என் மலர்
நீங்கள் தேடியது "திருமணம் தகவல் மையம்"
- வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- செல்போனில் ‘வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சென்னை:
திருமண பந்தம் கை கூடுவதற்கு உறுதுணையாக இருக்கும் வரன் தேடும் இணையதளங்களிலும் 'ஆன்லைன்' மோசடி கும்பல் ஊடுருவி உள்ளது. இந்த இணையதளத்தில் புகைப்படம், வேலை, சம்பளம் போன்ற சுய விவரங்களை தவறாக பதிவிட்டு போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழ்நாட்டில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 379 புகார்கள் பதிவாகி உள்ளன.
இந்த மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது? இந்த மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு:-
திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்குகளுடன் ஊடுருவி உள்ள மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் குறியில் சிக்குபவர்களிடம் (மணப்பெண் அல்லது மணமகன்), நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று இனிக்க, இனிக்க பேசி வசியப்படுத்துவார்கள். திருமணத்துக்குபின்னர் நாம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவார்கள்.
அதன்பின்னர் அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் போலி முதலீட்டு இணையதள முகவரியை பரிந்துரை செய்வார்கள். மோசடி கும்பலின் மாய வலையில் சிக்கி பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு முதலில் லாபத்தொகையை தருவது போன்று நம்பிக்கையை உருவாக்குவார்கள். பெரிய தொகையை முதலீடு செய்யும் போது 'அபேஸ்' செய்து அனைத்து தொடர்புகளையும் தூண்டித்துவிட்டு திருமண தகவல் இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.
எனவே வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
செல்போனில் 'வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையை ஏற்று ஒரு போதும் பணத்தை முதலீடு செய்ய கூடாது.
இந்த மோசடி கும்பல் தங்கள் மோசடி திட்டத்துக்கு www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www.cityindexlimited.com போன்ற போலி முதலீட்டு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தவர்கள் 'சைபர் கிரைம்' போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பூங்கோதையின் வாட்ஸ் அப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தியை ஒன்று அனுப்பினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பூங்கோதைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் உள்ள கோவிந்த செட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவயோகி. இவரது மனைவி பூங்கோதை (வயது38). சிவயோகி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் காரணமாக பூங்கோதை காவேரிபட்டணத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக தனியார் திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் பூங்கோதையின் வாட்ஸ் அப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தியை ஒன்று அனுப்பினார். அதில் அவர் தான் துபாயில் வேலை செய்வதாகவும், பூங்கோதையை 2-வது திருமணம் செய்து கொள்ள தயார் என்று அனுப்பி வைத்தார். மேலும் தான் தற்போது துபாயில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும், டெல்லி விமான நிலையத்தில் தன்னை பரிசோதித்த சுங்க துறை அதிகாரிகள் தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணத்திற்கு அபராதம் விதித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய பூங்கோதை மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 500-யை அனுப்பியுள்ளார். அதன்பிறகு அந்த மர்ம நபரை அவர் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை பூங்கோதை அறிந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூங்கோதைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.