என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டச்சத்து டானிக்"

    • நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
    • கோவை வேளாண் பல்கலைகழகம் தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே தென்னை மரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும் வகையில் கோவை வேளாண் பல்கலைகழகம் சார்பில்தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் எளிதாக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து டானிக் மானியத்தில் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது :- தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் கோவை வேளாண் பல்கலைகழகம் தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அதனை கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்/ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×