search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் அணி"

    • தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
    • இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.

    ஐபிஎல் 2024 தொடர் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்காக இப்போதே ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ஐபிஎல் 2025 தொடருக்கான ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அணிகளில் ரிடன்ஷன் விதிகளின்படி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

    தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. ரிடன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது ஏலத்தை அர்த்தமற்றதாகிவிடும் என்று சில ஐபிஎல் மூத்த அதிகாரிகள் அபிப்பிராயப்படுகின்றனர்.

     

    ஏலங்கள் ஐபிஎல் தொடர்களின் முக்கியமான அங்கம் என்றும் ஐபிஎல் போட்டிகளுக்கு இணையாக ஏலங்களும் தொடரை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஐபிஎல் தொடருக்கு அழகு சேர்க்கும் ஏலங்கள், ரிடன்க்ஷன் எண்ணிக்கை 4 இல் இருந்து 6 முதல் 8 வரை அதிகரிக்கப்பட்டால் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்றும் இது ஐபிஎல் தொடருக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

     

     

    விராட் கோலி உள்ளிட்ட சில முக்கிய வீரர்களே ஒரே அணியின் அடையாளமாக மாறியுள்ளனர். அவர்கள் இதுநாள் வரை ஒரே அணிக்கு விளையாடி வருகின்றனர். மற்றைய வீரர்களும் ஒரே அணியின் அடையாளமாக மாறினால் ஏலம் எடுக்கும் முறை தேவைப்படாது. ஆனால் பெரும்பான்மை வீரர்கள் ஒரே அணியுடன் தங்களை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்திக்கொள்ள இன்னும் வெகு காலம் ஆகும். அதுவரை ஏல முறை தொடரவே செய்யும். இதுவே ரிட்டன்க்ஷன் முறைக்கு தீர்வாக இருக்குமே தவிர ரிட்டன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது பயனற்றது என்று கூறப்படுகிறது.

    இதற்கு மாற்றுக்கருத்தாக, "ஐபிஎல் அணிகள் ஏலம் எடுத்த வீரர்கள் மீது அதிக அளவில் முதலீடு செய்கிறது, அவர்களுக்கு நேரத்தையும் பணத்தையும் செலவளித்து பயிற்சி தந்து தயார் படுத்துகிறது. இதனால் அந்த வீரர் அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவதே நியாயமானதாக இருக்கும். இதற்கு ரிட்டன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது மிகவும் பயனளிக்கும்" என்றும் சில மூத்த ஐபிஎல் அதிகாரிகளால் கூறப்படுகிறது.

     

    அடுத்த ஐபிஎல் தொடர்பாக பிசிசிஐ சார்பில் அணி உரிமையாளர்களுடன் சமீபத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அது நிகழவில்லை. புதியதாக செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கருத்துக்களை பெற்ற பின் முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி ஆண்டு முழுவதும் தங்களுடைய லீக் போட்டியில் விளையாடும்படி பேரம் பேசப்பட்டுள்ளது.
    • இங்கிலாந்து வீரர்களை போல ஆஸ்திரேலிய 20 ஓவர் வீரர்களையும் அணுகி உள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'டைம்ஸ் லண்டன்' பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் அணுகி உள்ளனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கவுண்டி அணி நிர்வாகம் ஆகியவற்றை விடுத்து தங்களுடன் இணைந்து முழுமையாக பணியாற்றுவது தொடர்பாக வீரர்களுடன் தொடக்க நிலை பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

    கால்பந்து விளையாட்டில் உள்ளது போலவே வீரர்கள் லீக் அணிகளுடன் ஆண்டு ஒப்பந்த முறையில் பணியாற்றுவது தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆலோசித்து வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி ஆண்டு முழுவதும் தங்களுடைய லீக் போட்டியில் விளையாடும்படி இங்கிலாந்தை சேர்ந்த 6 முன்னணி வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் சுமார் ரூ.50 கோடி வரை ஊதியமாக பேரம் பேசி உள்ளனர்.

    ஐ.பி.எல். அணிகள் உரிமையாளர்கள் சமீபகாலமாக தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் என பல நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளின் அணிகளையும் வாங்கி உள்ளன. இங்கிலாந்து வீரர்களை போல ஆஸ்திரேலிய 20 ஓவர் வீரர்களையும் அணுகி உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×