என் மலர்
நீங்கள் தேடியது "மின்சார ரெயில் சேவை"
- சோதனை ஓட்டம் நடைபெற்றபோது ஏ.சி. பகுதியில் அதிர்வு பிரச்சனை எழுந்தது.
- இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்றபோது ஏ.சி. பகுதியில் அதிர்வு பிரச்சனை எழுந்தது. இதையடுத்து அது சரி செய்யப்பட்டது. தற்போது ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் சேவையை தொடங்குவதற்காக தாம்பரம் பணிமனையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தபோது அதனுடன் சேர்த்து சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது தொடக்க
விழா நடத்தப்படவில்லை.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஏ.சி. வசதி கொண்ட 14 புதிய புறநகர் ரெயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன. ஆனால் அப்போதும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்கும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில் முதல் முறையாக இயக்கப்பட உள்ளது. தற்போது சிறப்பு விருந்தினரின் தேதிக்காக ரெயில் தொடக்க விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏ.சி. மின்சார ரெயில் சேவை, வழக்கமான மின்சார ரெயில்களை போல நாள் முழுவதும் இயங்காது. அதிகாலை 5.45 மணி முதல் காலை 10.30 மணி வரையும், பிற்பகல் 3.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் இயங்கும். நடுவில் 5 மணி நேரம் தாம்பரத்தில் பராமரிப்பு பணி நடைபெறும்.
தற்போது ஒரே ஒரு ஏ.சி. மின்சார ரெயில் மட்டுமே உள்ளதால் இந்த இடைவேளை விடப்படுகிறது. இந்த ஏ.சி. மின்சார ரெயில் மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், பொத்தேரி, பரனூர், உள்ளிட்ட 12 முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். இதற்கான கட்டணம் மெட்ரோ ரெயிலை போலவே ரூ.30 முதல் ரூ.50 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை :
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர் மார்க்கெட் - ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர் மார்க்கெட் - ஆவடி இடையே இரவு 11.30 மற்றும் 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்டிரல் இடையே இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* அரக்கோணம் - வேளச்சேரி இடையே அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் அரக்கோணம் மற்றும் சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி சென்னை கடற்கரை மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - வேளச்சேரி இடையே இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 9-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் கடற்கரைக்கு நள்ளிரவு 12.54 மணிக்கு வந்து சேருகிறது.
- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 47 சேவைகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில் சேவை உள்ளன. அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மின்சார ரெயில்கள் இடம் பெற்றுள்ளன.
அதிகாலை 3.55 மணிக்கு தொடங்கும் சேவை நள்ளிரவு 1 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 24 மணி நேரத்தில் 3 மணி நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் முழுவதும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில், மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை ஆகிய 4 வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மின்சார ரெயில்களின் சேவை மாற்றி அமைத்து ஒவ்வொரு ஆண்டும் கால அட்டவணை வெளியிடுகிறது. நேரம் மாற்றம், கூடுதல் ரெயில் சேவை போன்றவை இதில் முக்கியமாக இடம் பெறும்.
ஆனால் இந்த முறை மின்சார ரெயில்களின் சேவை குறைத்து அட்டவணை வெளியிட்டுள்ளது. 4 வழித்தடங்களிலும் சேவைகள் சற்று குறைக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரை இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில் தற்போது 8 சேவை குறைக்கப்பட்டு 116 சேவை இன்று முதல் செயல்பட்டிற்கு வந்தது.
கடற்கரை நிலையத்தில் அதிகாலை 3.55 மணி முதல் சேவை தொடங்குகிறது. இந்த ரெயில் தாம்பரத்திற்கு அதிகாலை 4.50 மணிக்கு செல்கிறது. இரவு 11.59 மணிக்கு கடைசி சேவையாக புறப்படும் மின்சார ரெயில் தாம்பரத்திற்கு நள்ளிரவு 12.54 மணிக்கு செல்கிறது.
இதே போல செங்கல்பட்டில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் கடற்கரைக்கு நள்ளிரவு 12.54 மணிக்கு வந்து சேருகிறது.
கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரெயில் சேவையும் 9 குறைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 70 ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 61 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. முன்பு இந்த சேவை 80 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 70 ஆக குறைக்கப்பட்டது.
அதிகாலை 4.10 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து முதல் சேவை தொடங்குகிறது. 4.55 மணிக்கு வேளச்சேரி சென்றடைகிறது. வேளச்சேரியில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு புறப்படும் ரெயில் 5.50 மணிக்கு கடற்கரை வந்து சேரும்.
இரவு 10.20 மணிக்கு கடைசி சேவையாக கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் வேளச்சேரிக்கு இரவு 11.05 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 11.35 மணிக்கு கடற்கரை நிலையம் வந்து சேரும். காலை மற்றும் மாலை பீக் அவர்ஸ் நேரத்தில் 10 நிமிடத்திற்கு வீதம் ஒரு பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. சாதாரண நேரத்தில் 20 நிமிடத்திற்கு ஒரு ரெயில் சேவை உள்ளது.
மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் 128 மின்சார ரெயில்கள் இக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 124 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மூர்மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு முதல் சேவை ஆவடிக்கு தொடங்குகிறது. இந்த ரெயில் நள்ளிரவு 1.05 மணிக்கு ஆவடியை சென்றடைகிறது.
அதே போல பட்டாபிராமில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் ரெயில் மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 4.25 மணிக்கு வந்து சேரும். இரவு 11.45 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரெயில் ஆவடிக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு செல்லும். இதுவே கடைசி சேவையாகும்.
