search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சி காமாட்சி"

    • இந்து மதத்தின் சிறப்பை உலகம் அறிய செய்தவர் ஆதிசங்கரர்
    • சங்கரர் என்றால் (சம்+ கரன்) நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்று அர்த்தமாகும்.

    * இந்து மதத்தின் சிறப்பை உலகம் அறிய செய்தவர் ஆதிசங்கரர்

    * சங்கரர் என்றால் (சம்+ கரன்) நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்று அர்த்தமாகும்.

    * பத்ரிநாத், திருச்செந்தூர் உள்பட பல ஆலயங்களில் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் அர்ச்சகர்களாக இருந்து பூஜை செய்யும் முறையை ஆதிசங்கரர் உருவாக்கினார்.

    * ராமேசுவரம் கோவிலில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிராமணர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற முறையை கொண்டு வந்ததும் ஆதிசங்கரரே.

    * காசியில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த நவனாப் புதிய சிந்தனை பெற்ற ஆதிசங்கரர் 'மனீஷா பஞ்சகம்' என்ற 5 சுலோகங்களை இயற்றினார்.

    * ஒரு தடவை ஆதிசங்கரர் இமயமலையில் அடர்ந்த காட்டுக்குள் தியானம் செய்ய சென்றார். அப்போது அவர் கமண்டலத்தையும் தண்டத்தையும் தூக்கி வீசினார். அந்த தண்டம் மரமாகவும் கமண்டலம் நதியாகவும் மாறியது.

    * அம்பாளை 64 உபகாரங்களை அளித்து வழிபடுவார்கள். இந்த வழிபாட்டின் போது ஸ்ரீ சக்கர சிம்மாசனத்தில் அன்னை எழுந்தருளி இருப்பதாக பாவித்து பூஜிப்பது நல்லது.

    * யந்திரத்தின் நடுவில் பிந்துவில் அம்பிகையை எழுந்தருளச்செய்து,அவளது பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி ஒவ்வொரு கோணங்களிலும் எழுந்தருளி இருப்பதாக பாவித்து வழிபடுவதே ஸ்ரீ சக்கர பூஜையாகும்.

    * ஆதிசங்கரர் நிறுவியது போன்று தற்போது பல பல அம்பிகை தலங்களில் ஸ்ரீசக்கர வழிபாடு நடத்தப்படுகிறது. ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றி மதில்களாகவும் கோட்டைகளாகவும் 44 வரிசைகளை பாவனையுடன் பூஜிக்க வேண்டும். இதுவே ஸ்ரீ சக்கர பூஜையின் முதன்மையான அம்சமாக சொல்லப்படுகிறது.

    * ஸ்ரீ சக்கர வழிபாடுக்கு " வித்யோபாகனை" என்ற பெயரும் உண்டு. ஆதிசங்கரர் வகுத்து கொடுத்துள்ள நெறிப்படி இந்த ஸ்ரீ சக்கர வழிபாடு நடத்தப்படுகிறது.

    * ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீ சக்கரத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அவற்றில் கணித அறிவும், விஞ்ஞான உணர்வும் நிரம்பி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர்.

    * சக்கரங்கள் அனைத்துக்கும் ஸ்ரீ சக்கரமே ராஜாவாக கருதப்படுகிறது. எனவே ஸ்ரீ சக்கரத்தை " சக்ரராஜம்" என்று போற்றுகிறார்கள்.

    * யந்திரங்களில் நிறைய எழுத்துக்கள் காணப்படும். ஆனால் சக்கரத்தில் இருப்பது இல்லை.

    * தென்இந்தியாவில் ஸ்ரீ சக்கர வழிபாடுகள் பரசுராம கல்ப நூல் வழிப்படி நடத்தப்படுகிறது.

    * ஆதி சங்கரர் நிறுவியுள்ள ஸ்ரீ சக்கரங்களை முறைப்படி வழிபடுபவர்கள் யோகமும், குரு பலனும் கிடைத்து பரம ரகசியங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெறமுடியும்.

