search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியங்கா"

    • ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன.

    ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி.யாக முடிந்தது.

    இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • வயநாட்டில் இன்று மாலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • டெல்லியை விட்டு வெளியே வந்து பிரியங்கா பேசுவது இதுவே முதல் முறை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கின் முடிவை பொறுத்துதான் ராகுல்காந்தி தேர்தலை சந்திக்க முடியுமா? முடியாதா? என்பது தெரியவரும்.

    வழக்கில் கவனம் செலுத்துவது மட்டுமில்லாமல் தேர்தலை சந்திக்க கட்சியையும் தயார்படுத்த வேண்டும் என்று மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக பிரியங்காவையும் முன்னிலை படுத்த வேண்டும் என்று பலரும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

    பிரியங்காவும் முழு நேர அரசியலுக்கு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. டெல்லியில் நடந்த போராட்டங்களில் அவரும் பங்கேற்று ஆவேசமாக பேசினார்.

    ராகுல்காந்தி வயநாடு எம்.பி.யாக பதவி வகித்தவர். பதவி பறிக்கப்பட்ட பிறகு தொகுதியில் மக்களை சந்திக்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டது.

    அதன்படி வயநாட்டில் இன்று மாலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுபற்றி கேரள மாநில பொறுப்பாளரும், அகில இந்திய செயலாளருமான பி.விசுவநாதன் கூறியதாவது:-

    ராகுல்காந்திக்கு ஆதரவாகவும், மோடியை கண்டித்தும் கேரளா முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தீப்பந்தங்கள் ஏந்தி எழுச்சியுடன் போராடி வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஆர்.எஸ்.பி.ஜே.டி. (எஸ்) உள்ளிட்ட 7 கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் கலந்து கொள்ள விமானத்தில் கோழிக்கோடு வரும் ராகுல்காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாடு வருகிறார். அவருடன் பிரியங்காவும் கலந்து கொள்கிறார்.

    டெல்லியை விட்டு வெளியே வந்து பிரியங்கா பேசுவது இதுவே முதல் முறை. இது பிரியங்காவையும் தேசிய அரசியலில் முன்னிலை படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் கே.சுதாகரன், கே.சு.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பி.விஸ்வநாதன் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

    ×