என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் சிவராஜ்குமார்"

    • கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
    • கன்னட திரைத்துறையின் முதன்மை குடும்பத்தின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அத்துடன் கட்சி தாவல்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரை நட்சத்திரங்களும் தங்களுக்கு விருப்பமான கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்துள்ளனர். நடிகர் சுதீப் ஆளும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் கன்னட திரையுலகின் முதன்மை குடும்பமாக கருதப்படும் நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருக்கிறார். முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகளான அவர், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    அதன்பிறகு அவர் கட்சியில் தீவிரமாக செயல்படவில்லை. கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவரது சகோதரர் மது பங்காரப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அவர் தற்போது சொரப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். இந்த நிலையில் கீதா சிவராஜ்குமார் ஜனதாதளம்(எஸ்) கட்சியை விட்டு விலகி இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரசில் சேருகிறார். இதன் மூலம் கன்னட திரைத்துறையின் முதன்மை குடும்பத்தின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • சிறப்பு அபிஷேகத்தில் மற்றும் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார்.

    புதுச்சேரி:

    கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவி கீதா சிவராஜ்குமார் மற்றும் குடும்பத்தின, நண்பர்களுடன் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சனீஸ்வர பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகத்தில் மற்றும் பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் யானை பிரக்ருதியிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

    பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்தனர். கூட்டத்தில் சிக்கிய அவரை பத்திரமாக மீட்டு போலீசார் கோவில் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

    அப்போது அவர் ஏற்கனவே கோவிலுக்கு வழங்கிய வெள்ளி கிரீடத்தை கோவில் நிர்வாகத்தினர் அவரிடம் காண்பித்தனர். அதனை அவர் பார்வையிட்டார்.

    நடிகர் விஜய் எனது நெருங்கிய நண்பர். அவரது ஐடியாலஜி நல்லா இருக்கிறது. நான் முன்பே சொல்லியிருந்தேன் விஜய் அரசியல் வருவார் என்று. அவருக்கு நல்ல மனசு இருக்கு. நல்ல மனசு இருப்பவர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் கள்ளச்சாராயம் இறப்பு குறித்து எனக்கு தெரியாது என்று கூறினார். 

    • அமெரிக்காவில் மியாமி மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை.
    • சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீரகப்பை பொருத்தப்பட்டுள்ளது.

    பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறுநீரகப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக கடந்த 18ம் தேதி அமெரிக்கா சென்றார்.

    அங்கு, அமெரிக்காவில் மியாமி மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் முருகேஷ் மனோகர் மேற்பார்வையில் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், மருத்துவரின் ஆலோசனையின்படி, சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    சிவராஜ்குமாருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுநீரகப்பை அகற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீரகப்பை பொருத்தப்பட்டுள்ளது.

    தற்போது, சிவராஜ்குமாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவரே வீடியோ ஒன்றை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×