    • காஞ்சியில் புண்ணிய கோடி ஆலயத்தில் சங்கரரது சிற்பச்சிலை.
    • விஷ்ணு காஞ்சியில் அனந்தசரஸ் குளத்தின் தெற்கே நான்கு தூண் மண்டபத்தில் சங்கரரது சிற்பச் சிலை.

    காஞ்சியில் சங்கரர் வாழ்ந்ததை நினைவூட்டும் வகையில் காஞ்சியைச் சுற்றிலும் உள்ள கோவில்களிலும், காஞ்சி மாநகரின் உட்புறமுள்ள சிவ, விஷ்ணு ஆலயங்களிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் சங்கராச்சாரியார் உருவத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள், கல்வெட்டுகள், எழுத்துப் பொறிப்புகள், சிலா பிம்பங்கள் போன்ற எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

    1. காமாட்சி கோவிலின் கர்ப்ப கிரகத்திற்கு வடகிழக்கே சற்று உயரத்திலுள்ள மண்டபத்தில் சங்கரரது ஜீவகளையுள்ளது போல் ஒரு சிற்பம்.

    2. யாத்ரோத்சவ காமாட்சி, பங்காரு காமாட்சி அம்மன்களின் சிற்றாலயங்களிலும் செதுக்கு வேலைகொண்ட சங்கரரின் உருவங்கள்.

    3. குமர கோஷ்டத்தில் சங்கரரது சிற்பம்.

    4. காஞ்சியின் அண்மையில் சிவலிங்க மேட்டுக்கோவிலில் சங்கரர் சிற்பச் சிலை.

    5.காஞ்சியில் புண்ணிய கோடி ஆலயத்தில் சங்கரரது சிற்பச்சிலை.

    6.விஷ்ணு காஞ்சியில் அனந்தசரஸ் குளத்தின் தெற்கே நான்கு தூண் மண்டபத்தில் சங்கரரது சிற்பச் சிலை.

    7. காஞ்சி வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் சங்கரர் சிற்பச் சிலை.

    8. வைணவர்களின் தலை சிறந்த கோவில்களில் ஒன்று ஸ்ரீரங்கம் என்பது உலகறிந்த உண்மை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சங்கரர் சிற்பம் சந்திர புஷ்கரணி கரையில் உள்ளது.

    9. சென்னையருகில் திருவொற்றியூர் சங்கர மடத்தில் பூஜை செய்யும் புனித இடத்தில் உள்ள சுவர் ஒன்றில் தனது நான்கு பிரதான சிஷ்யர்களோடு சங்கராச்சாரியார் அமர்ந்திருக்கும் காட்சி.

    10. விஷ்ணு காஞ்சி வரதராஜர் கோவிலுக்குள் பெருந்தேவி அம்பாள் கர்ப்ப கிரகத்திற்குள் நுழையும் வழிக்கு அருகிலுள்ள பெரிய கற்றூண்களைத் தாங்கும் உத்திரத்தை ஆசனமாக கொண்ட உட்கார்ந்த நிலையிலுள்ள வியாசர் கற்சிலையும் அண்மையிலேயே சிறு கற்றூண்கள் தாங்கும் சிறிய உத்திரத்தின் மீது சங்கரர் கை கூப்பி நிற்கும் நிலையிலும் சிற்பம் உள்ளது.

    செவிலிமேடு, பாப்பான் சாவடி, பூவிருந்தமல்லி போன்ற ஊர்களின் ஆலயங்களில் சங்கரரை நினைவூட்டும் சான்றுகள் எண்ணற்றவை காணக்கிடக்கின்றன.

    • கயிலாயத்தில் ஆதிசங்கரர், சிவபெருமானை வணங்கி பொங்கிப் பொலியும் பூரண அருளோடு புறப்பட்டார்.
    • அப்போது சங்கரரிடம் ஐந்து ஸ்படிகலிங்கங்களை... உலக நன்மைக்காக இறைவன் அருளினார்.

    கயிலாயத்தில் ஆதிசங்கரர், சிவபெருமானை வணங்கி பொங்கிப் பொலியும் பூரண அருளோடு புறப்பட்டார்.

    அப்போது சங்கரரிடம் ஐந்து ஸ்படிகலிங்கங்களை... உலக நன்மைக்காக இறைவன் அருளினார்.

