என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணாமலையார்"
- பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார்.
- கோவிலில் இருந்த ரசிகர்கள் ஸ்ரீகாந்த் உடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
ரோஜாக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதை தொடர்ந்து பார்த்திபன் கனவு, கனா கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் கோவிலில் இருந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
- காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
- மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.
சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.
காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
ரயில் நிலையம் : திட்டை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை
- மாட்டுப் பொங்கல் அன்று நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.
- கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும்.
மாட்டுப் பொங்கல் அன்று திருவண்ணாமலை கோவிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.
அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களாலான மாலை அணிவித்து பூஜை செய்வர்.
அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.
தனது வாகனத்திற்கு முக்கியத்தும் கொடுக்கும் விதமாக சிவன் இவ்வாறு எழுந்தருளுகிறார்.
கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும்.
முழு முதற்கடவுள் என்பதால் இவரை வணங்கி விட்டு சன்னதிக்குள் செல்வர்.
ஆனால் இங்கு முருகன் சன்னதி இருக்கிறது.
பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள்.
- இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.
- முருகன், இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார்.
சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி அவரது பக்தியை இகழ்ந்தான்.
அருணகிரியார் முருகனை வேண்டவே அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார்.
இதனால் இவர், "கம்பத்திளையானார்" என்று பெயர் பெற்றார்.
இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது.
இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் "கோபுரத்திளையனார்" என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார்.
அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார்.
அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர்.
இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.
- பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
- பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.
திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது.
இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர்.
எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார்.
தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது.
ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.
பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.
இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன.
மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
- திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
- இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.
1. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.
3. வல்லாள மன்னன் நினைவு நாளில் அவனுக்கு இன்றும் திருவண்ணாமலை ஈசன் திதி கொடுக்கிறார்.
4. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.
5. திருஞான சம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்தின் பதிகத்திலும் 9வது பாடலில் அண்ணாமலையாரை குறிப்பிட்டுள்ளார்.
6. திருவண்ணாமலை ஈசனை "தீப மங்கள ஜோதி நமோ நம" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
7. ஆடி மாதம் பூரம் தினத்தன்று உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதித்தல் நடைபெறும்.
இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க முடியாது.
8. திருவண்ணாமலை தலத்தில் தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.
9. மகா சிவராத்திரி தொடங்கியதும் இந்த தலத்தில் தான்., என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10. கோவில்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யும் போது அஷ்ட பந்தனம் செய்வது தான் வழக்கம்.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் தங்கத்தைத் கொண்டு சொர்ண பந்தம் செய்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
11. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.
12. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்ட சராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.
13. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனத்தை ஒரு தடவை செய்தாலே, அது 21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும் என்று தல புராணப் பாடலில் கூறப்பட்டுள்ளது.
14. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஒரு வாரம் வரை எரியும்.
15. கார்த்திகை தீபம் தினத்தன்று அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஒன்று சேர கிரிவலம் வருவார்கள்.
அவர்களுடன் பக்தர்களும் சேர்ந்து வருவது புண்ணியமாகக் கருதப்படுகிறது.
16. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதையும், "இறைவன் ஒருவனே" என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது.
17. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள கால பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.
பிறகு மாலையில், அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.
18. திருவண்ணாமலை தீபத்தை காண ஆண்டு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் திரள்கின்றனர்.
19. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகமாகும்.
20. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள்.
இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்" இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.
21. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம்.
22. இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.
23. வல்லாள மன்னனுக்கு மகனாக வந்து அவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.
24. அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த தலம் இது தான்.
25. இத்திருக்கோவிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் கொண்டு தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.
தெற்கு கோபுரமானது, திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம், பேய்க்கோபுரம், வடக்குக் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.
26. கோவிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி மற்றும் ரமணர் தவம் செய்த இடம், தரிசிக்கத் தக்கது.
27. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.
28. விசுவாமித்திரர், பதஞ்சலி வியாக்ரபர்தர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
29. 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோவில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.
30. வள்ளல் பச்சையப்பர் இக்கோவிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோவிலில் உள்ளது.
- திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
- வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால், பெண்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்
திருவண்ணாமலையில் நாம் எந்த கிழமை கிரிவலம் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் வரும் திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இது தொடர்பாக கூறப்படும் புராண நிகழ்வு வருமாறு:
ஒரு காலத்தில் அசுரர்கள் தங்களுக்கு நிறைய செல்வங்களை வழங்க வேண்டும் என்று திருமகளை வற்புறுத்தினார்களாம்.
