர்கள் தேர்வு செய்யவில்லை. ஆனாலும் பரவாயில்லை நம் கையில் இல்லாத விஷயங்கள் குறித்து நாம் எப்பொழுதும் கவலைப்பட கூடாது. ஆரம்பத்தில் இது குறித்து எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மைதான். ஆனாலும் எது நடந்தாலும் பரவாயில்லை அது நன்மைக்கேதான் நடக்கும்.

    ரோகித் பாய் என்னிடம் சிறப்பாக எதுவும் சொல்லவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு உலகக் கோப்பை இருக்கிறது, எனவே அதை நோக்கி கடுமையாக உழைத்து தயாராகும்படி மட்டும் கூறினார்.

    ரோகித் பாய் கேப்டன்சி எவ்வளவு சிறந்தது என உலகம் பார்த்திருக்கிறது. அவருடன் என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் பேசினால் நான் ஒரே ஒரு தொடரில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். அவருடன் நான் அதிகம் பேசியது கூட கிடையாது. இளம் வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று விரும்புவார். அவர் எப்பொழுதும் இளம் வீரர்களிடம் நன்றாக விளையாடுங்கள் என்றுதான் கூறுவார்.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    • விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை.
    • கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அமெரிக்கா செல்லவில்லை.

    டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.

    கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், ஜடேஜா, சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் முதல் கட்டமாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

    விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை. அடுத்தக்கட்ட வீரர்களுடன் அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அதனால் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் இன்று அமெரிக்கா செல்லவில்லை.

    இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது மற்றும் ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ். ஆடுகளங்கள் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும்.
    • தேர்வாளர்கள் கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் (4 பேர்) செல்ல விரும்பியுள்ளனர்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்கான எதிர்கால திட்டத்தில் 26 வயதான ரிங்கு சிங் இடம் பிடித்திருந்தார். என்றாலும் பிசிசிஐ நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்ல திட்டமிட்டதால் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இது தொடக்கம்தான், ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என கங்குலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கங்குலி கூறுகையில் "போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ். ஆடுகளங்கள் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். ஆகவே, அவர்கள் (தேர்வாளர்கள்) கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் (4 பேர்) செல்ல விரும்பியுள்ளனர். இதனால் ஒருவேளை ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இது தொடக்கம்தான். இதற்காக அவர் மனம் தளரக் கூடாது.

    தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறப்பான அணி. அனைவரும் மேட்ச் வின்னர்கள். 15 பேரும் தேர்வுக்கான வீரர்கள். ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வார்கள் என்பதை நான் நம்புகிறேன்" என்றார்.

    • விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து எந்த கவலையும் இல்லை.
    • ரிங்கு சிங் அணியில் இடம்பெறாதது துரதிஷ்டமானது.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி தேர்வு குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

    விராட் கோலி ஸ்டிரைக் ரேட் மற்றும் ரிங்கு சிங் இடம் பெறாதது குறித்து அகார்கர் விளக்கமளித்தார்.

    அதில் அஜித் அகார்கர் கூறியதாவது:-

    விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து எந்த கவலையும் இல்லை. அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். ரிங்கு சிங் அணியில் இடம்பெறாதது துரதிஷ்டமானது. அவர் எந்த தவறும் செய்யவில்லை, சுப்மன் கில் கூட.

    அணியில் இரண்டு ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் தேவைப்பட்டது. மேலும் பேட்டிங் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும். இதனால் ரோகித் போட்டியின் போது ஆலோசனை செய்ய பயனுள்ளதாக இருக்கும். இந்த முடிவை எடுப்பது ரோகித் சர்மாவுக்கு கடினமாக இருந்தது. அணிக்காக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இவ்வாறு அஜித் அகார்கர் கூறினார்.

    • ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
    • தென் ஆப்பிரிக்கா மண்ணில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

    புதுடெல்லி:

    ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி குறித்து முன்னாள் வீரர்கள் ஆதரவும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங்கை 15 பேர் கொண்ட அணியில் எடுக்காதது குறித்து அஜித் அகார்கரை முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிழித்தெடுத்துள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிங்கு சிங் கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ரிங்கு சிங் சிறப்பாக இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

    குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் கடைசி டி20 போட்டியில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தார். ரிங்கு 69 ரன்கள் குவித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது.

    இப்படிப்பட்ட வீரரை இந்திய அணியில் சேர்க்காதது அநியாயம். இந்த தேர்வு மிகவும் மோசமான முடிவு. அவர் இந்திய அணிக்காக உயிரை கொடுத்து விளையாடுகிறார். அவரை பழிகாடாக ஆக்கி விட்டார்கள். அவரை இந்திய அணியில் மீண்டும் சேர்ப்பது கடினம். ஐபிஎல் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்படது கடினம். இனி ரிங்கு சிங்கை மக்கள் மறந்து விடுவார்கள்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார். 

    • 15 பேர் கொண்ட அணியில் உறுதியாக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
    • ரிசர்வ் வீரர்கள் நான்கு பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கிற்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தனது மகனுக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ரிங்கு சிங் தந்தை கூறியதாவது:-

    ரிங்கு சிங்கிற்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என முழுமையாக நம்பியிருந்தோம். ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சம்பவத்தை கொண்டாட எங்கள் குடும்பத்தினர் ஸ்வீட்ஸ் மற்றும் பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தோம். ஆனால், ரிங்கு சிங் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில்தான் இடம் பிடித்துள்ளார்.