    சங்கரர் அந்த 5 லிங்கங்களில் முக்திலிங்கத்தையும் பதரிகாசிரமத்திலும், நேபாளத்தில் நீலகண்ட சேத்திரத்தில் வரலிங்கத்தையும்,

    மோட்சலிங்கத்தைச் சிதம்பரத்திலும், போகலிங்கத்தைச் சிருங்கேரியிலும், யோகலிங்கத்தைக் காஞ்சீபுரத்திலும் பிரஷ்டை செய்தார்.

    ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து கடமைகளையும் ஆதிசங்கரர் தமது நூல்களில் தொகுத்து அளித்துள்ளார்.

    விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு,சூரியன் ஆகிய 6 தெய்வங்களின் வழிபடும் முறையை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தியதால் ஆதிசங்கரருக்கு, "ஷண்மதஸ்தாபசாச்சாரியார்" என்ற பெயர் ஏற்பட்டது.

    விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை அனைத்து கடவுள்கள் மீதும் சங்கரர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அந்த பாடல்கள் அனைத்தும் எளிய முறையில், உயர்வான தத்துவங்களைக் கொண்டதாக உள்ளன.

    • தன் பரம குரு கௌட பாதர் இயற்றிய மாண்டூக்ய காரிகாவிற்கு ஒரு விளக்க நூல் இயற்றியுள்ளார்.
    • உபநிஷத்துக்களில் உருவில் சிறியதாக விருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்துள்ளது இது.

    ஆதிசங்கரர் ஸ்தோத்திரங்கள் மற்றும் வேதாந்த நூல்கள் ஏராளமாக ஏழுதிஉள்ளார்.

    முக்கிய தசோபநிஷத்துக்களுடன் ச்வேதாச்வதரோபநிஷத், ந்ருஸிம்ஹ பூர்வ தாபனியோபநிஷத், ந்ருஸிம்ஹோத்தர தாபனியோபநிஷத் இவற்றிற்கும் விளக்க உரை எழுதியுள்ளார்.

    தன் பரம குரு கௌட பாதர் இயற்றிய மாண்டூக்ய காரிகாவிற்கு ஒரு விளக்க நூல் இயற்றியுள்ளார்.

    உபநிஷத்துக்களில் உருவில் சிறியதாக விருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்துள்ளது இது.

    உபநிஷத்தின் முக்கிய பாகத்தில் 12 வாக்கியங்கள் தான் இடம் பெறுகின்றது இது. பிரணவத்தின் பொருளையும் சக்தியையு-ம் விளக்குகிறது.

    இவற்றைத் தவிர வியாஸரின் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு அரிய விளக்க உரை எழுதியுள்ளார்.

    மஹாபாரதத்தில் வரும் (1) ஸனத் ஸ§ஜாதீயம், (2) பகவத்கீதை (3) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் இம்மூன்று நூல்களுக்கும் சங்கரர் பாஷ்யம் எழுதியுள்ளார்.

    விவேக சூடாமணி, உபதேச ஸாஹஸ்ரீ, ஆத்ம போதம் போன்ற பிரகரணக்ரந்தங்களையும் இயற்றியுள்ளார்.

    வேதாந்த தத்துவத்தை விளக்க பல க்ரந்தங்களை இயற்றியுள்ளார். இவ்வாறு ஸ்ரீ சங்கரர் மக்கள் அக்ஞான இருளிலிருந்து ஞான ஒளிபெற பரம உபகாரம் செய்துள்ளார்.

    • ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவினார்.
    • அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.

    ஆதி சங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளில் நான்கு பீடங்களை நிறுவி, அதற்கு தனது தலைமைச் சீடர்களை பீடாதிபதிகளாக நியமித்தார்.

    முதல் பீடாதிபதி திசை பீடம் மகாவாக்கியம் வேதம்

    பத்மபாதர் கிழக்கு கோவர்தன மடம் பிரக்ஞானம் பிரம்மம் ரிக் வேதம்

    சுரேஷ்வரர் தெற்கு சிருங்கேரி சாரதா மடம் அஹம் பிரம்மாஸ்மி யசுர் வேதம்

    அஸ்தாமலகர் மேற்கு துவாரகை காளிகா மடம் தத்துவமசி சாம வேதம்

    தோடகர் வடக்கு ஜோஷி மடம் அயமாத்மா பிரம்மம் அதர்வண வேதம்

    நிர்வாணாஷ்டகம்

    முதன்மைக் கட்டுரை: நிர்வாணாஷ்டகம்

    நிர்வாணாஷ்டகம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.

    இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம்ஆகியற்றை மறுத்து இறுதியில் பிரம்மமே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.

    ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.

    • கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று.
    • இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

    தொன்று தொட்டு நிலவி வந்த

    சிவனை வழிபடும் சைவம்,

    திருமாலை வழிபடும் வைணவம்,

    சக்தியை வழிபடும் சாக்தம்,

    விநாயகரை வழிபடும் கணாபத்தியம்,

    முருகனை வழிபடும் கௌமாரம்,

    சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.

    அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.

    வாதங்கள்

    கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

    கர்ம மீமாம்ஸா எனப்படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர்.

    மந்தன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.

    • இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.
    • இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

    துறவறம்

    தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

    மனீஷா பஞ்சகம்

    தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.

    அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர்.

    அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.

    உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார்.

    இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.

    இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

    • ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது.
    • பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

    பொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது.

    இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது.

    இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.

    பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது.

    இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான்.

    நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது.

    நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது.

    நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது.

    இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது.

    உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன.

    ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது.

    அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார்.

    ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது.

    பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

    • காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.
    • தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

    சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி

    என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார்.

    காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.

    தமது 32ஆம் அகவையில் கேதார்நாத்தில் சமாதி அடைந்த சங்கரர் பொது நம்பிக்கையில் இந்து மதத்தின் மாபெரும் சிற்பி எனப் போற்றப்டுகிறார்.

    காலம்

    கி.மு நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.

    • அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
    • மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது.

    ஆதிசங்கரர், ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.

    இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

    இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.

    மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது.

    சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

    • காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால் (கல் தூண்களால்) அமைக்கப்பட்டுள்ளது.
    • ஸ்ரீ சக்கர பீடத்தைப் பூஜித்து, ஆதி சங்கரர் அன்னையின் அருள் பெற்றார் என்று கோவில் வரலாறு கூறுகின்றது.

    காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால் (கல் தூண்களால்) அமைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில், நாம் தரிசனம் செய்யக்கூடிய சந்நிதிகள் இருபத்துநான்கு. அவையாவன:

    காயத்ரி மண்டபம்

    காமகோடி காமாட்சி (கருவறையில்)

    காமகோடி பீடமாகிய ஸ்ரீ சக்கரம் (கருவறையில்)

    தபஸ் காமாட்சி

    பிலாகாசம்

    அரூப லக்ஷ்மி எனப்படும் அஞ்சன காமாட்சி

    வராஹி

    சந்தான ஸ்தம்பம்

    அர்த்த நாரீஸ்வரர்

    ரூப லக்ஷ்மியும், கள்ளர் பெருமாளும்

    அன்னபூரணி

    தர்ம சாஸ்தா

    ஆதி சங்கரர்

    துர்வாச முனிவர்

    உற்சவ காமாட்சி

    துண்டீர மகாராஜா

    (அஷ்ட புஜ) மகா சரஸ்வதி

    தர்ம ஸ்தம்பம்

    காசி கால பைரவர்

    துர்க்கை

    காசி விஸ்வநாதர்

    பஞ்ச கங்கை

    பூத நிக்ரக பெருமாள்

    அகஸ்தியரும், ஹயகிரீவரும்

    மேற்கண்ட சந்நிதிகளுள், முக்கியமாகக் கருதப்படும் சில சந்நிதிகளைப்பற்றி விபரமாகப் பார்ப்போம்.

    காயத்ரி மண்டபம்

    காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால் (கல் தூண்களால்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் மத்தியில்தான், காமாட்சி அம்மன் மூல விக்கிரகமாக அழகுற அமர்ந்திருக்கிறாள்.