ஆனால் திருமகள் அவர்களின் பேராசைக்கு இணங்காமல் அவர்களிடமிருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு வந்தாள்.
அங்கு தைல எண்ணையில் தீபமாய் உறைந்து தீபமாக கிரிவலம் வந்தாள்.
அன்றைய தினம் ஒரு வெள்ளிக்கிழமை ஆகும்.
அதனால் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் இல்லறப் பெண்களுக்கு லட்சுமி கடாட்சமும்,
இல்லற இன்பமும், அமைதியும், மாங்கல்ய பலமும் நிச்சமயாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
எதிரிகளால் ஏற்படுகின்ற பில்லி, சூனியம், ஏவல் முதலான துன்பங்களை அகற்றி மனக்கோளாறுகளை நீக்கவல்லது இந்த வெள்ளிக்கிழமை கிரிவலமாகும்.
எனவே வரும் கார்த்திகை தீப தின கிரிவலத்தை தவற விடாதீர்கள்.
- புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார்.
- இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்" இருக்கிறது.
மகான் ரமணருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டான போது இக்கோவிலில் உள்ள பாதாளத்துக்குள் சென்றார்.
அங்கு ஒரு புற்று இருந்தது.
புற்றிற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து விட்டார்.
பிற்காலத்தில் சிவன் அருளால் முக்தி பெற்றார்.
இந்த இடத்தில் எதிரில் யோக நந்தியுடன், "பாதாள லிங்கம்" இருக்கிறது.
கிரிவலப் பாதையில் மலைக்கு பின்புறம் நேர் அண்ணாமலையார் தனிக்கோவிலில் அருளுகிறார்.
இவ்விரு லிங்க தரிசனமும் விசேஷமானது.
மரண பயம் நீங்க இவர்களிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
சிவபெருமானை வழிபட மூன்று முக்கிய தினங்கள் ஏற்றவை.
மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய மூன்று நாட்களும் மிக சிறந்தவை.
திருக்கார்த்திகையில் திரு அண்ணாமலையிலும், திருவாதிரையில் சிதம்பரத்திலும், சிவராத்திரியில் காசி மற்றும் ராமேஸ்வரத்திலும் வழிபடுதல் மிக சிறப்பு.
- கோவிலில் கருவறையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.
- இங்கு வரதராஜ பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோவிலில் கருவரையில் மூலவர் ஸ்ரீ வரதர், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேதராக காட்சி தருகிறார்.
மூலவரின் முன்பாக அழகிய வடிவுடன் பக்தர்களுக்கு அருள் பாளிக்கும் வரதராச பெருமாளை உயிரோட்டமாக பார்த்து கொண்டேயிருக்கலாம்.
பொதுவாக இறைவன் கிழக்கு முகமாகவே அருள்பாளிப்பார்.
ஆனால், இத்திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வரதராசப் பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருப்பது மிகவும் விசேஷமாகும்.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி மற்றும் அமாவாசை தினங்களில் சுவாமிக்கு வழிபாடும் விசேஷ திருமஞ்சனமும் நடைபெற்று வருகிறது.
திருமணத்தடை புத்திர தோஷம் உள்ளவர்கள் இவ்வரதராச பெருமாள் இறைவனை உள்ளன்போடு
சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வர,
விரைவில் திருமணமும் ஏகாதசி தினத்தில் விரதமிருந்து வழிபட்டு வர, மகப்பேறும் பெறுவதாக ஐதீகம்.
திருப்பதியில் ஏழுமலையானுக்கு நடைபெற்று வரும் பூஜா முறையான வைகானச ஆகமப்படி,
இவ்வரதராச பெருமாளுக்கு பூஜை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் சென்று வரதராசரை தரிசிக்க இயலாதவர்கள் இத்திருத்திலத்தில் தரிசித்து அருளைப் பெறுகின்றனர்.
- இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.
- நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த சன்னதி ஆலயத்தின் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது.
ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி திருநாளில் இவ்விஜய விநாயகருக்கு காலை அபிஷேகம்,
சந்தன காப்பு மாலை, ஸ்ரீமூஷிக வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடும், நடைபெற்று வருகிறது.
பவுர்ணமிக்கு அடுத்த ஐந்தாவது நாள் தேய்பிறையில் வரும் சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை அபிஷேகமும்,
தூப தீப ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெற்று, சுவாமி உற்சவ மூர்த்தி திருக்கோவிலை வலம் வருவார்.
இத்திருக்கோவிலின் மூலவரான அருள்மிகு அருணாச்சலேசுவரருக்கு, ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும்,
விசேஷ அபிஷேகமும் நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
இத்திருக்கோவிலில் பிரதோஷ வேளையில் நெய் விளக்கேற்றி வெல்லம் கலந்த அரிசியை நந்தி பெருமானுக்கு நிவேதிக்கிறார்கள்.