    ரிங்கு சிங் அவரது அம்மாவிடம் போனில் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை எனத் தெரிவித்தார். அப்போது அவர் மனம் உடைந்துவிட்டார்.

    இவ்வாறு ரிங்கு சிங் தந்தை தெரிவித்துள்ளார்.

    கடந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன்பின் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் ஐந்து சிக்சர்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.

    இதனால் இந்திய அணியில் இடம் பிடித்தார். குறிப்பாக டி20 அணியில் அதிரடியாக விளைாயடி முத்திரை படைத்தார். இதனால் நீண்ட காலம் டி20 இந்திய அணியில் விளையாடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிங்கு சிங் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    • உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது
    • உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதை தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது.

    இந்திய அணியில் பினிஷராக ரிங்கு சிங் இடம் பெறுவாரா? இல்லை சிவம் துபே இடம் பெறுவாரா என்ற இழுபறி நீடித்தது. இந்த போட்டியில் முந்திய துபே அணியில் இடம் பெற்றுள்ளார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்திருந்த நிலையில் அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சீசனில் ரிங்கு சிங்கால் போதிய ரன்களை குவிக்க முடியவில்லை. அதனை காரணம் காட்டியே அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து ரிங்கு சிங் கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். அந்த சீசனில் அவர் 474 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வழியாக பிசிசிஐ தேர்வாளர்களின் கவனத்தை அவர் டி20 கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

    இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் இரண்டு அரைசதங்களுடன் 176 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் திலக் வர்மாவுக்கும் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் அவர் 9 போட்டிகளில் விளையாடி 336 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
    • ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் மே 26-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்குகிறது. லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.

    தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சொதப்பியதால், கடைசி 10-15 பந்துகளுக்காக ரிங்கு சிங்கை சேர்க்க வேண்டுமா என்ற எண்ணம் பிசிசிஐயிடம் இருப்பதாகவும், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற பினிஷர்களே அணிக்கு போதும் என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ரிங்கு சிங், இந்திய அணிக்காக இதுவரை ஸ்லோ விக்கெட்டில் ஆடியது கிடையாது. டி20 உலகக் கோப்பை அணித் தேர்வை கருத்தில்கொண்டு, சிஎஸ்கே, கேகேஆர் இடையிலான போட்டிக்கு ஸ்லோ விக்கெட்டை தயார் செய்திருந்தனர்.

    ஆனால், அந்த ஸ்லோ விக்கெட்டில் ரிங்கு சிங் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் 14 பந்துகளை எதிர்கொண்ட அவர், அதில் ஒரு பவுண்டரியை கூட அடிக்காமல் 9 ரன்களை மட்டும் எடுத்து, தேஷ்பண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரிங்கு சிங் சொதப்பியதால், அவரை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
    • பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 83 ரன்கள் அடித்தார்.

    இதைத் தொடர்ந்து 183 ரன்களை துரத்திய கொல்கத்தா அணி 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது.

    இதன் மூலம் கொல்கத்தா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி இன்றி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றிருக்கிறது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு, கொல்கத்தா அணியின் வீரர் ரிங்கு சிங்குக்கு விராட் கோலி பேட் பரிசளித்தார். 

    • ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.
    • ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.

    கடந்த ஆண்டு இந்தியா அணிக்காக அறிமுகமான ரின்கு சிங், சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.

    இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 11 இன்னிங்ஸ்களில், 356 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 89.00 மற்றும் 176 ஸ்டிரைக் ரேட்டுடன் இரண்டு அரை சதங்களுடன் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அவரது தந்தை கான்சந்த் சிங் எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்யும் வீடியோ வைரலானது. கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற போதிலும், தனது தந்தை வேலையை விட்டு விட மறுத்தாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் என் தந்தையிடம் நம்மிடம் போதுமான அளவு பணம் இருப்பதால் சிலிண்டர்களை எடுத்துச் செல்லாமல் ஓய்வெடுக்கச் சொன்னேன். ஆனால் அவர் அதைச் ஏற்க மறுத்து விட்டார். மேலும் அவரது வேலையை அவர் விரும்புகிறார்.

    ஒருவர் வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டிருந்தால் அவரிடம் வேலையை விட்டுவிடுங்கள் என்று சொல்வது மிகவும் கடினம். அவரே நினைத்தால் மட்டும்தான் அதை விட முடியும்.

    இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.

    • தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

    இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் 10 ஓவர்களில் துவக்க வீரர்கள் ரீஸா ஹென்ரிக்ஸ், டோனி அபாரமாக ஆடினர். ஹென்ரிக்ஸ் - டோனி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது.

    அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், திலக் வர்மா என ஐந்து பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் விக்கெட் கிடைக்காததால் கேஎல் ராகுல் ரிங்கு சிங்குக்கு பந்து வீசும் வாய்ப்பை வழங்கினார். உள்ளூர் தொடர்களில் பந்து வீசிய அனுபவம் கொண்ட ரிங்கு சிங் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் தான் வீசிய மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார்.

    ரிங்கு சிங் பந்து வீச்சில் டுசென் 36 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் ரிங்கு சிங் திறமையின் உச்சம் என பாராட்டி வருகின்றனர். ஒரு ஓவர் மட்டும் வீசிய ரிங்கு சிங் 2 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.

    ×