    காமகோடி காமாட்சி

    மேற்படி காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அன்னை காமாட்சி அம்பாள் தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். அவளது திருக்கரங்களில், பாசம், அங்குசம், மலர் அம்பு (புஷ்ப பாணம்), கரும்பு வில் முதலிய ஆயுதங்களைத் தாங்கி இருக்கின்றாள். இங்கு, மூலமூர்த்தியாகிய அம்பிகையே ஸ்தூல வடிவத்தில், தன்னுடைய பக்தர்கள் தன்னைத் தரிசித்த மாத்திரத்திலேயே சகல வரங்களையும் தந்து அருள் புரிவதால், அன்னை காமகோடி காமாட்சி என்னும் திருநாமத்துடன் விளங்குகின்றாள்.

    காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். அந்த சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர்.

    அரூப லக்ஷ்மி என அழைக்கப்படும் அஞ்சன காமாட்சி

    மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லக்ஷ்மியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.

    (அழகே உருவான லக்ஷ்மி தேவி அரூப உருவம் கொண்டது ஏன்? இக் கேள்விக்குரிய பதிலாக, ஒரு சுவையான கதை நமது புராணங்களில் காணப்படுகின்றது. அந்தக் கதையைப் பின்னர் படியுங்கள்.)

    காமகோடி பீடம் என அழைக்கப்படும் ஸ்ரீ சக்கரம்

    அன்னை காமாட்சியின் காரண வடிவமான ஸ்ரீ சக்கரம், கருவறையினுள், மூலவரான காமாட்சி அம்பாளின் எதிரில் காட்சியளிக்கின்றது. (அதனால், இத் திருத்தலம் ஸ்ரீ சக்கர பீடத் தலம் என அழைக்கப்படுகின்றது). அன்னை காமாட்சியே ஸ்ரீ சக்கரமாகவும் விளங்குகின்றாள். வட்ட வடிவமான தொட்டி போன்று சக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லக்ஷ்மிகளின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொட்டியின் மத்தியில், பீடத்தில், அபூர்வ சக்திகள் நிறைந்த ஸ்ரீ சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

    இந்த ஸ்ரீ சக்கர பீடத்தைப் பூஜித்து, ஆதி சங்கரர் அன்னையின் அருள் பெற்றார் என்று கோவில் வரலாறு கூறுகின்றது.

    சந்தான ஸ்தம்பம்

    காமாட்சி அன்னையின் இடது புறத்தில் உள்ள வராஹி தேவியின் எதிரில், சந்தான ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது அம்பாளின் அருள்வாக்கு.

    அர்த்தநாரீஸ்வரர்

    காயத்ரி மண்டபத்தில், தேவிக்கு வலது பக்கத்தில் தெற்குத் திசை நோக்கியவண்ணம் அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி உள்ளது.

    காசி விஸ்வநாதர்

    காமாட்சி அன்னை ஆலயத்தின் மூன்றாவது பிரகாரத்தில், கிழக்குப் பக்கத்தில், கிழக்குத் திசையை நோக்கியவண்ணம் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.

    மகிஷாசுரமர்த்தனி

    காமாட்சி அன்னையின் ஆலயத்தில் மூன்றாவது பிரகாரத்தில், கீழ்க் கோபுரத்தின் உட்புறம், தேவியை நோக்கியவண்ணம், மகிஷாசுரமர்த்தனி தேவி நின்ற கோலத்தில் அருள் புரிகின்றாள்.

    அன்னபூரணி

    காமாட்சி அன்னையின் முதல் பிரகாரத்தில், காயத்ரி மண்டபத்துக்குச் செல்லும் வழியில் அன்னபூரணி அன்னையின் சந்நிதி கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ளது.

    அழகே உருவான லக்ஷ்மி தேவி, காஞ்சிபுரத்தில் அரூப லக்ஷ்மியாக வடிவம் கொண்டது ஏன்? நமது புராணங்கள் கூறும் சுவையான கதையை இப்போது படியுங்கள்.

