search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விந்தணு தானம்"

    • இங்கிலாந்தில் சமீப காலமாக விந்தணு தானம் செய்யும் செயல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது.
    • உலகின் மிகப்பெரிய விந்து வங்கியான கிரையோஸ் கடந்த ஏப்ரலில் மான்செஸ்டரில் ஒரு கிளையை திறந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக அங்கு விந்தணு தானம் செய்யும் செயல்முறை கட்டுப்பாட்டை மீறியுள்ளது.

    அந்நாட்டில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்துக்கு மேல் கொடுக்கமுடியாது. ஆனால், விந்தணுவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரம்பு எதுவும் இல்லை. இதைப் பயன்படுத்தி விந்தணு தானம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப் படுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சிலருக்கு இங்கிலாந்திலும், உலக அளவிலும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

    கடந்த காலங்களில் அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து விந்தணு மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்துவந்தது. அதன்பின் நிலைமை முற்றிலும் மாறியது.

    2019 மற்றும் 2021-க்கு இடையில் மட்டும் 7,542 ஸ்ட்ரா விந்து இங்கிலாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    உலகின் மிகப்பெரிய விந்தணு மற்றும் முட்டை வங்கியான கிரையோஸ் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஒரு கிளையைத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்றுமதியில் 90 சதவீத பங்கைக் கொண்ட ஐரோப்பிய விந்தணு வங்கி, ஒரு நன்கொடையாளருக்கு 75 குடும்பங்கள் என உலகளாவிய வரம்பைப் பயன்படுத்துகிறது. அதன் நன்கொடையாளர்கள் சராசரியாக 25 குடும்பங்களுக்கு உதவுகிறார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

    • 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாக தான் உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
    • அந்த காரணம் தான் தொடர்ந்து விந்தணு தானம் செய்யத் என்னக்கு தூண்டுதலாக இருந்தது' என்று பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

    பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் Pavel Durov] அதன் தலைமை அதிகாரியாகவும் [சிஇஓ] உள்ளார். ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதாகும் பாவெல் துரோவ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் 12 வெவ்வேறு நாடுகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாக தான் உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

     

     

    15 வருடங்கள் முன்பு தனது நண்பர் ஒருவர் குழந்தையின்மையால் வருத்தத்தில் இருந்த நிலையில் அவரின்  வேண்டுகோளுக்கு இணங்க தனது விந்தணுவை முதல் முறையாக தானம் செய்த பாவெல் துரோவ் அன்றுதொட்டு தொடர்ந்து தனது விந்தணுக்களை தானம் செய்யத் தொடங்கியுள்ளார்.

    'முதல்முறையாக விந்தணுக்களை தயக்கத்துடனேயே தானம் செய்தேன். ஆனால் அப்போது மருத்துவர்கள் என்னிடம் தரம் வாய்ந்த விந்தணுக்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், குழந்தையின்றி வாடும் தம்பதிகளுக்கு உதவும் வகையில் விந்தணு தானம் செய்வது சமூக கடமையாகும் என்று தெரிவித்தனர். அந்த காரணம் தான் தொடர்ந்து விந்தணு தானம் செய்யத் எனக்கு தூண்டுதலாக இருந்தது' என்று பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

     

    'இதுவரை 12 நாடுகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் குழந்தை பெற எனது விந்தணுக்களை தானம் செய்து உதவியுள்ளேன். இன்னும் வருங்காலங்களில் IVF கிளினிக்கில் உறையவைக்கபட்டு பாதுகாப்பட்டுள்ள எனது விந்தணுக்கள் இன்னும் பல குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக அமையும்' என்றும் பாவெல் பெருமையுடன் கூறுகிறார். மேலும் இதுபோன்று பலரும் தங்களது விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

    • நெதர்லாந்து சட்ட விதிகளின்படி ஒரே நபர் 12க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது.
    • இசைக் கலைஞரான ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் தற்போது கென்யா நாட்டில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    ஆம்ஸ்டர்டாம்:

    நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்புச் சட்ட விதிமுறைகளின்படி, விந்தணுவை தானம் செய்யும் ஒரே நபர் 12க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது. மேலும், செயற்கை கருத்தரிப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவரே தந்தையாக இருக்கவும் அனுமதி கிடையாது. ஆனால் இந்த சட்ட விதிமுறைகளை மீறிய ஒருவர் உள்நாடு, வெளிநாடு என விந்தணு தானம் மூலம் 550க்கும் குழந்தைகளுக்கு தந்தையாகியிருக்கிறார்.

    நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர்(41). குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு உதவிடும் நோக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து தனது விந்தணுக்களை தானம் செய்வதை சேவையாக கருதி தொடங்கினார். இம்முயற்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததால் பின்னர், நாளடைவில் இதையேத் தொழிலாகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.

    நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்புச் சட்ட விதிமுறைகளின்படி, விந்தணுவை தானம் செய்யும் ஒரே நபர் 12க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது. மேலும், செயற்கை கருத்தரிப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருவரே தந்தையாக இருக்கவும் அனுமதி கிடையாது.

    நெதர்லாந்தில் உள்ள 11 செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மற்றும் பிறநாடுகளில் உள்ள இரு மையங்கள் என மொத்தம் 13 மையங்களின் மூலமாக விந்தணு தானத்தை தொடர்ந்து செய்துவந்த மெய்ஜர், இதற்கு முந்தைய தனது தானங்களின் விவரங்களை பிறருக்கு வெளிப்படுத்தாமல் இதுவரையில் சுமார் 550 முதல் 600 குழந்தைகளின் பிறப்புக்கு உதவிகரமாக இருந்துள்ளார். இவர் மூலமாக கருவுற்று, பிரசவித்த ஒரு பெண்மணி இதுபற்றியத் தகவலை அறிந்து திடுக்கிட்டார்.

    ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் இனியும் விந்தணு தானம் செய்யக் கூடாது என்று நெதர்லாந்து நாட்டில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களால் 2017-ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், வெளிநாடுகளில் வாழும் தம்பதியர்கள் மற்றும் உள்நாட்டில் உள்ளவர்களை 'ஆன்லைன்' மூலமாக தொடர்பு கொண்டு தனது 'சேவையை' அவர் தொடர்ந்து வந்ததாக அந்தப் பெண்மணிக்கு தெரிய வந்தது.

    'ஐநூறுக்கும் மேற்பட்ட முகம் தெரியாத குழந்தைகளுக்கு தந்தை என்றால்.. இவர் மூலமாக பரந்து, விரிந்த மரபணுக்களின் பரிணாம வளர்ச்சி உலகின் பல்வேறு நாடுகளில் வேரூன்றி விடுமே... ஒரே தந்தையின் வழித்தோன்றலாகப் பிறந்த உடன்பிறப்புகள் என்னும் உண்மையை அறியாமல் எதிர்காலத்தில் சில குழந்தைகள் தங்களுக்குள் காதல் வயப்பட்டு, திருமண பந்தத்தின் மூலம் இணைந்து விட்டால் சகோதரத்துவம் என்னும் சொல்லின் மாண்புகள் எல்லாம் பாழாகி விடுமே.. உடல்ரீதியாக மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் அவர்கள் வருங்காலத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிவிட நேர்ந்து வீடுமே..' என்னும் உள்ளுணர்வின் உந்துதலால் ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் இனிமேல் யாருக்கும் விந்தணு தானம் செய்யக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்' என்று கோரி அந்தப் பெண்மணி ஹாக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்குள்ள மற்றொரு தொண்டு நிறுவனமும் இதே கோரிக்கையுடன் மேலும் ஒரு வழக்கினை மெய்ஜருக்கு எதிராகத் தொடர்ந்திருந்தது.

    இவ்வழக்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதி ஹெஸ்ஸலிங், 'இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட இன்றைய நாளில் இருந்து ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் இனி யாருக்கும் விந்தணு தானம் செய்யக் கூடாது. தனது சேவைகள் தொடர்பாக விளம்பரப்படுத்தவும் கூடாது' என்று தடை விதித்து உத்தரவிட்டார்.

    நெதர்லாந்து நீதிமன்றத்தின் இந்தத் தடையை அவர் மீறும் பட்சத்தில் ஒரு லட்சம் யூரோக்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 90 லட்சம் ரூபாய்) அபராதமாக செலுத்த நேரிடும்.

    இசைக் கலைஞரான ஜோனாதன் ஜேக்கப் மெய்ஜர் தற்போது கென்யா நாட்டில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    ×