என் மலர்
நீங்கள் தேடியது "லக்னோ அணி உரிமையாளர்"
- தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று கொள்கிறோம்.
- உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி.
சென்னையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வியடைந்ததன் மூலம் லக்னோ அணி 2-வது முறையாக பிளே ஆப் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
இந்நிலையில் அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம் எனவும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் இருமுறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், இது போதாது.
தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று கொள்கிறோம். அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம். உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.