    முன்னொரு காலத்தில், அமுதத்தை அடைவதற்காக, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து, பாற்கடலைக் கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்கள் ஒருபுறமாகவும், அசுரர்கள் மறு புறமாகவும் நின்று, பாம்பை இருபக்கமும் மாறி மாறி இழுத்து, பாற்கடலைக் கடைந்தார்கள். வலி தாங்க முடியாமல் வாசுகிப் பாம்பு விஷக் காற்றைக் கக்கியது. அந்த விஷக்காற்றின் தாக்கத்தால், மகாவிஷ்ணுவின் திரு மேனி (உடல்) கறுப்பாக மாறி விட்டது.

    பாற்கடலை மேலும் கடைந்தபோது, அங்கே லக்ஷ்மி தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு மணந்துகொண்டார். அப்போது, லக்ஷ்மி, மகாவிஷ்ணுவின் கறுத்த மேனியைப் பார்த்துப் பரிகாசம் செய்தாள். அவர் தன்னைவிட அழகில் குறைந்தவரே என்று கேலி செய்தாள்.(லக்ஷ்மி தேவி அழகிய பொன் நிற மேனியை உடையவள்.)

    லக்ஷ்மியின் கர்வத்தை அடக்க விரும்பிய மகாவிஷ்ணு, "நீ கர்வம் கொண்டு என்னைப் பரிகாசம் செய்ததால், உன்னுடைய அழகு அரூபமாகப் போகக் கடவது" என்று சாபமிட்டார்.

    மனம் வருந்தி அழுது, மன்னிப்புக் கோரிய லக்ஷ்மியிடம், "நீ காமகோட்டம் (காஞ்சிபுரம்) சென்று தவம் செய்" என்று கூறினார்.

    அவ்வாறே, தாங்கமுடியாத மனவருத்தத்துடன், காமகோட்டம் வந்துசேர்ந்த லக்ஷ்மியை வாழ்த்தி வரவேற்ற அன்னை காமாட்சி, அவளுக்கு" அஞ்சன காமாட்சி" என்று பெயரிட்டு, தன இடது பக்கத்தில் அமர்ந்திருக்குமாறு இடம் கொடுத்தாள்.

    மேலும், "என்னை வணங்க வரும் பக்தர்கள் பெறும் அர்ச்சனைக் குங்குமத்தை உன் திருவடிகளில் சமர்ப்பிக்கும்போது, அந்த அர்ச்சனைக் குங்குமத்தின் மகிமையெல்லாம் ஒன்றுசேர்ந்து, உன் உண்மையான வடிவத்தைப் பெறுவாயாக. மேலும், உன்னை உள்ளன்புடன் வணங்கும் பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்கி, அவர்களுக்கு நல்ல வாழ்வை வழங்குவாயாக" என்று கூறி அன்னை லக்ஷ்மி தேவிக்கு அருள் புரிந்தாள்.

    அன்றுமுதல், மங்கள நாயகியாம் அன்னை காமாட்சியின் அருட்பார்வையாலும், குங்குமப் பிரசாத மகிமையாலும், இழந்த அழகையெல்லாம் மீண்டும் பெற்று, லக்ஷ்மி தேவி அழகுருக்கொண்டு விளங்கினாள்.

    காமாட்சி அன்னையின் திருக்கோவிலில், அன்னை காமாட்சிக்கு நடைபெறும் மாசி மாதப் பிரமோத்சவம் மிகவும் விசேடமானது. இவ்விழாவின் இறுதிநாள் உதயம் விசுவரூப சேவை மிகவும் முக்கியத்துவமும், விசேடமும் உடையது.

    தன்னை நாடி வரும் பக்தர்களின் இன்னல்களைப் போக்கி, இன்பத்தை நல்கும் மங்கள நாயகியாய், வேண்டுவார்க்கெல்லாம் வேண்டுவன நல்கும் அருள் வடிவினளாய் விளங்கும் அன்னை காமாட்சியின் பேரெழிலை வர்ணித்துப் போற்ற வார்த்தைகள் போதாது. அந்த அன்னையின் திருவடித் தாமரைகளைத் தினமும் வணங்கி, அவளது பேரருளைப் பெற்று, துன்பங்களையெல்லாம் அகற்றி, இனிய நல்வாழ்வைப் பெறுவோமாக.

    ×