என் மலர்
நீங்கள் தேடியது "அனுமன் சிலை"
- கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னங்களும் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வரப்பட்டு, கடந்த 18-ந் தேதி வழக்கின் சொத்தாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுடெல்லி:
நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்பதிலும் மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போதுவரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னங்களும் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேலும் ஒரு சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. அது சோழர் காலத்தைச் (14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது) சேர்ந்த அனுமன் சிலை ஆகும். அரியலூர் மாவட்டம் பொட்டவெளி வெள்ளூர் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கடத்தப்பட்டு உள்ளது. கடந்த 1961-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நிறுவனம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டது. 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அது மீட்கப்பட்டு அங்கு கேன்பராவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி கடைசி வாரத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, கடந்த 18-ந் தேதி வழக்கின் சொத்தாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த தகவல்களை மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
- சிலை உச்சி முதல் பாதம் வரை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கிறது.
- தற்போது 18 அடி உயர சிலையை மட்டுமே வெளியே தெரியும். மீதியுள்ள 4 அடி பூமிக்குள் இருக்கிறது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சிலர் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்கு படையெடுத்து வந்தனர். அப்போது சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் மூலஸ்தானத்தை சுவர் கட்டியும், நகை-உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றியும் அப்பகுதியினர் பாதுகாத்தனர். இதனால் கோவில் சொத்துக்கள் பறிபோகாமல் காப்பாற்றப்பட்டது.
அப்படி பாதுகாக்கப்பட்டவற்றில் ஒன்று, இன்றும் இவ்வாலயத்தில் கம்பீரமாக நிற்கும் 22 அடி உயர அஞ்சலி ஹஸ்த அனுமனின் சிலை.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த அனுமன் சிலையை, படையெடுப்பாளர்களிடம் இருந்து காப்பதற்காக, கோவில் கிணற்றின் அருகில் 23 அடி நீளத்தில் பூமியைத் தோண்டி, சிலை மண்ணுக்குள் இருக்கும் விதமாக குப்புற படுக்க வைத்தனர். மேலோட்டமாக பார்ப்பதற்கு சாதாரண கற்தூணின் மேல் பாகம் போல்தான் அது தெரியும்.

பல காலம் நடந்த படையெடுப்பால் அந்த சிலையை யாரும் மண்ணில் இருந்து வெளியே எடுக்கவில்லை. காலப்போக்கில் அந்த அனுமன் சிலை மண்ணிலேயே புதைந்து கிடந்தது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன்மேல் அமர்ந்து இளைப்பாறுவதும், சிறுவர்கள் அதன் மீது ஏறி விளையாடுவதுமாக காலம் கடந்தது.
85 ஆண்டுகள் மண்ணில் புதையுண்டிருந்த நிலையில், ஒரு தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்த கோவில் நிர்வாகிகள், அதுதொடர்பாக பிரசன்னம் பார்த்த போது, அந்த இடத்தில் ஆஞ்சநேயர் சிலை இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அந்த இடம் தோண்டப்பட்டு, விஸ்வரூப அனுமன் சிலை வெளியே எடுக்கப்பட்டது.

பின்னர் அந்த சிலையை நிறுவ இடம் தேர்வு நடந்தது. அதன்படி 1930-ம் ஆண்டு சித்திரை 19-ந் தேதி, கோவிலில் உள்ள ஸ்ரீராமர்- சீதாதேவி சன்னிதிக்கு எதிரில் இந்த ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது.
ஆகம விதிகளின்படி அஷ்டபந்தனம் செய்து பிரதிஷ்டை செய்யாததால், யார் வேண்டுமானாலும் இந்த அனுமனை தொட்டு வணங்கலாம்.
22 அடி நீளம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையில், தற்போது நாம் காண்பது 18 அடி உயர சிலையை மட்டுமே. மீதியுள்ள 4 அடி பூமிக்குள் பதிந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உச்சி முதல் பாதம் வரை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கிறது.