அருகம்புல் ஆராதனையும், வில்வதளத்தில் அர்ச்சனையும் அலங்காரமும் வெகு விமரிசையாக பிரதோஷ காலத்தில் பக்த கோடிகளால் நடைபெறும்.
இத்திருக்கோவிலில் பிரதோஷ காலத்தில் பிரதோஷ நாயனார் ரிஷப வாகனத்தில்,
குடை மற்றும் வெண்சாமரங்களுடன், தேவாரம் மற்றும் மங்கல பண் இன்னிசையோடு திருக்கோவிலினை பக்தர்கள் சூழ, பவனி வருவர்.
பக்த கோடிகள் பவுர்ணமியில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இயலாதோர்,
இந்த அருணாசலேசுவரரை தரிசித்து வேண்டும் வரத்தினையும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவதாக நம்புகின்றனர்.
இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.
இரவு நான்கு கால பூஜைகளும் வில்வ தளத்தால் அர்ச்சிக்கப்பட்டு அனைத்து வித அபிஷேகங்களும், நடைபெற்று
ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு வஸ்திரங்களுடன் ஈசன் காட்சி அளித்து அருள்பாளித்து வருகிறார்.
- ஆறுமுகங்களையும் ஆறு திருக்கரங்களையும் உடையவர்.
- இவரை திருக்கோவிலின் பிரதான வாயிலில் இருந்தே தரிசித்து அருளை பெறலாம்.
இந்த சன்னதி ஆலயத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆறுமுகர், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் எழுந்தருளி, தம்பதி சமேதராய் அருள்பாளிக்கிறார்.
ஆறுமுகங்களையும் ஆறு திருக்கரங்களையும் உடையவர்.
வலக்கரங்களில் ஒன்று அபய முத்திரையை காட்ட மற்றவற்றில் வேலும், கத்தியும் அமைந்துள்ளது.
இடக்கையில் கலிசதையும் கேடயத்தையும் கொண்டு மயில் மேல் அமர்ந்த நிலையில் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார்.
இவரை திருக்கோவிலின் பிரதான வாயிலில் இருந்தே தரிசித்து அருளை பெறலாம்.
ஒவ்வொரு மாதமும், கிருத்திகை, விசாகம் மற்றம் சஷ்டி பவருங்களில் முருகப்பெருமானுக்கு அபிஷேகமும், ஆராதனையும்,மூலவருக்கு நடைபெற்று அதனை தொடர்ந்து
ஆறுமுகர், சமேத வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகள் வாத்யங்களுடன், திருக்கோவிலின் உள் பிரகாரத்தை வலம் வருவர்.
வழிக்கு துணை ஸ்ரீ ஆறுமுகர்
"வழிக்கு துணை திருமென் மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு எசய்த பழிக்கு துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி வழிக்கு துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே"
(இப்பாடலை வெளியே செல்லும்போது கூறினால் வழித்துணையாக ஸ்ரீஆறுமுகர் வருவார்).
- மகேசுவர வடிவங்களுள் ஒன்று தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியின் வடிவம்.
- இவர் கர்ப்பக்கிரகத்தின் தென்புறத்தில் தெற்கு முகமாக வீற்றிருக்கிறார்.
மகேசுவர வடிவங்களுள் ஒன்று தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியின் வடிவம்.
இவர் இத்திருத்தலத்தில் கர்ப்பக்கிரகத்தின் தென்புறத்தில் தெற்கு முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
கல்லால மரத்தின் கீழ் யோகாசனத்தில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் நிலையிலும்,
முயலகன் என்ற அரக்கனை மிதித்த நிலையில் ஒரு திருவடியும், வீராசனமாக மற்றொரு திருவடியும் திகழ,
நான்கு திருக்கரங்களில் வலப்பகமுள்ள இரண்டில் சின் முத்திரையும், ருத்ராதட்ச மணிவடமும் கொண்டு,
இடப்பக்க திருக்கரங்களில் ஒன்றில் அமுத கும்பமும், மற்றொன்றில் வேதமும் கொண்டு காட்சி தருகிறார்.
இத்திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்திக்கு ஒவ்வொரு வியாழனன்றும், முழு கடலையினாலான
மாலையினை சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபட்டு மாணவர்கள் தங்களது வாழ்வில் கல்வி வளம் பெற்று வருகின்றனர்.
மேன்மைமிக்க இந்த ஞானக்கடவுளை வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபட
ஞானமும், செல்வமும் பெருகும் சிவஞானமுக்தி கிடைக்கும்.