search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ஸ்வால்"

    • இந்திய வீரர் சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் 9வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

    துபாய்:

    டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் 881 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் 859 புள்ளிகள் பெற்று நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 3-வது இடம் பெற்றுள்ளார்.

    இங்கிலாந்தின் ஹாரி புரூக் 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

    3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் 9வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

    இந்தியாவின் ரோகித் சர்மா 6-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 7-வது இடத்திலும், விராட் கோலி 8-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 1017 ரன்கள் அடித்துள்ளார்.
    • ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தபடியாக இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் 888 ரன்கள் அடித்துள்ளார்.

    நடப்பாண்டில் சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

    2024 ஆம் ஆண்டில் அனைத்துவித கிரிக்கெட்டிலும் சேர்த்து 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 1017 ரன்கள் அடித்துள்ளார். இதில், ஒரு இரட்டை சதம், 2 சதங்கள், 5 அரை சதங்கள் அடங்கும்.

    இப்பட்டியலில் குசல் மெண்டிஸ் (888*), இப்ராஹிம் சத்ரான் (844*) ரோஹித் சர்மா (833*) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

    • முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
    • இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ஜெய்ஸ்வால் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 142 ரன்கள் குவித்ததன் மூலம் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் கெய்க்வாட் 2 இடங்கள் பின்தங்கி 8-வது இடம்பிடித்துள்ளார். சுப்மன் கில் 37-வது இடத்தில் உள்ளார்.

    • விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேசிங் செய்த அணி பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    • இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.

    ஹராரே:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது.

    இதில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன் மூலம் இந்திய புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேசிங் செய்த அணி பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 200 ரன்களை சேசிங் செய்தது.

    விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமான 150-க்கும் மேற்பட்ட ரன் சேஸ்கள்

    பாகிஸ்தான் vs இங்கிலாந்து, கராச்சி, 2022 (இலக்கு: 200)

    நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஹாமில்டன், 2016 (இலக்கு: 169)

    இங்கிலாந்து vs இந்தியா, அடிலெய்டு, 2022 (இலக்கு: 169)

    இந்தியா vs ஜிம்பாப்வே, ஹராரே, 2024 (இலக்கு: 153)

    பாகிஸ்தான் vs இந்தியா, துபாய், 2021 (இலக்கு: 152)

    மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 150க்கு மேற்பட்ட இலக்கை எட்ட குறைந்தபட்ச பந்துகளை எடுத்துக்கொண்ட போட்டிகளின் பட்டியலில் இன்றைய போட்டி முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 153 ரன்கள் இலக்கை 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டி இச்சாதனையை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 26 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டியது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சார்பில் அதிகபட்ச பார்ட்னஷிப்பை குவித்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இருவரும் இணைந்து 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இவர்கள் இருவரும் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே இதுநாள் வரை சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேற்கொண்டு இந்திய அணிக்காக தொடக்க வீரர்கள் இணைந்து அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி மற்றும் ஷுப்மன் கில் இருவரும் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். முன்னதாக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 165 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 156 ரன்கள் எடுத்து வென்றது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.

    இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது.

    ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள்.
    • இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அவருடைய சாதனை இன்று வரை எந்த வீரராலும் முறியடிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் என்னுடைய இந்த சாதனையை யார் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சோபர்ஸ் (365) அடித்த சாதனையை 1970 மற்றும் 80-களில் யாருமே முறியடிக்கவில்லை. அதுவும் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்கள் விளையாடும் போதும் அதை தொட முடியவில்லை. இதைப்போன்று என்னுடைய காலகட்டத்தில் சேவாக், கிறிஸ் கெயில், ஜெயசூர்யா, இன்சமாம் உல் ஹஜ், மேத்யூ ஹெய்டன் உள்ளிட்ட பல வீரர்கள் கடும் சவால் அளித்தார்கள்.

    இன்னும் சொல்லப்போனால் இந்த வீரர்கள் எல்லாம் 300 ரன்கள் மேல் அடித்தார்கள். அவர்கள் எல்லாம் அதிரடி வீரர்களாக இருந்தது இன்னொரு காரணம். ஆனால் தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் மற்றும் கில் மட்டும்தான் அதிரடியாக விளையாடுகிறார்கள். 

    இந்த இருவரும் சரியான சூழலில் சரியான நேரத்தில் விளையாடினால் நிச்சயம் 400 ரன்கள் என்ற என்னுடைய சாதனையை முறியடிக்க முடியும்.

    என்று பிரையன் லாரா கூறினார்.

    • விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும்.
    • இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.

