search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்-மோர் பந்தல்"

    • காங்கேயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் காங்கேயம் நால்ரோடு பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
    • முடிவில் ஆலம்பாடி கூட்டுறவு வங்கி தலைவர் தங்கமுத்து நன்றி கூறினார்.

    காங்கேயம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் திருப்பூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் வேண்டுகோளின் படி காங்கேயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் காங்கேயம் நால்ரோடு பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் காங்கேயம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான என். எஸ்.என்., நடராஜ் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர் அருண்குமார், என்.எஸ்.என். தனபால், பி.கே.பி. சண்முகசுந்தரம், பாப்பினி பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் மைனர் பழனிசாமி, யூனியன் கவுன்சிலர் சுதா ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் பழனியம்மாள் சாமியப்பன், நால்ரோடு செந்தில், மருதுறை ஜெகதீஸ் உட்பட ஒன்றியம், கிளை மற்றும் மாவட்ட அதிமுகவினர், கூட்டுறவு, பஞ்சாயத்து அ.தி.மு.க. தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும், இளநீர், தர்பூசணி, நீர் மோர் வழங்கப்பட்டது. முடிவில் ஆலம்பாடி கூட்டுறவு வங்கி தலைவர் தங்கமுத்து நன்றி கூறினார். 

    • மதுரையில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
    • மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி ஆலோசனையின் பேரில் நடத்தினார்.

    மதுரை

    மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. வர்த்தக பிரிவு சார்பில் 9-வது வார்டில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி ஆலோசனையின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் திருப்பதி, பா.ஜ.க. கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்தர், கண்ணன், கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜசம்பன், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவா சன், மாநில கூட்டுறவு பிரிவு மாணிக்கம், கல்வாரி தியாகராஜன், நாகராஜன், செல்வ மாணிக்கம் உள்பட கலந்து கொண்டனர்.

    • விக்கிரமசிங்கபுரம் நகர் பிரிவு அலுவலகத்தில் விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டது.
    • மின் நுகர்வோர்களுக்காக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் நகர் பிரிவு அலுவல கத்தில் மின் நுகர்வோர்கள் பயன் பெறும் வகையில் மின்சார பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டது. மேலும் அலுவலகத்திற்கு வரும் மின் நுகர்வோர்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறியதால், மின் நுகர்வோர்களின் தாகத்தை தணிக்கும் பொருட்டு பிரிவு அலுவலக வளாகத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

    அதில் வி.கே.புரம் உதவி செயற்பொறியாளர் ராமகிளி, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். மேலும் மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் பாதுகாப்பு வாசகங்களுடன் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி மின் பொறியாளர் ஆக்னஸ்சாந்தி மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகர் பிரிவு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செய லாளர்கள் ரமேஷ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. மகளிர் அணி மாநில துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.

    இதில் தலைமை கழக பேச்சாளர்கள் கணபதி, ராம சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அந்தோணி டேனியல், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.டி.சங்கரசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி ராமநாதன், மாணவரணி பொருளாளர் ஆர்சி மாரியப்பன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கண்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வம், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரன், காளிராஜ், நிர்வாகிகள் ராஜ்குமார், செந்தில்குமார், நிர்மலாதேவி, கந்தவேல், நூர் முகம்மது உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நீர் மோர் பந்தல் நடந்தது.
    • மாவட்ட தலைவர் தரணி முருகேசன் திறந்து வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை மாவட்ட தலைவர் தரணி முருகேசன் திறந்து வைத்தார். மாநில பொதுச் செயலாளரும், பெருங்கோ ட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம், தேசிய பொது குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன், மாநில மகளிரணி துணை தலைவி கலா ராணி, செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பிரவீன், ராமச்சந்திரன், ரஜினிகாந்த், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்மா கார்த்திக், மணி மாறன், பவர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கோடை கால நீர்-மோர் பந்தலை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி திறந்து வைத்தார்.
    • தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகில் கோடைகால நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் ஏற்பாட்டில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட பேரவை செயலா ளர் சேது பாலசிங்கம், மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிகட்டி, மாவட்ட மீனவர் கூட்டுறவு சம்மேளன தலைவர் வேலுச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ் ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×