என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிளப்"
- 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிவசங்கரன் காரை வழிமறித்தனர்.
- பலத்த காயமடைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போரூர்:
சென்னை நுங்கம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 31). சப் - இன்ஸ்பெக்டரான இவர் மாதவரம் போலீஸ் நிலைய சட்டம்-ஒழுங்கு பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.
சிவசங்கரன் நேற்று இரவு தனது நண்பர்களுடன் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கிளப் ஒன்றிற்கு சென்றார். பின்னர் மது அருந்திவிட்டு பணம் கட்ட சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் "எனது பில்லுக்கும் சேர்த்து பணத்தை கட்டு" என்று சிவசங்கரனிடம் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் சிவசங்கரன் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அவரை 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிவசங்கரன் காரை வழிமறித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய சிவசங்கரனை சரமாரியாக தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி சென்ற கும்பலை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்