    நியூயார்க்:

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் போட்டியில் அயர்லாந்து - இந்திய அணிகள் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் இயன் பிஷப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் தொடரின்போது ஜெய்ஸ்வாலின் பார்ம் சற்று கவலை தரும் விதமாக இருந்தது உண்மைதான். ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடக்கூடிய அளவிற்கு அவர் தகுதியுடன் இருப்பதாக நினைக்கிறேன்.

    அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அதனால் விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும்.

    இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.

    என்று இயன் பிஷப் கூறினார்.

    • இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ராஜஸ்தான் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று இருக்கிறது. தனது முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றிய ருசித்து கம்பீரமாக நடைபோட்ட அந்த அணி கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து சற்று தடுமாறுகிறது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ரியான் பராக் (531 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (504) ஜெய்ஸ்வால் (348) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஜோஸ் பட்லர் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக இடம் பெற்ற டாம் கோலர் காட்மோர், துருவ் ஜூரெல், ரோமன் பவெல் ஆகியோர் சோபிக்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தனதாக்கி விட்டது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட அந்த அணியின் முந்தைய ஆட்டம் (குஜராத்துக்கு எதிராக) மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் பில் சால்ட் (435 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோராவும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக சுனில் நரின் (461 ரன், 15 விக்கெட்), ஆந்த்ரே ரஸ்செல் (222 ரன், 15 விக்கெட்) அசத்துகிறார்கள்.

    வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

    கொல்கத்தா அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடர முழு பலத்தையும் வெளிப்படுத்தும். கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்த ராஜஸ்தான் அணி நம்பிக்கையுடன் களம் காண்பதுடன், வெற்றிப் பாதைக்கு திரும்பி 2-வது இடத்தை தக்க வைக்க போராடும். எனேவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 14 வெற்றிகள் கண்டுள்ளன.

    இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருது பெற்றார்.
    • ஜெய்ஸ்வால் இந்த தொடரில் 2 இரட்டை சதம் உள்பட மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்த தொடரில் 2 இரட்டை சதம் அடித்தார். 5 டெஸ்டில் மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்து அணி கடைபிடித்து வருகிறது. நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மெக்கலம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது பேஸ்பால் யுக்தி என அழைக்கப்படுகிறது.

    இதற்கிடையே, ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடியதற்காக எங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும் என இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்திருந்தார்.

    அவரது இந்த மட்டமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான நாசர் உசேன், ஜெய்ஸ்வால் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடுவதை கற்றுக் கொண்டார் என தக்க பதிலடி கொடுத்தார்.

    இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருக்கிறார். அவரது அதிரடியான ஆட்டத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஒருவேளை ரிஷப் பண்ட் விளையாடுவதை பென் டக்கெட் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக ஜெய்ஸ்வால் முதல் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:

    நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்தேன். கடந்த 9 மாதத்தில் என்னுடைய பேட்டிங் முன்னேற்றத்துக்கு கேப்டன ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான் காரணம்.

    வீரர்களின் அறையில் ரோகித் சர்மா இருப்பது மிகவும் நன்மையாகும். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்று வருகிறேன். நான் இந்த இருவரிடமும் நிறைய பேசி இருக்கிறேன். அவர்களது ஆலோசனை பெரிதும் உதவியது என தெரிவித்தார்.

    • பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
    • இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்தார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்தது.

    சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், நியூசிலாந்தின் முன்னணி வீரரான வில்லியம்சன், இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசங்கா ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்ததற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
    • 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஜெய்ஸ்வால். அதில், "இந்த தொடர் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இந்த தொடர் முழுவதுமே என்னுடைய பங்களிப்பை நான் சிறப்பாக வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

    நான் ஒரு பவுலரை அடிக்க முடியும் என்று முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக அந்த ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சிப்பேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதிலிருந்து நான் பின்வாங்கியதே கிடையாது. அதேபோன்று ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன்.

    இந்திய அணியை வெற்றியை நோக்கி தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாகவும் இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார். 

    • டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர்
    • கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "பேட்டிங்கிற்கு சாதகமான தர்மசாலா பிட்சில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர். குறிப்பாக, குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் கைப்பற்றி, இங்கிலாந்தை சுருட்டினர் என தெரிவித்தார்.

    பின்னர், ஓய்வு அறிவிப்பு குறித்து ரோகித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''எப்போது எனது ஆட்டம் போதுமானதல்ல என்று தோன்றுகிறதோ, அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருவதாக உணர்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த அவர், தற்போது 17ஆவது சீசனில் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட உள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ரோகித் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×