இதே போல திருத்தணியில் இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரெயில் நள்ளிரவு 12.20 மணிக்கு மூர் மார்க்கெட் வந்து சேரும்.
கடற்கரையில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் முதல் ரெயில் காலை 6.25 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும். கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயில் மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.20 மணிக்கு வந்து சேரும். இரவு 11.20 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரெயில் நள்ளிரவு 1 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும்.
இரவு 9.40 மணிக்கு சூலூர்பேட்டையில் இருந்து புறப்படும் ரெயில் மூர்மார்க் கெட்டுக்கு 11.45 மணிக்கு வந்து சேரும்.
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 47 சேவைகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய அட்டவணைப்படி மொத்தம் 620 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பு இருந்ததை விட சேவை சற்று முன்னதாக தொடங்கப்பட்டுள்ளது. கடைசி சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
- மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயில்கள் ரத்து.
- 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
தாம்பரம் ரெயில்வே யார்டில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மின்சார ரெயில் போக்குவரத்தில் பெரும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் சில விரைவு ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் சில வெளி மாநில ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.
எனவே இந்த ரெயில்களின் மாற்றங்கள், புறப்படும் இடம், நேரம் பற்றிய தகவல்களை பயணிகள் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அந்த உதவி எண்கள் வருமாறு:-
044-25354995, 044-25354151 இந்த எண்களில் 24 மணிநேரமும் பயணிகள் தொடர்பு கொள்ளலாம். நாளை மறுநாள் (18-ந் தேதி) வரை இந்த உதவி எண்கள் செயல்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
- சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு.
- கடற்கரை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கும், திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் திங்கள்கிழமை (16-ந்தேதி) ரத்து செய்யப்படும்.

கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் செவ்வாய்க்கிழமை (17-ந் தேதி) ரத்து செய்யப்படும்.
மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் 16-ந் தேதி ரத்து செய்யப்படும்.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூருக்கு இரவு 8.05 மணிக்கு மேல் புறப்படும் ரெயில்கள் அனைத்தும் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.
அதுபோல் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு வரும் ரெயில்கள் எழும்பூருடன் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து.
- திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து.
சென்னை,
அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் 18-ந்தேதி மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையில் (2 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து இன்று மற்றும் 18-ந்தேதி காலை 10, 11.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில்கள் அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக திருத்தணியில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.35, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.
- பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள்
சென்னை:
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் 3-ந் தேதி சென்னைக்கு புறப்படுவார்கள்.
தென் மாவட்டங்கள் மற்றும் இதர பகுதியில் இருந்து புறப்பட்டு வரும் அரசு, தனியார் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து சென்னையில் பல்வேறு இடங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்க உள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து 2 நாட்களில் 4 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். இது தவிர அரசு பஸ்களிலும் லட்சக் கணக்கானவர்கள் சென்று இருப்பதால் 4-ந் தேதி அதிகாலையில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்புவதால் காட்டாங்கொளத்தூர்-தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் வசதிக்காக அதிகாலை 4 மணி முதல் காலை 6.20 வரை கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
4.30 மணி, 5 மணி, 5.45 மணி 6.20 மணிக்கு காட்டாங்கொளத் தூரில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படும் மின்சார ரெயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய நிலையங்களில் இருந்து மின்சார ரெயில் நின்று செல்லும்... அதே போல தாம்பரத்தில் அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு இரண்டு சிறப்பு மின்சார ரெயில் காட்டாங்கொளத்தூருக்கு இயக்கப்பட உள்ளது.
- R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
- டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
R-Wallet என்பது UTS (முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் முறை) மொபைல் பயன்பாட்டில் உள்ள வாலட் அம்சமாகும்.
இது இந்திய ரெயில்வே பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கவும், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் பணம் செலுத்தவும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ரெயில் பயணிகள் R-Wallet பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்) மூலம் டிக்கெட் எடுத்தால் 3% கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, ஆப் மூலம் எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
UTS மொபைல் செயலியில் உள்ள R-Wallet அல்லது ATVM மூலம் டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் அறிவிப்பு.
- முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை.
தாம்பரம் - கடற்கரை இடையே நாளை காலை 7 முதல் மாலை 4 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால், கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ள்து.
இதுகுறித்து சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
05.01.2025 அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் New Foot Over Bridge பணிகள் நடைபெற இருப்பதால் காலை 07.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரெயில்கள் பல்லாவரம் வரையும், அதேபோல் செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் காலை 11.00 மணி முதல் மாலை 16.00 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையும் ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 05.01.2025 அன்று தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை மா.போ.கழகம் இயக்க உள்ளது.
மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொன்னேரி, எண்ணூர் வரை அதிகமான சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களால் பொது போக்குவரத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுவது மின்சார ரெயில்களே. அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு மின்சார ரெயில்களில் பயணம் செய்து பணிக்கு சென்று வருகின்றனர்.
மின்சார ரெயில்களால் பெரும்பாலும் நன்மை அடையும் மக்களுக்கு சில சமயங்களில் அசவுகரியங்களும் ஏற்படுகிறது.
அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் சீரமைப்பு பணி காரணமாக காலை 9.15 முதல் மாலை 3.15 மணி வரை ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பொன்னேரி, எண்ணூர் வரை அதிகமான சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.