search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைமன் டவுல்"

    • சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
    • ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும்.

    வெலிங்டன்:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை பைனல்களில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி முழு மூச்சுடன் போராட உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசியது பின்வருமாறு:-

    டி20 அணியில் டாப் 5 - 6 பேட்ஸ்மேன்களில் பவுலர்கள் இல்லாதது இந்தியா தவற விட்ட பெரிய விஷயம். வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் தற்போதைய அணியில் உலகக்கோப்பை முடிந்ததும் நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் அபிஷேக் சர்மா, ருதுராஜ், ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரை நீங்கள் விரும்புவீர்கள்.

    சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 2 - 3 ஆல் ரவுண்டர்கள், கணிசமாக பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு டவுல் கூறினார்.

    • முக்கிய நேரங்களில் நங்கூரமாக செயல்படுவது அவசியமாகும்.
    • இருப்பினும் வெளியிலிருந்து விமர்சிப்பவர்களின் கருத்துக்களை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்.

    ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 61, கேப்டன் டு பிளேஸிஸ் 79, மேக்ஸ்வெல் 59 என ரன்களை குவித்தனர். அதைத்தொடர்ந்து 213 கடந்து லக்னோ போராடி த்ரில் வெற்றி பெற்றது.

    அந்தப் போட்டியில் 6 ஓவர்களில் அதிரடியாக விளையாடி விரைவாக 42 ரன்கள் எடுத்த விராட் கோலி பவர்பிளே முடிந்ததும் ஃபீல்டர்கள் வெளியே நிறுத்தப்பட்டதால் சற்று மெதுவாக விளையாடி அடுத்த 7 பந்துகளில் 8 ரன்களை எடுத்து 50 ரன்கள் தொட்டார்.

    அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் அதிவேக ரயிலை போல தன்னுடைய இன்னிங்சை வேகமாக துவங்கிய விராட் கோலி 42 ரன்களை தொட்டதும் அரை சதமடிக்க வேண்டும் என்பதற்காக சற்று மெதுவாக விளையாடி 10 பந்துகளில் 50 ரன்களை எடுத்ததாக நேரலையில் விமர்சித்தார். குறிப்பாக விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் போது நீங்கள் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக விளையாட வேண்டும் என்று அவர் விராட் கோலியை விமர்சித்தது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

    இந்நிலையில் டாப் ஆர்டரில் விளையாடினாலும் நங்கூரமாக நின்று ரன் குவிப்பதே என்னுடைய வேலை என்று விராட் கோலி கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முக்கிய நேரங்களில் நங்கூரமாக செயல்படுவது அவசியமாகும். இருப்பினும் வெளியிலிருந்து விமர்சிப்பவர்களின் கருத்துக்களை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் அது போன்ற சூழ்நிலைகளில் இருப்பதில்லை. மேலும் அவர்கள் போட்டியை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள்.

    அதாவது ஆரம்பத்திலேயே நாங்கள் அதிரடியாக விளையாடுவதை பார்க்கும் அவர்கள் திடீரென்று பவர் பிளே முடிந்ததும் என்னப்பா இவங்க அதிரடியை தொடராமல் ஸ்ட்ரைக் மாற்ற ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைக்கிறார்கள்.

    ஆனால் பொதுவாக பவர் பிளே ஓவர்களில் நீங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் இருக்கும் பட்சத்தில் அதில் வீசும் தரமான பவுலர்களுக்கு எதிரான முதல் 2 ஓவர்களில் எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பதை கண்டறிய வேண்டும். அப்போது தான் அந்த பவுலரின் கடைசி 2 ஓவரில் பெரிய ரன்களை குவிக்க முடியும். அது எஞ்சிய இன்னிங்ஸை மிகவும் எளிதாக்கும்.

    என்று கூறினார்.

    ×